என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள்"

    • பஸ்சில் பயணித்த 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ் மீட்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.

    அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க, முயற்சித்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.தொடர்ந்து பேருந்து முகப்பு மற்றும் சன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

    தொடர்ந்து பேருந்தில் பயணித்த 9 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர் அன்பரசன் உட்பட பயணியான தெற்குப்பொய்கை நல்லூரைச் சேர்ந்த வசந்தி ஆகியோர் கால் மற்றும் தலையில் லேசான காயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்துகிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு பேருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பேருந்து மீட்கப்பட்டது. இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    • பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங் நிரம்பி பஸ் நிலையம் முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • நோய் பரவும் அபாயம் ஏற்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளை யத்தில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கலான வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை, மற்றும் ஆன்மீக தளங்களுக்கு வரக்கூடிய பஸ்கள் அனைத்தும் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

    அதே போன்று சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்ககளாக பஸ் நிலையம் அருகே ஓடக்கூடிய பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங் நிரம்பி பஸ் நிலையம் முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    சில இடங்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

    இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு பயணிகள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.

    எனவே சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் உடனடியாக கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

    உடனடியாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×