என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Legal"

    • சிவகங்கை நாலுகோட்டை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டஉதவி மையம், சிவகங்கை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுகள் இணைந்து சிவகங்கை வட்டம் நாலுகோட்டை கிராமத்தில் மனித உரிமைகள் கருத்தரங்கு மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவை பற்றி விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது.

    மாவட்ட வக்கீல் சங்க செயலர் சித்திரைசாமி, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியில் ஆய்வாளர் கண்ணதாசன், நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் பேசினர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராணி நன்றி கூறினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், மஞ்சுளா, செல்வி, பெண் காவலர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    • இலவச சட்ட உதவி முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    முக்குளத்தூர் தாலுகா வெங்கலகுறிச்சி கிராமத்தில் இலவச சட்ட உதவி முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி டி.ராஜகுமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜசேகர், ஆனையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக் கண்ணன் (கி.ஊ), ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர், வக்கீல் சங்க செயலாளர் சிவராமகிருஷ்ணன், வக்கீல் சந்திரேசேகர், கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளி, ஊராட்சி செயலர் பொன்மணி உள்பட வெங்கலகுறிச்சி, தொட்டி வலசை, கருங்கலக்குறிச்சி, திருவாக்கி, கிருஷ்ணாபுரம், கீழப்பனையடியேற்தல் ஆகிய கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாமில் நீதிபதி டி.ராஜ்குமார் பேசும்போது, பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க இலவச சட்ட உதவி முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.

    குமாரபாளையத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குமாரபாளையம் செந்தூர் பவுண்டேசன் ஆகியவை  சார்பில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் செந்தூர் பவுண்டேசன் இயக்குனர் கலாவதி தலைமையில் நடந்தது. 

    இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலர் விஜய்கார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல் பங்கேற்று இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். பெண்களுக்கான சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில்கள் கூறினார்கள். 

    இதில் விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சாலைகளில் விபத்து இல்லாமல் நாம் எப்படி பயணம் செல்லலாம் எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய  உதவிக்குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் பரிசும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. இதில் இணை செயலர் மணிகண்டன், விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பூபதிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ×