என் மலர்
நீங்கள் தேடியது "tag 94568"
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வந்தது. தற்போது தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
அந்தவகையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று (வியாழக்கிழமை) பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தர்மபுரி, சேலம், திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஆவடியில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பெய்துள்ளது. சோழவந்தான், நடுவட்டம், தாமரைப்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கி கடந்த 4-ந் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கத்திரி வெயிலின் வெப்பம் தாங்காமல் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் இந்த கோடை வெயிலின் போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சுட்ட எரித்தாலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த பருவ நிலை மாற்றத்தினால் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடுகின்றனர்.
தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்யும் என அறிவித்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல் பொது மக்கள் திண்டாடி வந்தனர். நேற்று மாலை குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. மற்றும் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட்டனர். மேலும் இந்த மழை இரவு 9 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இந்த மலை விழுப்புரம் மாவட்டம் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
இந்த இடியுடன் கூடிய மழை விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான நன்னாடு,தோகைபாடி, வழுதரெட்டிபாளையம், காணை, கோலியனூர், மாம்பழப்பட்டு,சிந்தாமணி முண்டியம்பாக்கம், உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஆண்டு கோடை காலத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்தது. இந்த ஆண்டு பருவ நிலை மாற்றம் மற்றும் வங்க கடலில் உருவான அசானி புயலின் காரணமாகவும் கோடை காலத்தில் தொடங்கிய கத்திரி வெயிலின் போது ஓரிரு தினங்களில் விட்டு விட்டு பெய்யும் மழையினால் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட்டனர்.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கோடை மழை குறைந்து வெயில் அடித்துவந்த நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை பகுதியில் நேற்று சாரல் மழை பெய்தது. பாபநாசத்தில் 1 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 615.16 கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83.40 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.40 அடியாகவும் உள்ளது.
அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாவிற்கு குடும்பத்துடன் சென்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் அந்த பகுதியில பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசியில் 1.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. குண்டாறு, அடவிநயினார் அணை பகுதியில் தலா 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கண்டமங்கலம்:
கடந்த சில நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்தது பொதுமக்கள் நிம்மதி அடைந்தார்கள்.
நேற்று காலை முதல் வெயில் வெளுத்து வாங்கியது திடீரென மாலை முதல் மேகத்தில் மாற்றங்கள் காணப்பட்டன. இரவு 8 மணி முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கண்டமனூர் பகுதியில் திடீரென பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்தன பாய் போட்டது போல மடிந்து காணப்படுகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட் டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சமயத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தால் நெற்பயிர் மடிந்து விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
திடீர் மழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
சென்னை:
தென்மேற்கு பருவ மழை கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழகம் மற்றும் உட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பரவி உள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
மீனவர்கள் தென் கிழக்கு அரப்பிக்கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பலத்த காற்று மேற்கண்ட பகுதியில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 10 செ.மீ., தேவலா 8 செ.மீ., புள்ளம்பாடி (திருச்சி) 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
புதுடெல்லி:
தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ந்தேதி அன்று தொடங்கும். ஆனால் 3 தினங்களுக்கு முன்னதாக கடந்த 29-ந்தேதி அன்றே கேரளாவில் பருவ மழை தொடங்கி விட்டது.
நாட்டில் பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுசூசய் மொகபத்ரா கூறியதாவது:-
தற்போதைய தென் மேற்கு பருவ மழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) சராசரி மழை பொழிவு 103 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் பருவ மழை பொழிவு 99 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது கூடுதல் பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நாட்டில் இந்த ஆண்டு பருவ மழை இயல்பான அளவை ஒட்டியே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.
கடந்த ஆண்டு பருவ மழை 99 சதவீதம் (இயல்பு) இருந்தது. 2020-ல் இயல்புக்கு அதிகமாக 109 சதவீதமும், 2019-ல் பருவ மழை இயல்புக்கு அதிகமாக 110 சதவீதமும் இருந்தது.
தற்போதைய பருவ மழை இந்தியாவிலும், தென் தீபகற்பத்திலும் இயல்பை விட அதிகமாக 106 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் 96 முதல் 106 சதவீதம் வரையும் இருக்கலாம்.
ஒரு நல்ல பருவ மழை அதிகமான விளைச்சலை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி-பிப்ரவரி மாதங்களை கொண்ட குளிர் பருவத்தில் 15.22 மி.மீ., மழை பெய்தது. மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த மழையில்லை. சராசரியாக, 13.40 மி.மீ., பதிவாக வேண்டிய மழை, 6.31 மி.மீ., மட்டுமே பெய்திருந்தது.
ஏப்ரல் மாதம் சராசரி 48 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு 3மடங்கு அதாவது 127.95 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மே மாதத்தின் சராசரி 73.70 மி.மீ., மழை. ஆனால் 61.47 மி.மீ., பெய்தது.கடந்த 3 மாதங்களில் 17 நாட்கள் கனமழை பெய்து மாவட்டத்தை குளிர்வித்துள்ளது.
மார்ச், மே மாதம் பெய்ய வேண்டிய மழைசராசரியை விட குறைவாக இருந்தாலும் ஏப்ரல் மாதம் 3 மடங்கு அதிக மழை பெய்ததால் கோடை பருவத்தின் சராசரியை காட்டிலும் 60 மி.மீ., மழை அதிகம் கிடைத்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில், இந்தாண்டு சராசரி அளவை காட்டிலும் மழை அதிகம் இருக்குமென வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குளிர் மற்றும் கோடையில் இயல்பான அளவை தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால், மானாவாரி சாகுபடியை முன் கூட்டியே துவக்கவும் விவசாயிகள் தயாராக இருக்கின்றனர் என்றனர்.
- சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
- பொக்லைன் உதவியுடன் மண் சரிவு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விடிய விடிய பலத்தமழை கொட்டி தீர்த்தது. அவ்வப்போது இடி மின்னலுடன் சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் கன மழை பெய்தது. கனமழையினால் ஏற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மின் கம்பிகளும் சேதம் அடைந்தன. இதனிடையே ஏற்காட்டுக்கு செல்லும் குப்பனூர் மலைச்சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
ஏற்காட்டில் இருந்து கொட்டசேடு வழியாக சேலம் செல்லும் சாலையில் ஆத்துபாலம் என்ற இடத்தில் மன்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண் சரிவை சீரமைக்கும் படியில் ஈடுபட்டு வருகின்றனர். பொக்லைன் உதவியுடன் மண் சரிவு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் மழையினால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஏற்காடு மலைச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.