என் மலர்
நீங்கள் தேடியது "Yellow Bag"
- கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சிவன்மலை கிராமத்தில் உள்ள கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப–பட்டது.
நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா தேவி, ராகவேந்திரன், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி , துணை தலைவர் சண்முகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், காங்கயம் அரசு கலை கல்லூரி மாணவ - மாணவிகள், பொதுமக்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
- நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி உழவர் சந்தை வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.10 நாணயம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் தானிய இயந்திரம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை அல்லது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று துண்டு பிரசவங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவ ட்டத்தி லுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கள் , தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை நகர் மன்ற தலைவர் தலைமையில் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
சிவகங்கையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரண்மனை வாசல் முன்பு நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீசுவரி, துப்புரவு ஆய்வாளர் கண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், வீனஸ்ராமநாதன்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி நெகிழி இல்லா தமிழகமாக மாற்றுவோம் என்று கூறினர்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
திருப்பூர்:
தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு பெரிய பள்ளிவாசலில் நம் பூமியில் முதலீடு செய்யுங்கள் என்ற மையகருத்தை வலியுறுத்தி வித்தியாசமான முறையில் நெகிழி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும், மஞ்சப்பைகளையும் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
மாணவ செயலர்கள் சுந்தரம், காமராஜ், ராஜபிரபு, பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் பெரிய பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் மக்களிடம் நம்மை தாங்கும் பூமியை பாதுகாப்பது நம் கடமை, இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், மூட்டை மற்றும் பொட்டலம் கட்டுவதற்கு நெகிழி பொருட்களை பயன்படுத்தக் கூடாது, பிளாஸ்டிக் குப்பிகளில் அடைக்கப்பட்டுள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது, உங்களுக்கே அது ஆபத்தை விளைவிக்கும், வீணாகும் உணவு மற்றும் காய்கறிகளை நெகிழி பைகளில் அடைத்து தூக்கி போடக்கூடாது, விலங்குகள் அதை சாப்பிட்டால் குடலடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும், எங்கு சென்றாலும் துணிப்பைகளை எடுத்துச் செல்லுங்கள், மலை மற்றும் வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் போது நெகிழி பைகளையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனசரகத்திற்குள் தூக்கி போடக்கூடாது, அது தீமைகளை விளைவிக்கும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி நெகிழி இல்லா தமிழகமாக மாற்றுவோம் என்று கூறினர். பிறகு 20க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இஸ்லாமியர்கள் போல் உடை அணிந்தும், மஞ்சப்பைகளையும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது.
- முகாமில் அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.
திசையன்வினை:
திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார். சரவணகுமார் வரவேற்று பேசினார்.
முகாமில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. பஜாரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கை பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், பஞ்சாயத்து செயலர் பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பூர்:
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். பிளாஸ்டிக்கை தவிர்த்து, துணிப்பைகளின் உபயோகத்தை பொதுமக்களிடம் மீண்டும் கொண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன் முதல்வர் அறிவித்த மஞ்சள் பை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து தொழில் துறையினர் கூறியதாவது:-
பிளாஸ்டிக் பயன்பாடு தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் இவற்றின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து மறையவில்லை. துணி பைகளின் பயன்பாடு அதிகரித்தால்பிளாஸ்டிக் பயன்பாடு தானாகவே குறைந்து விடும்.இதற்கு தமிழக அரசு அறிவித்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு இலவசமாக துணிப்பை வினியோகிப்பதன் மூலம் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும்.மேலும் துணி உற்பத்தி சார்ந்த நெசவாளர்கள், துணி உற்பத்தியாளர்கள், தொழிலாளர் உள்ளிட்டோர் இதன் மூலம் பயன்பெறுவர். இதனை செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.