என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students fear"

    • ஜெயங்கொண்டம் அருகே அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சிதிலமடைந்த மேற்கூரை பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து மாணவர்கள் மீது விழுவதாக புகார் எழுந்துள்ளது
    • ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பாறையில் அமர வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிலால் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.

    கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 56 மாணவிகளும், 35 மாணவர்களும் என மொத்தம் 91 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாகவே பள்ளியின் வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி கீழே பெயர்ந்து விழுந்து வருகிறது.

    மேலும் பள்ளியைச் சுற்றி குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளதோடு, அதில் கொசுக்கள் உற்பத்தியாக பல்வேறு தொற்று நோய்களுக்கும் வழிவகுக்கிறது.

    இது குறித்து பள்ளி நிர்வாகம் சட்டமன்ற உறுப்பினர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தும், நேரில் சென்று தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில்உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பள்ளியின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் மீண்டும் உதிர்ந்து விழுந்துள்ளது. மேலும் அனைத்து வகுப்பறைகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

    அதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறையில் தண்ணீர் தேங்கி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வகுப்பறையில் தேங்கியிருந்த தண்ணீரை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் சேர்ந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பாறையில் அமர வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தனர்.

    மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் பள்ளியின் மேற்கூரை பூச்சுகள் கீழே விழாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது சிமெண்டு பூச்சு உடைந்து விழும் நிலையும் உள்ளதால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் பள்ளியில் கட்டிடம் பெரும் அளவில் சேதம் அடைந்து உள்ளதால் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் பாம்புகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • தெருவிளக்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ராமநாதபுரம் அரசு மருத் துவ கல்லூரி மாணவர்கள், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் படிக் கின்றனர்.

    இவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இவர்கள் கல்லூரிக்கு வரும் சாலை யில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதில்லை. கல்லூரியை ஒட்டி உள்ள பகுதிகள் புதர்கள் நிறைந்த பகுதியாக காட்சி அளிக்கி றது.

    இதனால் அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி சாலை யில் 2 பாம்புகள் சென்ற தால் மாணவர்கள் அச்ச மடைந்தனர். சில நாட்க ளுக்கு முன் கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சென்றுள்ளது. மருத்துவ கல்லூரி பகுதியில் பாம்பு கள் படையெடுக்கும் நிலை ள்ளது.

    மேலும் விஷ பாம்பு மற்றும் ஜந்துகளால் மாண வர்களுக்கு ஆபத்து உள் ளது. அதிகாலையில் இப் பகுதியில் நடை பயிற்சி செய்வோரும் அச்சமடைந் துள்ளனர். அப்பகுதியில் மாணவர்கள் அச்சமின்றி சென்று வர தெரு விளக்கு கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மருத்துவ கல்லூ ரிக்கு செல்லும் சாலை முழுவதும் விளக்குகள் அமைத்து உயிர் காக்கும் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாண வர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது.
    • மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டையில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பள்ளி முடிந்ததும் மாலையில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடுவது வழக்கம்.

    நேற்று மாலையும் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வழக்கம் போல பள்ளியில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடினர். மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்.

    பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்த நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று பள்ளி மைதானத்திற்குள் நுழைந்தது.

    யானை வேகமாக வருவதை பார்த்ததும், விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். பின்னர் வகுப்பறைகளில் சென்று பாதுகாப்பாக இருந்து கொண்டனர்.

    சிறிது நேரம் யானை மைதானத்திலேயே வலம் வந்தது. அதன்பின்னர் யானை அங்கிருந்து வெளியேறி வனத்திற்குள் சென்றது. யானை சென்ற பின்னரே மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    காட்டு யானை மைதானத்திற்குள் நுழைந்ததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கட்டி முடித்து ஓராண்டே ஆன நிலையில் தருமபுரி சட்டக்கல்லூரி உடைந்து விழும்பிளைவுட் மேற்கூரையால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடந்த காலங்களில் தமிழகத்திலேயே கல்வி வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வந்தது. உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் சதவீகிதம் மிக மிக குறைவாக தான் இருந்தது. 

    ஆகையால் தமிழக அரசு தருமபுரி மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்ட கல்லூரி, பால்டெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியியல் கல்லூரி என அனைத்து தரப்பட்ட கல்லூரிகளும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்திற்கு கடந்த 25.05.2017 ம் ஆண்டு சட்ட கல்லூரி தொடங்கப்படும்  என அ,தி,மு,க தலைமையிலான அரசு அறிவித்தது. இக்கல்லூரி டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை கழகத்துடன் இணைந்து செயல்படும் எனவும் அறிவிக்கபட்டது.   

    இந்நிலையில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி பகுதியில் விடுதியுடன் கூடிய 7.75 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 69 கோடியே 29 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டி கடந்த ஆண்டு முதல் வகுப்புகள் துவங்கபட்டது. இக்கல்லூரியில் 1500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

     இந்நிலையில் கட்டி முடிக்கபட்டு ஓர் ஆண்டு நிறைவுற்ற நிலையில்,  மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழை மற்றும் சூறாவளி காற்றுக்கு கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள பிளைவுட் மேற்கூரை  அனைத்தும் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளே நுழையவே அச்சப்படுகின்றனர்.

    இந்நிலையில் பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன் தமிழக அரசு சட்ட கல்லூரியை தரமில்லாமல் கட்டிய ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் புதுப்பித்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×