என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sami"

    • சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வருகிற 26-ந்தேதி ஆனித் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • அன்று காலை நடராஜர் மற்றும் அம்மனுக்கு அனைத்து விதமான சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பூஜைகள், 4 வீதிகளில் சாமி திருவீதி உலா நடைபெறும்.

    சேலம்:

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வருகிற 26-ந்தேதி ஆனித் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை நடராஜர் மற்றும் அம்மனுக்கு அனைத்து விதமான சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பூஜைகள், 4 வீதிகளில் சாமி திருவீதி உலா நடைபெறும்.

    இதேபோன்று சேலம் ராஜ கணபதி கோவிலில் வருஷா பிஷேகத்தை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி காலை முதல் மாலை வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. இதையடுத்து 26-ந்தேதி காலை 6 முதல் 7.30மணி வரை மகா கணபதி ஹோமம் நடைபெற்று 54 திரவியங்களால் அபிஷேகம் நடைப்பெற உள்ளது.

    இதனைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள், கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம்:

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தங்க கவசம்

    சேலம் கோட்டை மாரி யம்மன் கோவிலில் அம்ம னுக்கு தங்க கவச அலங்கா ரம் செய்யப்பட்டது. பக்தர் கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ், பிரசாதம் வழங்கப்பட்டது.

    சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திர வியங்களால் சிறப்பு அபி ஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்ம னுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை காண அப்பகுதி யில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

    தாலி கயிறு

    இதேபோல எல்லை பிடாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தாலி கயிறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மந்திரங்கள் ஓத அர்ச்ச னைகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ரத்தின அங்கி

    நெத்திமேடு தண்ணீர் பந்தல் மகா காளியம்மன் கோவிலில் ரத்தின அங்கி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    இதே போல சேலம் மாநகரில் அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனை காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்யம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    காளிப்பட்டி ஸ்ரீ வீரகாரன் புடவைக்காரி அம்மன் கோவிலில் மறுபூஜை விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    ஆட்டையாம்பட்டி:

    காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் அருகில் வீரகாரன் சுவாமியும், காளிப்பட்டி சந்தை எதிரே ஸ்ரீ புடவைக்காரி அம்மன் சாமியும் உள்ளது. 

    இக்கோவில்களில் தெவ மறுபூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், குலதெய்வ கோவில் பங்காளிகள் கிடா, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முன்னதாக ஸ்ரீ வீர காரன் சுவாமிக்கும் ஸ்ரீ புடவைக்காரி அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு மலர்அலங்காரம் நடைபெற்றது. 

    இதில் முத்தனம் பாளையம், தப்பகுட்டை, ஆட்டையாம்பட்டி, திருமலகிரி செம்மன் திட்டு, இளம்பிள்ளை சிவதாபுரம், கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி, அக்கர பாளையம், வீராணம், வேடப்பட்டி, கே ஆர் தோப்பூர், சேவாம்பாளையம், உடையாப்பட்டி, மெய்யனூர், அழகாபுரம், பொண்பரப்பிபட்டி உள்பட குலதெய்வ கோவிலுக்கு பாத்தியப்பட்டகோவிலுக்கு பாத்தியப்பட்ட வன்னியர் குல மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் கோயில் பங்காளிகள், பூசாரிகள் ஆகியோர்  செய்தனர்.
    பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
     
    அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர், அரசாயி அம்மன், மாசாணி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு வைகாசி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லை யம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு வைகாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு பல வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உலக மக்கள் நலம் வேண்டி அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்காக ஏகாம்பரநாதருக்கு தொடர்ச்சியாக நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டது.
     
    அதனுடன் சிறப்பு அலங்காரத்துடன், நந்திபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.   இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    ×