என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assailant"

    • ஆயுதங்களுடன் பதுங்கியவர் கைது செய்யப்பட்டனர்.
    • அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    புதூர் போலீசார் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள புதர் அருகே வாலிபர் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் மேலமடை, ஆசாரி தெருவை சேர்ந்த கணேசன் மகன் பாலகுமார் என்ற தவளை பாலா (23) என்பது தெரிய வந்தது. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் உள்ளது.

    சம்பந்தப்பட்ட நபரை கொலை செய்வதற்காக, தவளை பாலா, அரிவாளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவரை புதூர் போலீசார் கைது செய்தனர்.

    தாரமங்கலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள எடயபட்டி கிராமம் கலர்பட்டி காலனி பகுதியை சேர்ந்த மாணவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியின் எதிரே உள்ள கம்மங்கூழ் கடையில் உள்ள சேரில் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர்   மாணவனிடம் உட்கார கூடாது என்று கூறி கட்டையால்  தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த மாணவர் ஜலகண்டாபுரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச் சைக்கு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
     
    இதுபற்றிய புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் ராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×