என் மலர்
நீங்கள் தேடியது "Attacking"
- வில்லியனூரில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூரில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெட்டப்பாக்கம் அருகே பனையடி குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது34). இவர் வில்லியனூர் அருகே ஒதியம்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் பூமிநாதன் வேலைக்கு வந்து கொண்டிருந்தார்.
வில்லியனூர் உத்திர வாணி பேட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் பூமிநாதனை வழிமறித்தது. அவர்கள் கையில் வைத்திருந்த கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் பூமிநாதனை சரமாரியாக தாக்கினார்கள்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து பூமிநாதன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூமிநாதனை தாக்கிய 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.
- பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
- போலீசார் இளம்பெண்ணின் தந்தை ஜெகநாதன், சகோதரர் தங்கபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்
கோவை,
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் குமார் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர்.
இவருக்கும், சிவகாசியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் 9 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குமாருக்கு சிவகாசியை சேர்ந்த மற்றொரு பெண்ணு டன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்கா தலாக மாற 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர்.
இந்த விவகாரம் அவரது மனைவிக்கு தெரிய வரவே, அவர் கணவரை கண்டித்தார். ஆனால் அவர் கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இள ம்பெண் சிவகாசி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 2 பேரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து குமார் தனது மனைவியுடன் கோவைக்கு வந்து விட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமாரின் கள்ளக்காதலி, கோவைக்கு வந்துள்ளார். பின்னர் குமாரை தொடர்பு கொண்டு அழைத்தார். 2 பேரும் சந்தித்து பேசினர்.
இந்த விவகாரம் குமாரின் மனைவிக்கு தெரியவரவே மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, அவர் பெண்ணை தகாத வார்த்தை களால் திட்டியதுடன், தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து இளம்பெண் தனது மாமனாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மகனுக்கு சாதகமாக பேசினார்.
இதையடுத்து இளம்பெண் சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் குமார் மற்றும் அவரது தந்தை பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து இளம்பெண்ணின் கணவர் குமாரை கைது செய்தனர்.
இதற்கிடையே தனது மகனை, இளம்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் சேர்ந்து தகாத வார்த்தை களால் பேசி தாக்கியதாக குமாரின் தந்தை பரமசிவமும் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இளம்பெண்ணின் தந்தை ஜெகநாதன், சகோதரர் தங்கபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் 4-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் புவனேஷ் குமார். இவரது மனைவி சுகன்யா (வயது23). இவர்கள் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் யோகேசுவரன் என்ற நாகரத்தினம். இவ ரும், நண்பர்களும் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடி யில் மது அருந்தினர். போதை அதிகமான நிலையில் சுகன்யா வீட்டின் மாடியில் வைக்கப் பட்டிருந்த டிஸ் ஆண்ட னாவை உடைத்து கூச்சலிட்டுள்ளனர்.
இதை சுகன்யா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 7 அவர்கள் சுகன்யாவை ஆபாசமாக பேசி தாக்கினர்.
இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர்கள் டிஸ் ஆண்டனாவை உடைத்து சுகன்யாவை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து யோகேசுவரன் என்ற நாகரத்தினம், ஹரி கிருஷ்ணன்(19), தினேஷ் குமார்(22), ரியாஸ் அகமது (18), முகமது பரீத் (18) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.
- இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு போட்டு வருகிறார்.
- இது குறித்து இளம்பெண் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி விட்டது.
இவர் கூலி வேலை செய்து வருகிறார். இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு போட்டு வருகிறார்.
இதனால் இளம்பெண் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவருக்கும் இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணின் கணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. அவர் தனது கணவரை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.
இது அந்த பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் இளம்பெண் சீட்டுக்கு கட்டிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுக்ாமல் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இளம் பெண்ணை தொடர்பு கொண்ட பெண், நீ கேட்ட சீட்டு பணத்தை தருகிறேன். வீட்டில் வந்து வாங்கி கொள் என கூறி அழைத்தார்.
பணம் வாங்கும் ஆசையில் இளம்பெண்ணும் அங்கு சென்றார். அங்கு சென்றதும், அவர் இளம்பெண்ணிடம் தனது கணவருடனான கள்ளக்கா தலை கைவிடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பெண், இளம்பெண்ணை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து இளம்பெண் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கணவருடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசில் புகார் தெரிவித்ததால் ஆத்திரம்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் முன் ஜாமீன் பெற்று விட்டனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் துறைமுக ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் (வயது 29). இவர் கப்பலில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.
தற்போது 5 மாத விடு முறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடன் வேலை செய்யும் ஊழியர் ஞானேஸ்வரனும் விடுமுறையில் வந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோவில் குளத்திற்கு அருகே கவுதம்ராஜ் நின்று கொண்டி ருந்த போது அவரை ஞானேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் கையாளும் தடியாலும் தாக்கினர்.
இது சம்பந்தமாக கவுதம்ராஜ் அரியாங்குப்பம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் முன் ஜாமீன் பெற்று விட்டனர். பிறகு கோர்ட்டு மூலம் தினம்தோறும் கையெழுத்திட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தேரோடும் வீதியில் நின்று கொண்டிருந்த கவுதம்ராஜை ஞானேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் வசந்தகுமார், யுனதன் ஆகிய 3 பேர் சேர்ந்து, உன்னை எவ்வளவு அடித்தாலும் போலீசில் புகார் தெரிவித்தாலும் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது. போலீசில் புகார் தெரிவித்தால் நாங்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவோம் என கூறி கையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர்.
இது சம்பந்தமாக மீண்டும் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கவுதம்ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரன், வசந்தகுமார், யுனதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
நெல்லையை சந்திப்பு சி.என். கிராமத்தை சேர்ந்தவர் உடையார் (வயது 40). இவரது மனைவி சுப்புலட்சுமி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுப்புலட்சுமி நெல்லையை அடுத்த மேல தாழையூத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று உடையார் சி.என். கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (25) என்பவரை அழைத்துக்கொண்டு மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு சுப்புலட்சுமியையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீட்டின் கதவு உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுப்புலட்சுமி தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து உடையார் மற்றும் நாகராஜனை கைது செய்தனர்.






