என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டல் மண்"

    • நஞ்சை நிலங்களை மேம்படுத்த ஏக்கர் நிலத்திற்கு 75 கனமீட்டர் அளவு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மண்பாண்ட தொழிலுக்காக 60 கனமீட்டர் அளவு கட்டணமில்லாமல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண்,களிமண் வெட்டி எடுப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட விவசாய பயன்பாட்டிற்காக நஞ்சை நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கனமீட்டர் அளவும் மற்றும் புஞ்சை நிலங்களை மேம்படுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 90 கனமீட்டர் அளவும். மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கனமீட்டர் அளவும் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு 30 கனமீட்டர் அளவும் கட்டணமில்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இச்சலு கையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாயம் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா அடங்கல், கிரைய பத்திரம் மற்றும் புலப்படநகல் ஆகியவற்றுடனும், மேலும் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்று களுடனும், சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
    • விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

    ஆலங்குளம்:

    விவசாய மேம்பாட்டுக்காக குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்து ள்ளது. இதற்கு மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வரவேண்டும் என்ற விதி உள்ளது.

    அதேபோல் விவசாயம், மண்பாண்டம் தயாரித்தல் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு விவசா யிகள் இலவசமாக மண் எடுத்து செல்லலாம் எனவும் அரசு விதி வகுத்து ள்ளது.

    மேலும் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவல ர்களால் மண் வெட்டி எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து மட்டுமே மண் வெட்ட வேண்டும். விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் இருந்து கடந்த ஒரு வார காலமாக வண்டல் மண் வெட்டி எடுத்துச் செல்லப்ப டும் நிலையில், அந்த வாகன ங்கள் எவ்வித விதிகளையும் பின்பற்றுவ தில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.

    தனி நபர் ஒருவர் உரிய அனுமதி பெற்றுள்ள நிலையில் சுமார் 15 ஜே.சி.பி. வாகனங்கள், சுமார் 100 டிராக்டர்களை கொண்டு அதிக அளவு வண்டல் மண் எடுக்கப்படுகிறது எனவும், அந்த வாகனங்கள் சாலை களில் அதிவேகத்தில் செல்லும்போது வண்டல் மண் கட்டிகள் சாலையில் விழுவதால் விபத்து அபாயம் இருப்பதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவிக்கி ன்றனர்.

    விவசாயத்திற்கு, மண்பா ண்டம் செய்ய, வீட்டு சொந்த உபயோ கத்திற்கு மட்டுமே பயன்படு த்தப்பட வேண்டிய மண், வர்த்தக ரீதியாக டிராக்டர் லோடு ஒன்று ரூ. 700 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை செய்யும் அரசியல் பிரமுகர்களுக்கு சில அதிகாரிகளும் உடந்தை யாக இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு மண் எடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலக்தில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் தற்போது பொது ப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி த்துறை வசம் அனுமதி பெற்றாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே அதிக முறைகேடு உருவாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே கலெக்டர் நேரடி விசாரணை நடத்தி, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து தகுதியான விவசாயிகள் மட்டுமே குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

    • பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையத்தில் அரசின் சார்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது.
    • திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலமாக நீர் நிரப்ப தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு செயலாளர் அப்புசாமி அளித்த மனுவில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலமாக நீர் நிரப்ப தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளில் சீமை கரு–வேல மரங்கள், முட்புதர்களை அகற்றி, வண்டல் மண் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு மண் அள்ளி தூர்வாரும்போது குளம் ஆழப்படுத்தப்படும்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருவதால் வண்டல் மண் எடுத்து ஆழப்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இடைத்தரகர்கள் மண் அள்ளாமல் இருக்க அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையத்தில் அரசின் சார்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    • மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
    • நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டன.

    காஞ்சிபுரம்:

    விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ள ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுனை ஏரியில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் தொழிலாளர்களுக்கு கட்டணமின்றி ஏரிகளில் இருந்து களிமண் எடுத்துச் செல்வதற்கான ஆணைகளை வழங்கி மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    இதில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் ஆறுமுக நயினார், உதவி இயக்குனர் இளங்கோவன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டனர்.

    கடந்த காலங்களைப் போல அனைத்து பகுதிகளிலும் மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    நீர்நிலைகள் விவசாய நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் மண் மற்றும் வண்டல் மண் எடுப்பதற்கான விதிமுறைகளில் தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் விவசாயப் பயன்பாட்டுக்கு இலவசமாக மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலதாமதம் அதன்படி வண்டல் மண் எடுப்பதில் பல சிரமங்கள் உள்ளது.

    அதன்படி ஒரு வருவாய் கிராமம் அல்லது அதை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு மட்டுமே மண் எடுத்துச் செல்லலாம். இதனால் நீர் நிலைகள் இல்லாத பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே கடந்த காலங்களைப் போல அனைத்து பகுதிகளிலும் மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். மேலும் தற்போது மண் அள்ள மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டியதுள்ளது.

    2017 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது போல தாசில்தார் மட்டத்தில் அனுமதி அளித்தால் காலதாமதம் மற்றும் அலைச்சல் இல்லாமல் விவசாயிகள் பலனடைய முடியும். அத்துடன் விவசாயிகள் நலன் கருதி, மண் அள்ளுவதற்கு விவசாயிகளே ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை ஏற்பாடு செய்து கொள்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×