என் மலர்
நீங்கள் தேடியது "tag 95540"
முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன் மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.
ப்ராக்கோலி
கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது. கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
மாதுளை
மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.
வாழைப்பழம்
சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக, உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.
முட்டை
முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.
மஞ்சள்
சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா உள்பட பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக பருவமழை காரணமாக விளைநிலங்கள் முழுவதும் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.
விளைநிலங்களில் வெள்ளம் தேங்கியிருப்பதால் காய்கறி பயிரிட்ட விவசாயிகளுக்கு பயிர்கள் முழுவதுமாக நாசமடைந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலுள்ள காய்கறி சந்தைகளுக்கு வர வேண்டிய காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுரண்டை, பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வழக்கம் போல் வந்திறங்கும் காய்கறிகளின் வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது ஐயப்ப சீசன் தொடங்கி பக்தர்கள் விரதம் இருந்து வருவதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைந்து தேவை அதிகரிப்பால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
வழக்கமாக தமிழகத்தில் மழை காரணமாக காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டால் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும். ஆனால் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் பருவமழை காரணமாக பயிர்கள் நாசமடைந்துள்ளதால் அங்கிருந்து காய்கறிகள் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது.
விலை உயர்வு காரணமாக நடுத்தர குடும்பத்தினருக்கு காய்கறி வாங்குவது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. விலை கடுமையாக உயர்ந்த காரணத்தினால் காய்கறி பொரியல் மற்றும் கூட்டு வகைகளை அதிகமாக வைத்திடும் சைவ ஓட்டல்கள் திணறி வருகின்றன.
தற்போது நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உணவகங்களில் காய்கறிகள் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. அதற்கு மாறாக மழைக்காலத்தில் அதிகளவில் கிடைத்திடும் கீரைகள் மற்றும் பயிறு வகைகள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
இது தொடர்பாக காய்கறி வியாபாரி கூறும்போது, வரலாறு காணாத அளவிற்கு காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. உள்ளூர் காய்கறிகளும், மலைப்பகுதிகளில் விளைந்திடும் காய்கறிகளும் மழையினால் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது.
இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு காய்கறி வரத்தை அதிகரித்து விலை உயர்வினை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். மேலும் சிறிய ஓட்டல்களில் காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் கூட்டு, பொரியல் வகைகள் நிறுத்தப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை உருவாகிவிடும். இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றார்.
கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு மலைக்கிராமங்களில் விளையும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும், தரைப்பகுதிகளில் விளையக்கூடிய அவரை, கத்தரி, வெண்டைக்காய், கருணை கிழங்கு, தக்காளி, உள்ளிட்ட காய்கறிகளை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக காய்கறிகள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெரும்பாலான காய்கறிகள் ரூ.100க்கும் அதிகமாக இருந்ததால் சாமானிய மக்கள் அதனை வாங்க இயலாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளான கத்திரிக்காய் கிலோ ரூ.120, வெண்டைக்காய் ரூ.120, பீன்ஸ் ரூ.120, தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.120, பாகற்காய் ரூ.120, பட்டர் பீன்ஸ் ரூ.180, சிவப்பு பவளபீன்ஸ் ரூ.180, குடை மிளகாய் ரூ.180, பெங்களூர் தக்காளி ரூ.130 என விற்பனை செய்யப்பட்டது.
இதனால் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் இந்த திடீர் விலை ஏற்றத்தினால் அவதியடைந்து குறிப்பிட்ட சில காய்கறிகளை சிறிதளவு மட்டும் வாங்கிச் சென்றனர். மேலும் வாரச்சந்தையில் முறையாக விலைப்பட்டியல் வைக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காய்கறிகள் விலை உயர்வுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக காய்கறிகள் விளைச்சல் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் காய்கறிகள் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதியை பொறுத்தவரை டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் ஆகியவை பெரிய மார்க்கெட்டுகள் ஆகும்.
இந்த மார்க்கெட்டுகளுக்கு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்டவற்றில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வந்து சேரும். ஆனால் தொடர்மழையால் அங்கும் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
அதன்படி இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. வெள்ளை நிற கத்திரிக்காய் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டது. பச்சை நிற கத்திரிக்காய் ரூ.120-க்கு விற்பனையானது.
