என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arts College"

    • மகளிர் தின விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு பேசினார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கல்லூரி உள் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தீபாலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் டாக்டர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளருமான விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை தங்க செல்வி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாள் பீவி நன்றி கூறினார். கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வேலையா, உதவிப் பேராசிரியர் தனலெட்சுமி, பேராசிரியர் சிவக்குமார் மற்றும் கல்லூரியின் ஏனைய பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படுமா? என்று அந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மட்டுமின்றி, அருநூற்றுமலை, கல்வராயன்மலை கிராமங்கள், தர்மபுரி மாவட்டம் சேலூர், வேலனூர், பாலக்குட்டை, நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி பகுதி கிராம மக்களுக்கு முக்கிய மையமாக விளங்குகிறது.

    வாழப்பாடி பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து, பட்டம் பயில விரும்பும் மாணவ–மாணவியர், சேலம், ஆத்தூர் , ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. 

    தொலைதூரத்திலுள்ள கல்லுாரிகளுக்கு குறித்த நேரத்திற்குசென்று திரும்ப முடியாமலும், தனியார் கல்லுாரிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமலும் வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ–மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவியரது பட்டம் படிக்கும் எண்ணம் நிறைவேறாமல் கனவாகவே முடிந்து விடுகிறது.

    எனவே, வாழப்பாடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வாழப்பாடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 

    எனவே வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ–மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி  தொடங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து செயல்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×