என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "portrait"

    • பாரம்பரிய வேளாண்மையை முன்னெடுப்போம்.
    • சுமார் 5 மணி நேர உழைப்பில் நம்மாழ்வார் உருவப்படத்தை வரைந்தனர்.

    தஞ்சாவூர்:

    இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 85 -வது பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்று மணலில் நம்மாழ்வார் உருவப்படத்தை இலை தழைகள், பூக்களால் மணலில் வரைந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் , அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் மாரியப்பன் ஆகியோர் துணையோடு மாணவர்கள் நம்மாழ்வார் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்தனர்.

    மேலும் வரையப்பட்ட நம்மாழ்வார் உருவப்படம் முன்பு மரம் வளர்ப்போம், சுற்றுச்சூழலை காப்போம் , சிறுதானிய உணவு வகைகளை உண்போம், பாரம்பரிய வேளாண்மையை முன்னெடுப்போம்.

    பிளாஸ்டிக்கை அறவே தவிர்ப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் சுமார் 5 மணி நேர உழைப்பில் நம்மாழ்வார் உருவப் படத்தை வரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி ஊட்டி அறிவாலய வளாகத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாநில விளையாட்டு மே்ம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ராஜா, காந்தல் ரவி, எல்கில் ரவி, கர்ணன், தேவராஜ், யோகேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், ஊட்டி நகர அவை தலைவர் ஜெய கோபி, துணை செயலாளர்கள் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்திக், வெங்கடேஷ், ராமசந்திரன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்னு, கஜேந்திரன், ரகுபதி, செல்வராஜ், கீதா, நாகமணி, மேரி பிளோரீனா, வனிதா, பிரியா வினோதினி, பிளோ ரீனா, மாவட்ட அணி சா ர்பில் மேத்யூஸ், செல்வராஜ், மூர்த்தி, ஜெயராமன், தருமன், மார்கெட் ரவி, அமலநாதன், மத்தீன், ஆட்டோ ராஜன், தியாகு, பௌ்ளன், ஜோகி, சிவகுமார், வெங்கடேஷ், பாபு, அபு, ரகமத்துல்லா, மஞ்சுகுமார், கிட்டான், விஜயகுமார், ஊட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், ராஜூ, காளி, மூர்த்தி, தொ.மு.ச நிர்வாகிகள் ஆனந்தன், சந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மொத்தம் 741 பண்டைய தமிழ் எழுத்துக்களால் உருவான அசத்தலான உருவப்படம். தமிழரை பாராட்டி ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ட்விட் வைரலாகி வருகிறது.


    தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனேஷ் என்ற நபர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் உருவ படத்தை மிக வித்தியாசமாக வரைந்து அசத்தி இருக்கிறார். 

    ஓவியத்தில் கணேஷ் பண்டைய தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். இதனை உற்று பார்க்கும் போது உருவப்படத்தில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே தெரியும். ஓவியத்தில் ஆனந்த் மஹிந்திரா உருவப்படத்தை வரைய கணேஷ் மொத்தம் 741 பண்டை கால தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கிறார்.

     ஆனந்த் மஹிந்திரா

    கணேஷ் இந்த உருவப்படத்தை வரைந்த போது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதில் ஆனந்த் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழும நிறுவனங்களையும் டேக் செய்து இருக்கிறார். இதை கவனித்த ஆனந்த் மஹிந்திரா கணேஷ் ட்விட்-ஐ ரி-ஷேர் செய்தார். மேலும் இந்த வரைபடத்தின் பிரேம் செய்யப்பட்ட நகலை தனக்கு வழங்குமாறு ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வரைபடத்தை தனது அறையில் வைத்து அலங்கரிக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

    இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில், “ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது, நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க  விருப்பபடுகிறேன்..” என குறிப்பிட்டு இருக்கிறார்.
    ×