என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் விசாரணை"
- சினிமா தயாரிப்பாளரை கடத்தியது ஏன்? என்பது குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
- ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோர் கிருஷ்ண பிரசாந்தை கடத்த திட்டம் போட்டு உள்ளனர்.
சத்தியமங்கலம்:
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (36). கன்னடம், தமிழ் மற்றும் மலையாள படங்களின் விநியோகஸ்தர். தமிழில் பன்-டீ, நீ என் பூஜா லட்சுமி மற்றும் ஏராளமான மலையாள படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை கர்நாடகா படம் சம்பந்தமான வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்த கிருஷ்ணபிரசாந்தை ஒரு ஆம்னி வேனில் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த கரிகாலன், சிவசக்தி, கார்த்திகேயன் ஆகிய கொண்ட கும்பல் கடத்தி கொண்டு வந்தனர்.
அப்போது ஈரோடு கொண்டு வரும் வழியில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் வடக்கு பேட்டை என்ற இடத்தில் மடக்கி பிடித்து சினிமா தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாந்தை அந்த கும்பல் இடமிருந்து மீட்டனர்.
இதனையடுத்து தயாரிப்பாளரை கடத்திய கரிகாலன், சிவசக்தி கார்த்திகேயனுடன் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சினிமா தயாரிப்பாளரை கடத்தியது ஏன்? என்பது குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த தயா என்கிற கரிகாலன்(45) என்பவருடன் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத்துக்கு கடந்த வருடம் முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது கிருஷ்ண பிரசாந்தியிடம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சினிமா படப்பிடிப்புக்கு உகந்த இடமாக உள்ளது என்றும், நீங்கள் வந்து பாருங்கள் என்று கரிகாலன் கூறியுள்ளார்.
இதனையடுத்து கிருஷ்ண பிரசாத் சத்தியமங்கலத்துக்கு வந்து சினிமா சம்பந்தமான லொகேஷன் பார்த்து உள்ளார். அப்போது கரிகாலன் அவரது நண்பர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவசக்தி ஆகியோர் தயாரிப்பாளர் கிருஷ்ணபிரசாந்தை ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். அவர்கள் அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.
அப்போது கிருஷ்ண பிரசாந்த் உங்கள் 3 பேரையும் நான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று அவரிகளிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அவர்கள் ரூ.2.50 லட்சம் வரை தயாரிப்பாளருக்கு செலவு செய்துள்ளனர். ஆனால் கிருஷ்ணபிரசாந்த் கூறியவாறு அவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. மாறாக காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோர் கிருஷ்ண பிரசாந்தை கடத்த திட்டம் போட்டு உள்ளனர். அதன்படி அவர்களுக்கு நன்கு அறிமுகமான கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த அருண் என்பவரை கிருஷ்ண பிரசாந்திடம் நன்கு பழக வைத்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகா பட வேலை விஷயமாக கிருஷ்ணபிரசாந்த் கிருஷ்ணகிரி வந்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கடத்த திட்டம் போட்ட கரிகாலன் கும்பல் அருணை அனுப்பி வைத்து பேச வைத்துள்ளனர்.
நேற்று மாலை அருண், கிருஷ்ண பிரசாந்திடம் என்னிடம் நல்ல கதை உள்ளது உங்களிடம் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை யடுத்து இருவரும் கதை சம்பந்தமாக பேசி நடந்து கொண்டிருந்தனர். அப்போது வேனில் வந்த கரிகாலன், கார்த்திகேயன் சிவசக்தி ஆகியோர் கிருஷ்ணபிரசாத்தை கடத்தி கொண்டு சத்தியமங்கலம் வந்த போது நாங்கள் பிடித்துவிட்டோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதனையடுத்து சத்திய மங்கலம் போலீசார் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோரை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று இரவு அழைத்து வந்தனர்.
அங்கு தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாந்திடம் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார். பின்னர் கடத்தல் கும்பல் 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில் கிருஷ்ணகிரி போலீசார் சத்தியமங்கலம் வந்தனர்.
