என் மலர்
நீங்கள் தேடியது "Lorry"
- லோடுடன் வருகை தந்த லாரிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன.
- 3 லாரிகளில் இருந்து 6 பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன் கோட்டை பகுதியில் நெல் அரவை மில் உள்ளது.
இந்த மில்லில் அரைப்பதற்காக லோடுடன் வருகை தந்த லாரிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன.
அவ்வாறு நிறுத்தப்பட்டி ருந்த மூன்று லாரிகளில் இருந்து தலா இரண்டு பேட்டரிகள் வீதம் ஆறு பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்து பட்டுக்கோட்டை பகுதியின் லாரி உரிமையாளர் சங்க தலைவர் போஜராஜன், நகர போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரிகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- தண்ணீர் லாரி மோதி தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற சிறுமி பலியானார்.
- லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.
மதுரை
மதுரை அருகே மங்களக் குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது41). இவரது மனைவியும், 9 வயது மகள் அஜிதாவும் ஸ்கூட்டரில் சென்றார். பைக் மூன்றுமாவடி பகுதி யில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் தாயும் குழந்தையும் கீழே விழுந்தனர். இதனால் படுகாயம் அடைந்த அஜிதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசில் காளிதாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் தனஇந்திரன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.
- அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உமையா ள்புரம் கிராமத்தில் உள்ள விவசாயி களிடமிருந்து 60 கட்டு வைக்கோல் போரை வாங்கிகொண்டு மினி லாரியில் ஏற்றி கொண்டு லால்குடி புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் உமையாள்புரம் மெயின்ரோ ட்டில்ல வரும்பொழுது மின் வயரில் லாரி உரசியதாக கூறப்படுகிறது.
இதில் லாரியில் இருந்த வைக்கோல் போர் தீ பிடித்து எரிந்தது. மேலும் லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.
இதில் அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.
இது குறித்து லாரியின் உரிமையாளர் லால்குடி சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ரூ. 4 லட்சம் சேதம் ஏற்பட்டது.
இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.