என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கிய"

    • பிடித்து வந்த மீன்களுடன் வலையில் ஆமை ஒன்று சிக்கி இருப்பதை கண்டார்.
    • தனது படகுமூலம் எடுத்துச் சென்று அரிய வகை ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டு வந்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள அண்ணா நகர் புது தெரு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன பிள்ளை மகன் ராஜா.

    இவர் புதன்கிழமை நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பினார். அப்போது தான் பிடித்து வந்த மீன்களுடன் வலையில் ஆமை ஒன்று சிக்கி இருப்பதை கண்டார்.

    சக மீனவர்களுடன் ஆமை உயிருடன் இருப்பதை உறுதி செய்தார்.

    உடனடியாக தனது படகுமூலம் எடுத்துச் சென்று அரிய வகை ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டு வந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்து றையினர் மீனவர் ராஜாவை பாரா ட்டினர்.

    கடல்வாழ் அரிய வகை உயிரினங்களான கடல் குதிரை, கடல் அட்டை, கடல் ஆமை ஆகியவற்றை பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கன்டெய்னர் லாரிக்குள் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் வெளியே எடுத்தனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் தியேட்டர் பின்புறம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பவானி செல்லும் வாகனங்கள் வளைவில் திரும்பி செல்வது வழக்கம். நேற்று மாலை ஒரு கன்டெய்னர் லாரி  இந்த பகுதியில் வளைந்து பவானி செல்ல திரும்பியது. 

    அப்போது சேலம் பக்கமிருந்து வந்த கார்  லாரியின் கீழ் பகுதிக்குள் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் இல்லை. இதனால் அந்த பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் 45 நிமிடத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  

    இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து நேரில் சென்றனர். மீட்பு வாகனம் மூலம் காரை வெளியில் எடுத்து, போக்குவரத்தை சீர் செய்தனர்.
    ×