என் மலர்
நீங்கள் தேடியது "Tata Group"
- லண்டனில் நடைபெற இருந்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இருந்தார்.
- கடைசி நேரத்தில் லண்டன் பயணத்தை ரத்து செய்யததால், ரத்தன் டாடாவிற்கு என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.
டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவர் சிறந்த தொழில் அதிபராக இருந்தது மட்டுமல்லாமல் சிறந்த மனிதாபிமானமிக்கவராக திகழ்ந்தார். அனுதாபம், கருணை உள்ளம் கொண்டனர்.
செல்லப் பிராணிகள் மீது கனிவு காட்டக்கூடியவர். தெருநாய்களை பாதுகாக்க இளைஞர் கொண்ட முயற்சியை பாராட்டும் வகையில், சாந்தனு நாயுடு என்ற அந்த இளைஞரை தனது உதவியாளராக வைத்துக் கொண்டவர்.
ரத்தன் டாடா உடனான தங்களுடைய சந்திப்புகள் குறித்து தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தொழில் அதிபர் நிரஞ்சன் ஹிரானந்தானி, செல்லப் பிராணிக்காக ரத்தன் டாடா தனது லண்டன் பயணத்தை ரத்து செய்தார் என நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நிரஞ்சன் ஹிரானந்தானி கூறியதாவது:-
ரத்தன் டாடா அவர்கள் விருது ஒன்றை பெறுவதற்காக லண்டன் செல்ல வேண்டியிருந்தது. அது என்ன விருது என்பதை என்னால் நினைவு கொள்ள முடியவிலலை. ஆனால், கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்தார்.
தன்னுடைய பயணத்தை ரத்து செய்ததால் ரத்தன் டாடாவிற்கு என்ன ஆனது. உடல்நிலை சரியில்லையா?... அவருக்கு என்ன நிகழ்ந்தது எனக் கேட்க ஆரம்பித்தனர். கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்ய காரணம் என்ன? என கேள்வி எழும்பியது. பின்னர்தான் அவரது செல்லப்பிராணியான நாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது தெரியவந்தது.
நாய் மீது அக்கறை எடுத்துக் கொண்டு தனது லண்டன் பயணத்தை ரத்து செய்தார். அவரது அருகில் நாயை படுக்க வைத்து பார்த்துக் கொண்டார். செல்லப் பிராணிகள் மீதான் அன்பு மற்றும் எளிமையானவர் என்பது இது ஒரு எடுத்துக்காட்டு. எல்லோரும் கற்றுக் கொள்ள இது ஒரு பாடம். இந்த நினைவுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.
இவ்வாறு நிரஞ்சன் தெரிவித்தார்.
- ரத்தன் டாடாவிற்கு எற்கனவே பத்ம விபூஷன், பாரத பூஷன் வழங்கப்பட்டுள்ளது.
- பாரதத்திற்குரிய ரத்தன்-ஐ (ரத்தன் டாடா) விட பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்கள் யாரும் இருக்கமுடியாது.- சுஹேல் சேத்
டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தொழில் அதிபரும் கட்டுரையாளருமான சுஹேல் சேத், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
"இதை நான் சொல்லக்கூடாது, இருந்தாலும் மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, பாரதத்திற்குரிய ரத்தன்-ஐ (ரத்தன் டாடா) விட பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்கள் யாரும் இருக்கமுடியாது. தனிப்பட்ட உதாரணத்தால் ஊக்கமளித்து, அவர் தனது பொதுசேவை மூலம் மில்லியன் கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தார். மேலும் ஒரு உண்மையான இந்தியன்... அது விருதை அழகாக்க மட்டுமே செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "ரத்தன் டாடாவின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை. இன்னும் ஒவ்வொரு இந்தியனும் அவனது குடும்ப உறுப்பினராக இருந்தான். ஒரு மனிதனுக்காக 1.4 பில்லியன் மக்கள் துக்கம் அனுசரிப்பது அரிது.
அதுதான் ரத்தன் டாடா. தொடர்ந்து இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா ஆகும். ரத்தன் டாடா பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
- டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
- டாடா குழுமத்தின் புதிய தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு ரத்தன் டாடா உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரத்தன் டாடா உயிரிழந்ததை அடுத்து, டாடா குழுமத்தின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா இன்டர்நேஷனல் லிமிட்டெட்-இன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் நோயல் டாடா. இவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
- டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
- டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக விளங்கி வருகிறார்.
