என் மலர்
நீங்கள் தேடியது "PM CARES"
- நிதியின் நிர்வாகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ஈடுபடவில்லை.
- யாருக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா 2024 மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமரின் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் போது பி.எம்.கேர் நிதி நிறுவப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பிரதமரின் நிவாரண நிதியின் மீது ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதமர் நிவாரண நிதியின் உறுப்பினராக இருந்தார். இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ராஜீவ்காந்தி அறக்கட்டளை பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து நிதியைப் பெற்றது
பொதுத்துறை நிறுவனங்கள் கூட அறக்கட்டளைக்கு நிதி அளித்தன. அவர்களின் காலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிதியைப் பயன்படுத்துவதை ஆராய எந்தக் குழுவும் இல்லை.
மாறாக, பி.எம்.கேர் நிதியின் நிர்வாகத்தில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் உள்பட முதல் ஐந்து அமைச்சர்கள் அறங்காவலர்களாக உள்ளனர்.
5 செயலாளர்களைக் கொண்ட குழு அதன் செலவினங்களை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கிறது. பி.எம்.கேர் நிதி வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசி போன்ற முக்கியமான COVID-19 உள்கட்டமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டது.
நிதியின் நிர்வாகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ஈடுபடவில்லை. யாருக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
காங்கிரஸ் கட்சி அதன் முந்தைய நிதி மேலாண்மை நடைமுறைகளை விளக்குமா என சவால் விடுத்தார்.
- மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது
- பாஜக அரசின் PM CARES திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது
உலகத்தை உலுக்கிய கொரோனா தொற்று இந்தியாவுக்கும் மறக்க முடியாத இழப்புகளை விட்டுச்சென்றது. மக்கள் கொத்துக்கொத்தாக இறந்த நிலையில் அனைவரையும் மொத்தமாக குழிதோண்டிப் புதைத்த அவலங்களும் நிகழ்ந்தது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை யாரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு மக்கள் சாரை சாரையாக வரிசையில் காத்துக்கிடந்தனர்.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து நின்றன. இறப்புகளை தடுக்க முடியாமல் அரசாங்கங்கள் திணறியது. ஒருவாறாக தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பிய நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் நிலையோ இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. உலகின் வெவ்வேறு அரசாங்கங்கள், சமூக அமைப்புகள் அவர்களுக்கான முன்னெடுப்புகளை செய்து வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கொரோனாவில் பெற்றோர்களை இழந்து அனாதைகளான குழந்தைகளுக்கான PM CARES திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 51 சதவீத விண்ணப்பங்களை மத்திய அரசு நிராகரிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அரசு நன்கொடையும் வசூலித்தது. கல்வி உதவித் தொகை, 23 வயதை எட்டும் போது ரூ.10 லட்சம் நிதி, சுகாதார காப்பீடு மூலம் ஆகியவை இத்திட்டத்தின்மூலம் கிடைக்கும் பலன்கள் ஆகும். பி.எம். கேர்ஸ் திட்டம் மார்ச் 11, 2020 முதல் மே 05, 2023 வரை கொரோனா தோற்றால் பெற்றோர் அல்லது கார்டியனை இழந்தோர் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டிடத்தின் கீழ் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது மீதமுள்ள 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
18 விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் நிலுவையில் உள்ளன. நிராகரிப்புக்கு எந் காரணமும் அரசு தரப்பில் தெரிவைக்கப்படவில்லை. முன்னதாகபாஜக அரசின் PM CARES திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதுகுறிப்பிடத்தக்கது.
- 2020-21-ம் ஆண்டில் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு 7,184 கோடி ரூபாய் பங்களிப்பு மூலம் கிடைத்தது.
- 2022-23 பங்களிப்பு 912 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிவாரண நிதி( Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations (PM CARES)) விருப்பமுள்ளவர் முடிந்த தங்களது பங்களிப்பை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. பேரிடர் போன்ற இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது பிரதமர் கேர்ஸ் நிதியில் இருந்து நிதி வழங்கப்படுவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் தொற்றுக்குப் பிறகு மார்ச் 2020-ல் பொது தொண்டு அறக்கட்டளையாக தொடங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு 7,184 கோடி ரூபாய் பங்களிப்பு மூலம் கிடைத்தது.
2021-2022-ல் பங்களிப்பு 1,938 கோடியாக ரூபாயாக குறைந்தது. 2022-23 பங்களிப்பு 912 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. பிரதமர் கேர்ஸ் நிதி இணைய தளத்தில் இருந்து இந்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதேபோல் வெளிநாட்டு நிதி பங்களிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. 2020-21-ல் 495 கோடி ரூபாயாக இருந்தது. அதன்பின் 40 கோடியாக குறைந்த நிலையில் 2022-23-ல் 2.57 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
2022-23-ல் மொத்த செலவு 439 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் குழந்தைகள் பராமரிப்பு திட்டத்திற்கு 346 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. கொரோனா தொற்றின்போது பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமயைில் ஆக்சிஜன் நிலையம் மற்றும் வென்டிலேட்டர் போன்றவை வாங்குவதற்காக பிரதமர் கேர்ஸ் நிதியில் இருந்து பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
2021-22-ல் ஆக்சிஜன் நிலையம் அமைப்பதற்கு மட்டும் 1703 கோடி ரூபாய் இந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. 835 கோடி ரூபாய் வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு செலவழிக்கப்பட்டள்ளது.
2022-23-ல் பிரதமர் கேர்ஸ் நிதியில் 6283 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது என இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.