search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கசாமி"

    • ரங்கசாமி-விஜய் இடையே சுமூக உறவு உள்ளது.
    • இவர்களுக்கு இணைப்பாக த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆண்டு விழா கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும் முதல்-அமைச்சருமான ரங்கசாமி பேசினார். அப்போது வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை அரசியல் ரீதியாக உருவாக்கியுள்ளது.

    தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் பா.ஜ.க. விரும்புகிறது.

    அதே நேரத்தில் தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பு இந்த கூட்டணியை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

    புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, மயிலாடுதுறை ஆகிய தமிழக பகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில் அவர் சார்ந்த சமூகத்தினரும் அதிகளவில் உள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது த.வெ.க.வைத் தொடங்கி ஓராண்டு நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் நடிகர் விஜயை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். முதல்-அமைச்சர் என்ற புரோட்டா காலை காட்டிக்கொள்ளாமல் தனக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில் ரங்கசாமி நேரில் சென்று விஜயை சந்தித்தார்.

    அதன் பிறகு நடிகர் விஜய், முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்.

    இவர்களுக்கு இணைப்பாக த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கும்போது அதற்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். தொடர்ந்து கட்சி முதல் மாநாட்டின் போதும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை விஜய் அழைப்பார் என்ற பேச்சு எழுந்தது. இதனால் ரங்கசாமி-விஜய் இடையே சுமூக உறவு உள்ளது.

    இந்த எண்ணத்தில்தான் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார் என என்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் கருதுகின்றனர்.

    இந்த நிலையில் தனது கொள்கை விரோதியாக தி.மு.க., பா.ஜ.க.வை த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

    இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் 2026 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என பதிலளித்தார்.

    • கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
    • காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகிய ரங்கசாமி, பிப்ரவரி 7-ந் தேதி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழா இன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    முதலமைச்சர் ரங்கசாமி அலுவலக வாசலில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி கட்சி அலுவலகத்தில் உள்ள சாமி படங்களுக்கு பூஜை செய்தார்.

    தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் அரசு பணிகளே நடைபெறாத சூழ்நிலை இருந்தது. எமது அரசு பொறுப்பேற்றது முதல் காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். அரசின் அனைத்து துறையிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மீதமுள்ள காலிபணியிடங்களையும் நிரப்புவோம்.

    ஆளும்கட்சி, எதிர்கட்சி என எம்.எல்.ஏ.க்களில் வேறுபாடும், வித்தியாசமும் பார்க்காமல், மாநில வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்.

    கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது 11 தொகுதிகளுக்கு நிர்வாகிகள் நியமித்துள்ளோம். மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை இருந்து வருகிறது. தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும்.

    காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும். மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள். அரசிடமும் தெரிவியுங்கள், அரசு அதை நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கவர்னர் மாளிகைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, தமிழிசையின் தலையில் கை வைத்து ஆசி வழங்கி, பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசைக்கு நேற்று பிறந்த நாளாகும்.

    பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி கடிதம் மூலம் கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமருக்கு கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுவைக்கு வந்த கவர்னர் தமிழிசை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரின் பிறந்த நாளையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    கவர்னர் மாளிகையில் கலெக்டர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது பேசிய கவர்னர் தமிழிசை, தனக்கு பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இல்லை. இருப்பினும் கவர்னர் மாளிகை சார்பில் நடந்த பிறந்த நாள் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    கவர்னர் மாளிகைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, தமிழிசையின் தலையில் கை வைத்து ஆசி வழங்கி, பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கவர்னரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும். அதை உருவாக்கி தர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். புதுவையில் அதற்கான சூழல் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு, பிரெஞ்சு தூதரகத்துடன் இணைந்து தொழில்துறை வளர்ச்சிக்கு தொழில்முனைவோர் மாநாட்டை நடத்தியது.

    இந்த மாநாடு அண்ணாசாலையில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, பிரெஞ்சு தூதர் லிசே டால்பட் ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநாட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும். அதை உருவாக்கி தர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். புதுவையில் அதற்கான சூழல் உள்ளது. தொழில் தொடங்க தேவையான வசதிகளை விரைவாக செய்து தரவேண்டும். விண்ணப்பித்த ஒரு சில நாட்களிலேயே மின்துறை உட்பட்ட அனைத்து துறைகளிலும் உரிமம் கிடைக்கவேண்டும். இதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் புதுவை அரசு அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், பெஸ்ட் புதுவை என்பது பிரதமரின் எண்ணம். மத்திய அரசு உதவியுடன் தொழில்துறையில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பொருளாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக மெடிக்கல் டூரிசம், மருந்துகள் தயாரிப்பு, ஸ்டார்ட் அப்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துகிறோம். புதுவையில் இத்தொழில்களை தொடங்க முதலீடு செய்யலாம் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் 80 பிரெஞ்சு மற்றும் இந்திய நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    ×