search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேகம்"

    • தமிழ் - தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
    • தமிழில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவை- பேரூர் பட்டீசுவரர் திருக்கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றத்தை நாடவேண்டிய அவலம் உள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்த பின்னரும் மேல்முறையீடு செய்யப்பட்டு இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    நல்லத் தீர்ப்பு வருமென நம்பிக்கையோடிருப்போம்.

    சமஸ்கிருதத்தை தேவமொழி என நம்பும் சங்கப் பரிவாரங்கள் தமிழ்நாட்டில் வலுப்பெற்றால், தமிழ் - தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    தமிழில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.

    அரசமைப்புச் சட்டம் வழங்கும் அந்த உரிமையை நீதிமன்றம் பாதுகாக்குமென நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.



    • கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
    • கோவையில் இருந்து பேரூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    பேரூர்:

    கோவை மாவட்டம் பேரூரில் பிரசித்தி பெற்ற பச்சை நாயகி உடனமர் பட்டீசுவரசுவாமி கோவில் உள்ளது. மேலைச்சிதம்பரம் என அழைக்கப்படும் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நடந்தது.

    ராஜகோபுரம், விமான கோபுரங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசப்பட்டு தற்போது கோவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 10-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான கும்பாபிஷேக விழா தொடங்கி நடந்து வருகிறது.

    இன்று காலை பிள்ளையார் வழிபாடு, புனித தீர்த்தங்கள் மற்றும் அக்னி அழைத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 4.35 மணிக்கு முதற்கால யாக வேள்வி பூஜை தொடங்குகிறது.

    8-ந் தேதி காலை 8.45 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் ஆகுதி, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, மலர் போற்றுதல் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    9-ந்தேதி காலை 9 மணிக்கு நான்காம் கால வேள்வியும், மாலை 4.15 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜை, இடைகலை, பிங்கலை பூஜைகளும் நடக்கின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 10-ந் தேதி காலை 9.05 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடக்கிறது. அன்று காலை 5.45 மணிக்கு ஆறாம் கால வேள்வி பூஜையும், காலை 9.50 மணிக்கு ராஜகோபுரம் அனைத்து விமானங்கள் மற்றும் திருச்சுற்று தெய்வங்கள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழாவும், 10.05 மணிக்கு பட்டிப்பெருமான், பச்சைநாயகி அம்மன், நடராச பெருமான், தண்டபாணி ஆகிய மூலமூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பேரூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது. 

    திருப்பத்தூர் அருகே மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோவில்  மகா கும்பாபிஷேக விழா சின்னக்கருப்பன் அம்பலம் வகையறா தலைமையில்   நடைபெற்றது. 

    முன்னதாக  மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், சின்ன கருப்பு, பெரிய கருப்பு ஆகிய தெய்வங்களுக்கான சிலைகள் வைக்கப்பட்டு அருகே  யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை பிரதிஷ்டை பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது.   

    பின்னர் ஹோம குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து  மஹா பூர்ணாஜுதி பூஜை நடந்தது.  இதனையடுத்து  மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று  கோவிலை சுற்றி வலம் வந்து ராஜகோபுர கலசங்கள் மற்றும் மூலவர் விமானம் கலசங்களுக்கு  வேத மந்திரங்கள் முழங்க கும்பகலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கபட்டன.

     பின்னர் மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

    இக்கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திருப்பத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் சின்ன கருப்பு அம்பலம் வகையறா பங்காளிகள் செய்திருந்தனர்.

    விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் கட்சி பிரமுகர்கள் கிராம பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதம் வழங்கப்பட்டது
    ×