இது தவிர அவரைக்காய் கிலோ ரூ.130-க்கும், பீன்ஸ் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கேரட் கிலோ ரூ.70 முதல் 90 வரையும், புடலைங்காய் ரூ.75-க்கும் விற்கப்பட்டது.
பெரிய வெங்காயம் கிலோ ரூ.35 முதல் 50 வரை தரத்திற்கேற்ப விற்கப்பட்டது. முருங்கைக்காய் ரூ.75-க்கும், பச்சை மிளகாய் ரூ.80-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50 வரையிலும் விற்பனையானது.
இதுகுறித்து பாளை மார்க்கெட் வியாபாரியான சிவா கூறுகையில், பாளை மார்க்கெட்டுக்கு தென்காசி மாவட்டத்தை அடுத்து மதுரை மார்க்கெட்டில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வரும். சில நேரங்களில் ஆந்திராவில் இருந்தும் காய்கறிகள் வரத்து இருக்கும்.
மதுரையில் இருந்து வரும் தக்காளிகள் 28 கிலோவாக ஒரு பெட்டியில் போடப்பட்டு மார்க்கெட்டுக்கு வரும். இவற்றின் விலை இன்று ரூ.3,200 ஆக இருக்கிறது. இதே போல் ஆந்திராவில் இருந்து 15 கிலோ ஒரு பெட்டியில் போடப்பட்டு ரூ.1,600-க்கு கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
பாளை மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து தக்காளி வந்துள்ளதால் ரூ.120 வரை விற்கப்படுகிறது. மதுரையில் இருந்து கொள்முதல் செய்தால் ரூ.150 வரையிலும் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.
இதனால் வியாபாரிகளின் லாபத்தையும் சேர்த்து விற்பனை செய்யும் போது காய்கறிகளின் விலை அதிகரித்து விடுகிறது என்றார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது.
இதனால் நெல்லை, தென்காசி பகுதிகளில் காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டிருந்த கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட செடிகள் நீரிலேயே மூழ்கி அழுகி விட்டன.
இந்த தொடர் மழை காரணமாக மார்க்கெட்டுகளில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்திலிருந்து அதிகரிக்க தொடங்கிய காய்கறிகளின் விலை இந்த வாரம் மேலும் உயர்ந்துள்ளது.
நெல்லையில் இன்று தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கத்தரிக்காய் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. பாளை மார்க்கெட்டில் வெள்ளை நிற கத்தரிக்காய் ரு.90 வரையிலும், மற்ற நிறத்திலான கத்தரிக்காய் ரூ.70 வரையிலும் விற்பனையாகிறது.
இதேபோல் கேரட் ரு.60 முதல் 100 வரையிலும், பீன்ஸ் 70 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மார்க்கெட்டுகளில் உள்ளூர் காய்கறிகள் தவிர தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போது பெய்து வரும் பருவமழையால் தமிழகம், கர்நாடகத்தில் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
அதன்படி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
ஒரு கிலோ கத்தரிக்காய் -ரூ.120 முதல் ரூ.130 (ரூ.60)
பெரிய வெங்காயம் (பல்லாரி)-ரூ.40 (ரூ.35)
கேரட், பீன்ஸ் தலா ரூ.60 (ரூ.50)
இதுதவிர உருளைக்கிழங்கு ரூ.40, தக்காளி ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.22, சவ்சவ் ரூ.28 என விற்பனை செய்யப்பட்டது. இந்த காய்களுக்கு கடந்த வாரம் விற்கப்பட்ட விலையே தற்போதும் நீடித்தது.
சைவ சமையலில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காய் மட்டும் விலை உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சமையலில் கத்தரிக்காயை சேர்ப்பதை தவிர்த்தனர்.
கார்த்திகை மாதம் அய்யப்ப சாமி சீசன் தொடங்கி இருப்பதால் காய்கறிகளின் விலை இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் ஈரோடு மார்க்கெட்டிற்கு கடந்த ஒரு மாதமாக போதிய தக்காளி வரத்து இல்லாததால் அதன் விலை உயர தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை ஈரோடு மார்க்கெட்டிற்கு வரத்தான தர்மபுரி, ஆந்திரா தக்காளிகள் 14 கிலோ கொண்டபெட்டி ரூ.550 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டன.
