என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10-ந் தேதி"

    • ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பொழிவு அதிகமாக இருப்பதாலும், வங்காள விரிகுடா கடலில் 'மாண்டஸ்" புயல் உருவாகி இருப்பதால் ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெரும் பாலான நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் ஆறு, நீர் நிலைகளில் பொதுமக்கள் குளிக்க செல்லுவதை தவிர்க்க வேண்டும்.

    தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இருகரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    மின்கம்பம், மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுக்காப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இடி, மின்னல் ஏற்படும்போது மரத்தின் அருகில் பொதுமக்கள் செல்லவோ, கால்நடைகளை கட்டி வைக்கவோ கூடாது. மழை பொழிவின்போது பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

    இடி, மின்னல் ஏற்படும் போது மின்சாதனங்களை பொதுமக்கள் கவனமுடன் கையாள தெரிவிக்கப்படுகிறது. மின் கம்பிகள் ஏதும் அறுந்து விழுந்துவிட்டால் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மின் வாரிய செயற் பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சித்தோடு, ராய பாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல் பாளையம்,

    ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம் பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், பி.பெ.அக்ரகாரம்,

    மரவபாளையம், சி.எம். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.டி.டி. நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரிய புலியூர், சேவக்கவுண்டனூர்.

    மேல் திண்டல், கீழ் திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன் நகர், லட்சுமி கார்டன், வீரப்பம் பாளையம், நஞ்சனாபுரம், தெற்கு பள்ளம், நல்லி யம் பாளையம், செங்கோடம் பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம்,

    வில்லரசம் பாளையம், கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டு பாளையம், இளைய கவுண்டன் பாளையம், கதிரம் பட்டி, வண்ணான் காட்டு வலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளை யம், சிந்தன் குட்டை, ஆட்டையாம் பாளையம், மேற்கு புதூர்,

    தென்றல் நகர், முத்து மாணிக்கம் நகர், ராசாம் பாளையம், கருவில்பாறை வலசு, கருவில்பாறை குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற் பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது.
    சேலம்:

    1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

     
    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்  10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதி வருகின்றனர். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகிற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.

    இதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்வு நிறைவடைய இருக்கிறது.

    இதில் 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ளது.

    இந்த நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையிலும் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
    ×