அவர்களிடம் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி போலீசார் அந்த கடத்தல் கும்பலை விசாரணைக்காக கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் சடலமாக மீட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி அனிதா(32) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இவர் கூலி வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்றார். அங்கு சந்திரசேகருக்கு ஆந்திர மாநிலம், ஆவலங்குப்பம் பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி பூஜா (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், கள்ளத்தொடர்பாக மாறி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சந்திரசேகர், பூஜாவை தனியாக வாணியம்பாடிக்கு அழைத்து வந்தார். வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இதனை அறிந்த பூஜாவின் உறவினர்கள் இன்று காலை வாணியம்பாடி வந்தனர். வாணியம்பாடி தேங்காய்பட்டரை பகுதியில் சந்திரசேகருடன் தங்கியிருந்த பூஜாவை காரில் அவரது உறவினர்கள் அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது காரின் கண்ணாடி உடைத்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.
அப்போது ஆத்திரமடைந்த சந்திரசேகர் ஓடிச் சென்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார். இதனைப் பார்த்த பூஜாவும் மற்றொரு விவசாய கிணற்றில் ஓடிப்போய் குதித்தார். இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் பிணமாக மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தன் மகள் என்றும் பாராமல் தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
- மயக்கமடைந்த சிறுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூர் ஏ.பி. நகரைச் சேர்ந்தவர் 36 வயது கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் முதலாவது 12 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு தன் மகள் என்றும் பாராமல் தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து தனது தாயிடம் கூறியபோது அவர் தனது கணவரை கண்டித்தார். இருந்த போதும் அவரது தொல்லை அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது.
நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது தனது மகளை வலுக்காட்டாயமாக அவர் பலாத்காரம் செய்தார். இதில் மயக்கமடைந்த சிறுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மகளை பலாத்காரம் செய்த தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தலைமறைவாக இருந்த நகைக் கடை உரிமையாளர் மதன், மதுரையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் டிசம்பர் 7-ந் தேதி சரணடைந்தார்.
- வெளிநாடுகளில் மதன் சொத்துக்களை வாங்கி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.
திருச்சி:
திருச்சி, சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் பிரணவ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்த நகைக்கடை நிர்வாகத்தினர் அறிவித்த கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டத்தில் பொதுமக்கள் நம்பி பல கோடி முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில், முதிர்வுத் தொகையைத் தராத நகைக்கடை நிர்வாகத்தினர் திடீரென நகைக்கடைகளை மூடியதால் முதலீடு செய்தவர்கள் அந்த கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து திருச்சி, மதுரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் முதலீட்டாளர்கள் அளித்த புகாரின்பேரில், ரூ.100 கோடி வரையில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சி, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள அந்த மோசடி நிறுவனத்தில் நகைக்கடைகளில் அதிரடி சோதனை நடந்தி 22 கிலோ வெள்ளி, 1, 900 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 711 ரொக்கம் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல், கூட்டுச்சதி செய்தல் என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நகைக்கடை மேலாளர் நாராயணன் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக தலை மறைவாக இருந்த நகைக் கடை உரிமையாளர் மதன், மதுரையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் டிசம்பர் 7-ந் தேதி சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்ற அனுமதியுடன் டிசம்பர் 18-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நகைக்கடை உரிமையாளர் மதனின் மனைவி கார்த்திகாவை திருச்சி, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து, மதுரை முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அவரிடமிருந்து ரூ. 52,000 ரொக்கம் மற்றும் 2 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு அந்தத் தொகையை திருப்பி வழங்க மோசடி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெரும்பாலான சொத்துக்கள் அடமானத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனை மீட்டு பறிமுதல் செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர்.
அதேபோன்று கடைகளுக்கு அட்வான்ஸ் கொடுத்த தொகை சுமார் ரூ.3 கோடி வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. ஆகவே அந்த தொகையையும் கைப்பற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ரூ. 100 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் பறிமுதல் செய்ய இருக்கும் சொத்துக்களின் மதிப்பு வெகு குறைவாக உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
ஆகவே வெளிநாடுகளில் மதன் சொத்துக்களை வாங்கி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.