என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu victory club"

    • 2026-ல் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
    • ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவனால் அமைதி உருவாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்று வருகிது. விழாவில் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு தலைவரும், தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசியதாவது:-


    தமிழக வெற்றி கழகம் என்றதும் மாணவர்கள் மத்தியிலுள்ள ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. உங்களது வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி விழா என்பதால் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் சொல்லாமல் இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தேன். ஆனால் விழாவில் விஜய் என்று கூறியதும் மாணவர்கள் மத்தியில் கடும் எழுச்சி தெரிகிறது.

    தமிழகத்தில் எத்தனையோ கட்சி உள்ளது. 2026 ஆட்சி விஜய்யின் ஆட்சியாக அமையும். மாணவர்களின் எழுச்சி எனக்கு உற்சாகத்தை தருகிறது. இந்த கல்லூரி நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லூரி ஆகும். ஆண், பெண் பாகுபாடு இன்றி இந்த கல்லூரி உள்ளது. தரமான கல்வியை இந்த கல்லூரி வழங்கி வருகிறது என்றார்.

    இதை தொடர்ந்து மாண வர்களுடன் அவர் கலந்து ரையாடினார். அப்போது மாணவ-மாணவிகள், கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ஆதவ் அர்ஜூனா பேசிய தாவது:-

    நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். சாதிக்க வேண்டும் என்ற உணர்வு டன் படித்தேன். பொலிட்டி க்கல் சைன்ஸ் படித்ததுடன் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன்.எல்லா விஷயங்களையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாடும் மண்ணும் முன்னேற நல்ல தலைவர்கள் வேண்டும்.

    அரசியல் என்பது சயின்ஸாகும். தலித் மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளார்கள்.சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி யில் நானும் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டோம். அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பிறகு தான் நான் விஜய் உடன் இணைந்து பயணிக்க விரும்பினேன்.

    அவரிடம் கற்றுக்கொண்ட நல்ல விஷயம் என்ன வென்றால் எல்லோரும் சமம் என்று கூறுகிறார். மதத்தால் ஜாதியால் அனைவரும் ஒன்றே என்று விஜய் கூறி வருகிறார். இளைஞர்களை நம்பி மாற்றத்தை உருவாக்கும் கட்சியாக விஜய் கட்சி உருவெடுத்து உள்ளது. 2026-ல் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அமைதியாக இந்த கட்சி உருவாகி வருகிறது.

    விஜய் என்று கூறியதும் இளைஞர்கள் மத்தியில் அவரது குரல் எதிரொலிக்கிறது. இந்த கல்லூரியில் பார்க்கும் போதும் மாணவர்களின் குரல் ஒலிப்பதை பார்க்க முடிகிறது. நம்முடைய தாய்மொழி தமிழை எல்லோரும் படிக்க வேண்டும்.

    வணிக ரீதியான மொழி, வெற்றியடைய கூடிய மொழி, உலகம் முழுவதும் உள்ள மொழி ஆங்கிலம் ஆகும். இந்தி என்பது தேசிய மொழி கிடையாது.

    ஒரு நாட்டிற்கு சென்றால் ஒவ்வொருவரும் அவரவர் மொழியையே பேசி வருகிறார்கள். அந்த மொழியை எடுத்து வந்து நம்மிடம் திணிக்க பார்க்கிறார்கள். நாம் எல்லா மொழிகளையும் வரவேற்போம்.

    ஆனால் நம்மிடம் ஒரு மொழியை திணிக்க கூடாது. முதல்வர், அமைச்சர் பதவியை விட கொள்கை ரீதியான பயணத்தை தமிழகம் முழுவதும் உருவாக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம்.

    தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஊழல் செய்து விட்டு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் கொடுப்பது சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. மக்களின் சமூக கொள்கையை நோக்கி எனது பயணம் இருக்கும்.

    2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. நிச்சயமாக வெற்றி பெறும். அதில் சந்தேகம் இல்லை. 2 மாதம் நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மாணவர்கள் இறங்கினால் என்ன ஆகும் என்று எல்லோருக்கும் தெரியும்.

    கனிமவளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் தனியார் வசம் இருப்பதை தடுத்து நிறுத்தி அரசுடமையாக்கப்படும். அதன் மூலமாக வரும் வருவாய் ஏழை-எளிய மக்களுக்கு பயன்படுத்தப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

    டாஸ்மாக் மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவனால் அமைதி உருவாகும். நீங்கள் த.வெ.க உறுப்பினராக வேண்டும். த.வெ.க. தலைவர் , நிர்வாகிகளை நியமனம் செய்யும்போது எத்தனை வருடமாக இவர் நம்முடன் பயணம் செய்தவர்? யார் என்பதை அறிந்து தான் அவர்களுக்கு பதவி வழங்கியுள்ளார்.

    விஜய் கட்சியில் சென்னை மாவட்ட தலைவர், ஆட்டோ டிரைவராக உள்ளார். நீங்கள் அனைவரும் த.வெ.க.வில் உறுப்பினராக சேரலாம். பிரதமரிடம் கூட நீங்கள் கேள்வி கேட்கலாம். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போஸ்டர் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
    • பேனர் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (22-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    கோவில்களில் அன்னதானம், ஏழைகளுக்கு மருத்துவ உதவி, ஆடைகள் வழங்குதல், நோட்டு புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் சார்பில் நூதன முறையில் மாலை மலர் போஸ்டர் போன்று சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

    அதில், த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆணைக்கிணங்க திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தேவா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

    தனது பொன் விழாவை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

    ஆகஸ்ட்டு 15-ந் தேதி திண்டுக்கல்லில் முதல் அரசியல் மாநாடு.

    2020 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் அமோக வெற்றி பெற்று விஜய் ஆட்சியை பிடிப்பார் என்று தொண்டர்கள் பேட்டி என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த போஸ்டர் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பேனர் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளது.

    ×