search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea seller"

    • தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது.
    • வியாபாரத்தில் அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உதவி செய்கிறார்கள்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த 5 ரூபாய் டீ வியாபாரி ஒருவர் தனது புதுமையான அணுகுமுறையால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தாராஷிவ் பகுதியை சேர்ந்தவர் மகாதேவ் நானாமாலி. 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கடந்த 20 ஆண்டுகளாக டீ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமான தள்ளுவண்டியில் டீ வியாபாரம் செய்பவராக அல்லாமல் இவர் தனது கிராமத்தை சுற்றி வசிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தொலைபேசி மூலம் ஆர்டர்களை எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் வழங்குகிறார்.

    இதனால் தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உதவி செய்கிறார்கள். தினமும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு சென்று டீ வியாபாரம் செய்யும் இவர் நாள்தோறும் 2 ஆயிரம் கப் டீ வரை விற்பனை செய்கிறார். இதன் மூலம் தினசரி வருமானமாக ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கிடைப்பதால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இவரை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வில் தேர்ச்சி பெறுவது பலரின் வாழ்நாள் லட்சியமாக இருந்து வருகிறது.
    • பிரஜாபதி தந்தைக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர்.

    நாட்டில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பாடப்பிரிவு மற்றும் தொழில்முறை சார்ந்து போட்டி தேர்வு நடத்தும் விதம் அதன் பாடத்திட்டம் என வேறுப்படும். எதுவாயினும், போட்டித் தேர்வுகளில் மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுவது பட்டய கணக்காளர் (சிஏ) தேர்வு ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது பலரின் வாழ்நாள் கனவு, லட்சியமாக இருந்து வருகிறது.

    அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருவோரம் காய்கறி விற்கும் பெண்ணின் மகன் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்று தாயை சந்தித்து இருவரும் பரஸ்பரம் ஆனந்த கண்ணீர் வடித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.

    இந்த வரிசையில், டெல்லியை சேர்ந்த அமிதா பிரஜாபதி பட்டய கணக்காளர் தேர்வில், தான் தேர்ச்சி பெற்ற சாதனை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் கடந்த பத்து ஆண்டுகளாக பட்டய கணக்காளர் தேர்வில் போட்டியிட்டு, இப்போது தான் தேர்ச்சி பெற்றதாக பிரஜாபதி தெரிவிதுள்ளார்.

    மேலும், தனது குடும்பம் குப்பம் ஒன்றில் வாழ்வதாகவும் தந்தை தேநீர் வியாபாரி என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண் பிள்ளையை பட்டய கணக்காளர் தேர்வு எழுத வைக்க வேண்டாம். எப்படியும் அவள் வேறொரு வீட்டிற்கு சென்றிடுவாள். அவளுக்கு செலவிடுவதற்கு பதில், அந்த தொகையை கொண்டு வேறு எதையாவது செய்யுங்கள் என்று பிரஜாபதி தந்தைக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர்.

    எனினும், அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பிரஜாபதியை படிக்க வைத்துள்ளனர். அதன்படி பத்து ஆண்டுகள் பெரும் கனவோடு படிப்பில் கவனம் செலுத்திய பிரஜாபதி இந்த முறை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பிரஜாபதி தனது தந்தையை கட்டித்தழுவிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


    ×