இதன் காரணமாக சில்லரை விலையில் கடந்த சிலநாட்களாக கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முதல் தரமான தக்காளிகள் தற்போது கிலோ ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்களும், ஓட்டல் கடைக்காரர்களும் பெரும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விற்பனை செய்யும் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், “ஈரோடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து, ஈரோடு மாவட்டம் தாளவாடி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில்இருந்து வரத்தாகும். ஆனால் தற்போது தர்மபுரி, ஆந்திரா தக்காளிகள் மட்டுமே குறைந்தளவில் வரத்தாவதால் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.700 வரையும்,சில்லரை விலையில் கிலோ ரூ. 45 முதல் ரூ. 50 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜூன் மாதம் இறுதியில் தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் பலியானார்கள்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்குள் செல்லும் ராவி, சட்லெட்ஜ், பியாஸ் ஆகிய நதிகளின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விவசாயிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.
இதன் காரணமாக பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டு வந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தினமும் 3 ஆயிரம் டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
மற்ற நாடுகளிடம் இருந்து பெறுவதை விட இந்தியாவிடம் இருந்தே பாகிஸ்தான் குறைந்த விலையில் தக்காளியை பெற்று வந்தது. தற்போது காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மேலும் பாகிஸ்தானில் பச்சை மிளகாய் கிலோ ரூ. 160-க்கும், சிவப்பு மிளகாய் ரூ. 300-க்கும், இஞ்சி ரூ. 150-க்கும், உருளைக்கிழங்கு ரூ. 70-க்கும், வெங்காயம் ரூ. 90-க்கும், கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ. 110-க்கும் விற்கப்படுகிறது. #PulwamaAttack #Tomato
சென்னை:
டீசல் விலை அதிகரித்து வருவதால் லாரி வாடகை உயர்த்தப்பட்டது. அனைத்து சரக்கு வாகனங்களும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு நிர்ணயிக்கும் வாடகையை 25 சதவீதம் உயர்த்தி விட்டது. இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
ஆனால் அழுகும் பொருளான காய்கறிகள் விலை மட்டும் உயரவில்லை. வழக்கத்தை விட குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒரு மாதமாக அனைத்து காய்கறிகளும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. லாரி வாடகை உயர்த்தப்பட்ட பிறகும் கூட காய்கறிகள் விலை உயரவில்லை. வியாபாரம் மந்தமாக இருப்பதால் எல்லா காய்கறிகளும் மலிவாக கிடைக்கின்றன.
இந்த நாட்களில் கடந்த ஆண்டில் 30 சதவீதம் விலை உயர்வு இருந்துள்ளது. ஆனால் தற்போது காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைவதற்கு காரணம் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெண்டைக்காய் கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.10, பீட்ரூட் ரூ.8, நூல்கோல் ரூ.10, சவ்சவ் ரூ.10, காலிபிளவர் ரூ.15, தக்காளி ரூ.8 என அனைத்து காய்கறிகளும் விலை குறைவாக உள்ளது.
இதுகுறித்து மார்க்கெட் மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் கூறியதாவது:-
மார்க்கெட்டில் எல்லா காய்கறிகளும் விலை குறைவாகத்தான் உள்ளன. லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. ஆனாலும் இதனால் காய்கறிகள் விலையை உயர்த்த முடியவில்லை. மார்க்கெட்டுக்கு தினமும் 250 முதல் 300 லாரிகளில் காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. அழுகும் பொருளான இவற்றை சேமித்து வைக்க இயலாது. அதனால் விலை உயர்த்தப்படாமல் குறைந்த விலைக்கே விற்கப்படுகிறது.
காய்கறிகளை வாங்க வியாபாரிகள் இல்லை. வருகிறவர்களும் குறைந்த அளவில்தான் கொள்முதல் செய்கின்றனர். மக்களிடம் பணம் இல்லாததால் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. நஷ்டம் ஏற்படாமல் வியாபாரம் நடந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டோம். ஒரு மாதமாக காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Vegetables #KoyambeduMarket