என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி"
- 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
- போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதின. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், இதைதொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
இரு அணிகளுக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இந்த போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.
- ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது.
- டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார்.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோற்றது.
இந்த ஆட்டத்தில் டோனி 9-வது வீரராக களம் இறங்கி 16 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 30 ரன் எடுத்தார். அவர் முன்னதாக களம் இறங்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. அஸ்வினுக்கு முன்னதாக கூட ஆட வராதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டோனி முன்னதாக களம் இறங்க வேண்டும் என்று டெலிவிசன் வர்ணனையாளரும், சி.எஸ்.கே. முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் ஜியோ ஹாட் ஸ்டார் நிகழ்ச்சியில் இது தொடர்பாக கூறியதாவது:-
ஆர்.சி.பி.க்கு எதிராக டோனி 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார். இதைப் பார்க்கத்தான் சி.எஸ்.கே. ரசிகர்கள் வருகிறார்கள். அவர் முன்னதாக களம் இறங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த ஆட்டத்தில் அஸ்வினுக்கு முன்பாக டோனி களம் இறங்கியிருக்க வேண்டும். கூடுதலாக 15 பந்துகளை அவர் சந்தித்து இருக்க வேண்டும். கடைசி சில ஆண்டுகளில் தன்னால் அதிரடியாக விளையாட முடியும் என்று தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார்.
டோனி இன்னும் முன்னதாக களமிறங்கினால் அவரது திறமையை அதிகமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது. ருதுராஜ் சிறப்பான தொடக்க வீரர். ருதுராஜ் அழுத்தத்தில் ஆடினார். சாம் கரணை 5-வதாக ஆட வைப்பதும் கேள்விக்குறியே. 7-வது வரிசையில் விளையாட வைக்கலாம்.
தற்போதைக்கு, சி.எஸ்.கே. அணியில் சமநிலை இல்லை. டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். அவரை முன்னதாக இறக்கியிருந்தால் வென்று இருக்கலாம்.
இவ்வாறு வாட்சன் கூறினார்.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி வருகிற வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
சென்னை:
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி வருகிற வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்துக்கொள்ளலாம். 1,700 முதல் 7,500 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஊரில் விளையாடினாலும், சென்னை அணியின் ரசிகர்கள் அந்த மைதானத்தில் அதிக அளவில் கூடி விடுவார்கள்.
- கடைசி ஓவரில் ரஷித் கான் வீசிய முதல் 2 பந்துகளில் தோனி 2 சிக்சர்களை விளாசி தள்ளினார்.
ஐபிஎல் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ்வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்த நேற்றைய போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் வந்து தோனியின் காலில் விழுந்தது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஊரில் விளையாடினாலும், சென்னை அணியின் ரசிகர்கள் அந்த மைதானத்தில் அதிக அளவில் கூடி விடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் தோனி.

அதனால் தான் நேற்றைய போட்டியின் போதும் அகமதாபாத் மைதானத்தில் சென்னை ரசிகர்களே அதிகளவு காணப்பட்டனர். எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஜெர்சியுடன் விசில் அடித்து கொண்டு ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது சிவம் துபே 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, தோனி களம் இறங்கினார்.
அப்போது தோனிக்காக ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை பிளந்தது. இதன்பின் கடைசி ஓவரில் ரஷித் கான் வீசிய முதல் 2 பந்துகளில் தோனி 2 சிக்சர்களை விளாசி தள்ளினார். 3வது பந்து தோனியின் கால்களில் பட்டு செல்ல, குஜராத் அணி தரப்பில் டிஆர்எஸ் எடுக்கப்பட்டது.
அதன்பின் டிஆர்எஸ்-ல் தோனி NOT OUT என்று வந்த போது, திடீரென மைதானத்தில் இருந்த தோனி கொஞ்சம் தூரம் ஓட தொடங்கினார். தோனி எதற்காக ஓடுகிறார் என்று புரியாததால் சில நிமிடங்கள் அனைவரும் இருந்தனர். அதன்பின்னர் தான் தெரிந்தது ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி தோனியை நோக்கி ஓடி வந்தது. அப்படி ஓடி வந்த அந்த ரசிகர், தோனியின் காலில் விழுந்தார்.
அதன்பின் பாதுகாப்பு காவலர்கள் அந்த ரசிகரை வெளியில் அழைத்து சென்றனர். எந்த ரசிகர் தோனியை நோக்கி ஓடி வந்தாலும், அவர்களுடன் ஒரு சிறிய விளையாட்டை தோனி விளையாடுவது வழக்கமாகிவிட்டது. அப்படித்தான் நேற்றைய போட்டியிலும் ரசிகர் ஒருவர் ஓடி வருவதை தெரிந்து கொஞ்சம் தூரம் ஓடி விளையாட்டு காட்டியுள்ளார் தல தோனி.
The moment we pay Internet Bill for@ChennaiIPL pic.twitter.com/gSoNREYEV8
— ?™? (@Itz1Nonly) May 10, 2024