என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாலை"

    • 2 பேர் படுகாயம் அடைந்தனர்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே ஆர்சி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 48). அவருடைய நண்பர் அதே பகுதியை சார்ந்த பாஸ்கர்.

    இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் மார்க்கெட் டில் சுமை தூக்கும் தொழி லாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அதிகாலையிலே வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இரு சக்கர வாகனம் திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.பேருந்து திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நண்பர்கள் இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 2 பேரும் சாலை யில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் படுகா யமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் 2 பேரும் விபத்தில் சிக்கி படுகாய மடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கன்னியாகுமரி:

    108 வைணவத் திருப்பதி களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆதிகேசவப் பெருமாள் பாம்பணை மீது சயன கோலத்தில் 3 வாயில்கள் வழியாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்

    ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மஹா கும்பாபிஷே கத்துக்குப் பின்னர் நடை பெறும் முதல் வைகுண்ட ஏகாதசி ஆகும். தற்போது கோவிலுக்கு தினமும் வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக உள்ளது.

    இன்று வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் வரிசையில் செல்வ தற்கு வசதியாக கோவில் பிரகாரத்தில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று இரவு 10 மணியளவில் கோவில் கருவறையின் வெளிப்பகுதி, உள்பகுதி, உதயமார்த்தாண்ட மண்டபம், சபா மண்டபம் ஆகிய இடங்க ளில் மலர்களால் அலங்க ரிக்கப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து அர்ச்சனா மூர்த்தி விக்கி ரகங்கள் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு கலச பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து 6.30 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கருவறையில் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் காலை 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை யும் நடைபெற்றது. அதன்பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் 3 வாயில்கள் வழியாக பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மதியம் 12.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்குத்தான் திறக்கப்படும். இன்று மதியம் 12 மணி முதல் கோவிலில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாலையில் 6 மணிக்கு புஷ்பாபிஷேகம் 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியன நடை பெறுகிறது. தீபாராதனையை தொடர்ந்து கோவில் விளக்கணி மாடத்தில் உள்ள விளக்கு களுக்கு ஒளியேற்றும் லட்சதீப விழா நடக்கிறது. அப்போது கோவில் ஒளிவெள்ளத்தில் ஜொலிப்பதைக்காணலாம். கருட வாகனத்தில் ஆதி கேசவப்பெரு மாளும், கிருஷ்ணசாமியும் கோவில் பிரகாரத்தில் பவனி வருதல் நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசியான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார் தலைமையில் நிர்வாகத்தினரும், பக்தர்க ளும் இணைந்து செய்து உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது.
    • இன்று அதிகாலை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது

    தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் 23-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வெயில் தாங்காமல் சென்னை வாசிகள் சில்லென இருப்பதற்கு சுற்றுலா தளத்திற்கு சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது தற்பொழுது சென்னையே குழுகுழுவென்று மாறிக் கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே அப்பப்ப மழை பெய்த வண்ணம் தான் உள்ளது. மற்ற தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருவதால்  சென்னையில் வானம் மந்தமாகவும் மேக மூட்டதுடனே காணப்படுகிறது. இவ்வளவு நாள் சுட்டெரித்த வெயிலிற்கு அடுத்து  மழை பெய்வதால் சென்னை மக்களுக்கு சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    இன்று அதிகாலை சென்னையில் பெருமபாலான இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

    • வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

    கடந்த சில நாட்களாகவே அசாம், மணிப்பூர் ஆகிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் கரைப்புரண்டு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாலைவட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

    இந்நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நில நடுகத்தினால் எந்த பாதிப்பும் மக்களுக்கோ பிற கட்டடங்களுக்கோ இதுவரை இல்லை.

    குமாரபாளையத்தில் அதிகாலை ஆவின் பாக்கெட் பாலை திருடிய சிறுவன் சிக்கினான்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.ஓ.என். தியேட்டர் பகுதியில் ஆவின் பால் விற்பனை செய்து வருபவர் சதாசிவம் (வயது 65). இவர் பல வருடங்களாக பால் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஆவின் ஊழியர்கள் நள்ளிரவில் பால் பாக்கெட் பெட்டிகளை ஒவ்வொரு முகவர் வீடு மற்றும் கடைகளின் முன்பு வைத்து செல்வது வழக்கம். அதன்படி  சதாசிவம் கடை முன்பும் ஆவின் பாக்கெட் பெட்டிகள் வைத்து விட்டு செல்வார்கள். 

    இந்த நிலையில் தொடர்ந்து பால் பாக்கெட் திருடப்பட்டு வந்தது. ஆவின் ஊழியர்கள் கடை முன்பு பெட்டிகளை வைத்து விட்டு சென்ற பிறகு மர்ம நபர், அங்கு வந்து பால்பாக்கெட்டுகளை திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இது குறித்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பார்த்த போது ஒரு சிறுவன் அதிகாலை நேரத்தில் அங்கு வந்து  பால்  பாக்கெட்டுகளை திருடி செல்வதும், அந்த சிறுவன் நாராயண நகர் பகுதியை சேர்ந்தவன் என்பதும்  தெரியவந்தது.
    ×