மும்பையில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா ஸ்டீல், வாட்ச் நிறுவனமான டைட்டனின் துணைத் தலைவராக நோயல் டாடா உள்ளார். நோயல் டாடா 2000-களின் முற்பகுதியில் இணைந்ததில் இருந்து டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக விளங்கி வருகிறார்.
சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் கூட்டத்தைத் தொடர்ந்து, டாடா டிரஸ்டின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டார். டாடா டிரஸ்ட் என்பது அனைத்து 14 டாடா அறக்கட்டளைகளின் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் அமைப்பாகும்.
எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பதை விரும்பும் நபராக நோயல் டாடா அறியப்படுகிறார். இவர் 2014 முதல் ட்ரெண்ட் லிமிடெட் தலைவராக பணியாற்றி வருகிறார்.
2019 இல் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் குழுவில் நோயல் டாடா சேர்ந்தார். இவர் 2018 இல் டைட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், மார்ச் 2022 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் டாடா குழுவிற்குள் தனது பங்கை மேலும் வலுப்படுத்தினார்.
ட்ரெண்டிற்குச் செல்வதற்கு முன், நோயல் டாடா 2010 மற்றும் 2021 க்கு இடையில் டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு தலைமை தாங்கினார். அவரது பணியின் போது, நிறுவனத்தின் வருவாய் $500 மில்லியனில் இருந்து $3 பில்லியனாக உயர்ந்தது.
வோல்டாஸ் லிமிடெட் மற்றும் டாடா ஸ்டீல் லிமிடெட் உள்ளிட்ட டாடா குழுமத்தின் பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நோயல் டாடா உள்ளார். அவரது மூன்று குழந்தைகள் - நெவில், மாயா மற்றும் லியா - டாடா குடும்பத்துடன் இணைக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களின் அறங்காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
டாடா குழுமத்தை நிறுவிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1892 ஆம் ஆண்டில் நோயல் மற்றும் ரத்தனின் பெரியப்பா ஜம்செட்ஜி டாடா அவர்களால் டாடா டிரஸ்ட்ஸ் அமைக்கப்பட்டது. டாடா அறக்கட்டளைகள் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி போன்ற பல்வேறு துறைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
- டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். மும்பையில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தப்பட்டது.
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரத்தன் டாடா உயிரிழந்ததை அடுத்து, டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா இன்டர்நேஷனல் லிமிட்டெட்-இன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் நோயல் டாடா. இவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
இந்நிலையில், நோயல் டாடாவால் ஒரேநேரத்தில் டாடா அறக்கட்டளை மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்க முடியாது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒருவர் டாடா அறக்கட்டளை அல்லது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மட்டும் தான் இருக்க முடியும்.
டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம். இதை தற்போது என்.சந்திரசேகரன் தலைமையிலான இயங்கி வருகிறது, டாடா குழுமத்தின் இயக்கத்திற்கு டாடா சன்ஸ் தலையாய பொறுப்பு வகிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு வர நோயல் டாடா விரும்பினார். ஆனால் ரத்தன் டாடா இவருக்கு பதவியை கொடுக்காமல் சைரஸ் மிஸ்திரிக்கு கொடுத்தார். சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்படவே ரத்தன் டாடா மீண்டும் தலைவர் பதவியை ஏற்றார்.
இதன் பின்பு ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின்பு டாடா சன்ஸ் தலைவராக டிசிஎஸ் சிஇஓவாக இருந்த என்.சந்திரசேகரனை ரத்தன் டாடா நியமித்தார்.
ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் டாடா அறக்கட்டளை 66% பங்குகளை வைத்திருக்கிறது, இதில் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் சர் டோரபஜி டாடா அறக்கட்டளை ஆகியவை முக்கிய அறக்கட்டளைகள் ஆகும். டாடா சன்ஸின் விதிகள் டி, அதன் இயக்குநர்களில் மூன்றில் ஒரு பகுதியை டாடா ட்ரஸ்ட் நியமிக்க அதிகாரம் உள்ளது.
- டாடா நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது.
- டாடாவின் நர்சபுரா ஆலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது.
இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.
இந்நிலையில், கர்நாடகாவின் நர்சபுராவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது.
நர்சபுரா ஆலையின் ஆண்டு உற்பத்தி கடந்தாண்டு மட்டும் ரூ. 40,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023 ஆம் ஆண்டை விட 180 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ.31,000 கோடியாக அதிகரித்துள்ளது.
2023 ஆண்டு இந்நிறுவனத்தில் 19,000 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட 63% அதிகமாகும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் இந்த நிறுவனம் மட்டுமே 26% ஐபோன்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த ஆலையில் ஐபோன் உதிரிப்பாகங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் டாடா நிறுவனம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.