என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசாருக்கு"

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    • போலீசாருக்கான வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணி இணையதளத்தின் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்க ப்பட்டுள்ளது

    தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 105 ஏட்டுகள், 51 முதல் நிலை போலீசார் மற்றும் 82 போலீசார் என மொத்தம் 238 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளான வரும் 27-ந் தேதி கிழக்கு தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணி யில் ஈடுபடும் போலீசாருக்கான வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணியினை இணைய தளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த பணியை தொகுதி காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ், மாவட்ட வருவாய் சந்தோஷினி சந்திரா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேலும் 238 போலீசாருக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதி களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணியினை இந்தியதேர்தல் ஆணையத்தின் இணை யதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது கணேஷ், தாசில்தார் (தேர்தல்) சிவகாமி, கணினி நிரலாளர் வெங்கடேஷ் உள்படபலர் கலந்து கொண்டனர். 

    • போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா (தெற்கு), கவுதம் கோயல் (வடக்கு), கூடுதல் கமிஷனர் ரவிசந்திரன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மனநல டாக்டர்கள், விவேகானந்தன், தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று மன அழுத்தத்தை போக்குவதற்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

    சேலத்தில் போலீசாருக்கு டிமிக்கி காட்டிய தக்காளி திருடனை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 26). இவர் பெருமாகவுண்டம்பட்டி, சஞ்சீவிராய பெருமாள் கோவில் அருகே காய்கறி கடை வைத்துள்ளார். இவருக்கு தக்காளி பார்சல் இறக்குபவர்கள் 26-ந்தேதி அதிகாலையில் 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டி இறக்கி வைத்துள்ளனர். 

    இந்நிலையில் கடை உரிமையாளர் சங்கர், வழக்கம்போல் காலையில் கடையை திறக்க வந்த போது ஒரு கிரேடு தக்காளி பெட்டி மட்டுமே வெளியே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

    இதையடுத்து சிசிடிவி கேமராவை பார்த்த போது ஒருவர் மொபட்டில்  தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது. அந்த நபர் , மொபட்டில் வந்து கடை முன்பு நின்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தக்காளியை கிரேடுடன் எடுத்து, கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அந்த சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 

     இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர், புகார் கொடுத்தார். புகாரின் பேரில் எஸ். ஐ. ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து தக்காளி திருடனை தேடிவந்தனர். அந்த மர்ம நபர்   போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்தார்.இதனிடையே இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனதும், இதனால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதும் தெரியவந்தது.

    சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்த வண்டி நம்பரை வைத்து விசாரணை செய்ததில், அவர் வெண்ணந்தூர் தங்கசாலை வீதி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்ராஜ் (வயது32) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே செவ்வாய்ப்ேபட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில்  வெளியே வந்த நிலையில், மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைப் பகுதியில் தக்காளி திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

    இதனை அடுத்து தக்காளி திருடிய சின்ராஜை போலீசார் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    ×