என் மலர்
நீங்கள் தேடியது "ரிசர்வ் வங்கி"
- நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.
புதுடெல்லி:
லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தின் பெட்டகத்தில் இருந்து மேலும் 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த முறையை போலவே ரிசர்வ் வங்கியும், அரசும் சிறப்பு விமானங்களில் தங்கத்தை கொண்டு செல்ல விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.
செப்டம்பர் மாத இறுதியில் உள்ளூர் பெட்டகங்களில் சேமிக்கப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு 510.46 டன்னாக இருந்தது. மார்ச் இறுதி நிலவரப்படி 408 டன்னாக இருந்தது.
- புதுச்சேரி வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஏராளமான தேசிய வங்கிகள் உள்ளன.
இங்கிருந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் கிளைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை பரிசோதனை செய்தபோது அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளில் 55 கள்ள நோட்டுகள் என மொத்தம் ரூ.27,500 இருப்பது தெரியவந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை கிளை மேலாளர் அபிஷேக் சிங், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது வங்கிக்கு வரும் கள்ள ரூபாய் நோட்டுகளை எளிதாக கண்டறிந்து விடுவார்கள். அப்படி இருந்தும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.