என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய வானிலை மையம்"
- வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் 10-ந் தேதி வரை கடுமையான வெப்ப நிலை இருக்கும் என தெரிவித்துள்ளது.
கொல்லம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியசும், திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியசும் வெப்பநிலை இருக்கும் என அறிவித்துள்ளது.
இதேபோல் ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியசும், திருவனந்தபுரம், மலப்புரம் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக வருகிற 10-ந் தேதி வரை மலைப்பாங்கான பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வெப்பமான நிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 14-ந்தேதி தொடங்கியது.
- தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 14-ந்தேதி தொடங்கியது. நாடு முழுவதும் அதிக மாநிலங்களில் மழைப் பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மூலமாக தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள், அணைகள், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின.
'பெஞ்சல்' புயல் உருவாகி பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் கடந்து சென்றது. இதனால் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை யிலும் ஜனவரி 2-வது வாரம் வரையும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடும் குளிர் பனி இருந்த போதிலும் கூட மழை பெய்தது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், மாகே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இன்று நிறைவு பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
- புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆதலால் புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.
- இன்று மாலை 5.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
- புயல் உருவாவதை ஒட்டி சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புயல் உருவாவதை ஒட்டி சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் போலீசார் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக்கால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
- தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
- திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
- முன்னெச்சரிக்கையாக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
- புவனேஸ்வர் விமான நிலையத்தில் நேற்று மாலை இன்று காலை வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
புவனேஸ்வர்:
வங்கக் கடலில் உருவான டானா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றதை அடுத்து மேற்கு வங்கம், ஒடிசாவில் மழை கொட்டியது.
ஒடிசாவின் லசோர், பத்ரக், பிதர்கானியா, புரி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புயல் காரணமாக பல பகுதிகளில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் ஒடிசாவின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒடிசாவின் பிடர்கனிகா தேசிய பூங்கா-தாம்ரா துறைமுகம் இடையே புயல் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, ஏற்கனவே 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், மேலும் 3 லட்சம் பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
புயல் கரையை கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஒடிசாவில் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
புவனேஸ்வர் விமான நிலையத்தில் நேற்று மாலை 5:00 மணி முதல் இன்று காலை 9:00 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் கடற்கரையோரம் வசிக்கும் ஐந்து லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து செல்லும் விமானங்களின் சேவைகள் நேற்று மாலை 6:00 மணி முதல் இன்று காலை 9:00 மணி வரை நிறுத்தப்பட்டன. புறநகர் ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.
- மேற்கு வங்கத்தில் விமானம், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
- அதிகனமழை பெய்யும் என்பதால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலாக வலுப்பெற்று, நேற்று டானா புயலாக மாறியது. கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடற்பகுதியில் ஒடிசாவின் பிட்டார்கனிகா மற்றும் தமரா பகுதியை ஒட்டிய பூரி- சாகர் தீவு இடையே கரையை கடக்கும். இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான காலக்கட்டத்தில் கரையை கடக்கும். இந்த தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த தீவிர புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இன்று மாலை முதல் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. சுமார் 190 உள்ளூர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்படுகின்றன.
ஒடிசாவிலும் விமான சேவைகள் இன்று மாலை நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மணி நேரப்படி மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும், ஒடிசாவின் பரதிப்பில் இருந்து தென்கிழக்கே 330 கி.மீட்டர் தூரத்திலும், ஒடிசாவின் தமராவின் தெற்கு-தென்கிழக்கே 360 கி.மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவின் தெற்கு-தென்கிழக்கு 420 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
- இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக் கூடும்.
- கடலில் காற்று பலமாக வீசும்.
சென்னை:
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிக மாக பெய்துள்ளது. பருவ மழை முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மேற்கு ராஜஸ்தான் மற்றும் கச்சாவின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை திரும்ப பெறுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாகி வருகின்றன.
இந்த நிலையில் ஆந்திரா கடற்கரையில் இருந்து தென் கடலோர மியான்மர் வரை கிழக்கு மேற்கு பள்ளத்தாக்கு பகுதியில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டுள்ளது.
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவிலும் மற்றொன்று தென்கடலோர மியான்மர் பகுதியிலும் வெப்ப மண்டல நிலைகள் நீண்டுள்ளது.
மேலும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டது. அது தாமதமாகும் சூழல் நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் நாளை காலை தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 28-ந் தேதி வரையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், கடலில் காற்று பலமாக வீசும் என்றும் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- டெல்லிக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
அதேபோல் நொய்டா பகுதியிலும் கனமழை பெய்தது. இதற்கிடையே டெல்லிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
மேலும் அரியானா பஞ்சாப் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் கோவா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும்.
- சுல்தானியா பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியதால் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். டெல்லி என்சிஆர் பகுதிகளில் லேசான மழை தொடரும்.
வரும் நாட்களில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் கோவா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும்.
ராய்காட் பகுதிக்கு ரெட் அலர்ட்டும், மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, சதார் மற்றும் மகாராஷ்டிராவின் கொல்காபூர் ஆகிய இடங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில், தானேயில் உள்ள பிவாண்டி பகுதியில் உள்ள கம்வாரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுல்தானியா பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியதால் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கர்நாடகாவின் தெற்கு உள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நேற்று பெய்த கனமழைக்கு மத்தியில் அரகா, செண்டியா, இடூர் மற்றும் தொடுரு கிராமங்களில் பல பகுதிகள் முற்றிலும் நீரில் மூழ்கின. குடகு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன.
டெல்லி என்சிஆர் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் வருகிற 23-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
மேலும் கனமழை பெய்யும் மாவட்டங்களின் விவரத்தையும் தெரிவித்து ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த 2 தினங்களாக கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கு மேலும் சில மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வருகிற 23-ந்தேதி கேரளாவில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று முதல் நாளை மறுநாள்(22-ந்தேதி) வரை கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடல்சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதையும், கடலில் இறங்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் உஷார் நிலையில் உள்ளனர்.
- வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடித்து வருகிறது.
- டெல்லியில் இன்றுவரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி:
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது.
பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மே 27-ம் தேதி முதல் இன்றுவரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். இதில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் 9 பேரும், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் 9 பேரும், லோக் நாயக் மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 20 பேர் பலியாகினர்.
வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.