என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teak trees"

    • கடம்பாடி ஊராட்சி பொதுமக்கள் வனத்துறை, மற்றும் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தனர்.
    • போலீசார் தேக்குமரங்களை வெட்டி கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலகுப்பம் பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு ஊராட்சி சார்பில் தேக்கு, பனை, தென்னை, மாமரம் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வைத்து வளர்க்கப்பட்டது. இந்த மரங்கள் தற்போது நன்கு வளர்ந்த நிலையில் இருந்தன. இந்த மரங்கள் ஏராளமான மயில்கள் உள்ளிட்ட பறவைளுக்கு வாழ்விடமாகவும் இருந்தது. இந்த நிலையில் இங்கிருந்த சுமார் 500 தேக்கு மரங்களை நள்ளிரவில் மர்ம கும்பல் எந்திரத்தால் வெட்டி கடத்தி சென்று விட்டனர்.

    தற்போது அங்கு தேக்குமரக்கிளைகள் மட்டும் குவிந்து கிடக்கிறது. மேலும் அங்கிருந்த சுமார் 100 மயில்களும் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கடம்பாடி ஊராட்சி பொதுமக்கள் வனத்துறை, மற்றும் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் தேக்குமரங்களை வெட்டி கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருக்கழுகுன்றம் தாசில்தார் ராதா உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் புஷ்ப ராஜ், கிராம நிர்வாக அதிகாரி நரேஷ் ஆகியோர் வெட்டப்பட்ட மரங்களை கணக்கெடுத்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இப்பகுதியில் மனைப்பிரிவு விரிவாக்கம் செய்வதற்காக இந்த மரங்களை மர்ம நபர்கள் வேரோடு வெட்டி சாய்த்து உள்ளனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

    கஜா புயலில் சாய்ந்த தேக்கு மரங்கள் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். #gajacyclone

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் அருகே உள்ள வெட்டாறு கரையில் வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரங்கள் உள்ளன. கடந்த மாதம் வீசிய கஜா புயல் தாக்கியபோது, தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருவாரூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் வெட்டாற்றங்கரையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புயலில் சாய்ந்த தேக்கு மரங்கள் கடத்தப்பட்டு மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்குள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்த மரங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

    இதுதொடர்பாக நீலக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த்துறை ஊழியர் பன்னீர்செல்வம், பல்கலைக்கழக காவலாளிகள் முருகேசன், சிவராமகிருஷ்ணன், பிளம்பர் தீனதயாளன், டிரைவர் கண்ணையன் ஆகிய 5 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இவர்கள் நன்னிலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரங்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் துணைவேந்தர் உத்தரவின்பேரில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் தொடர்புடைய ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துணை பதிவாளர் வேலுவிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அவரிடம் இருந்த 5 பொறுப்புகள் பறிக்கப்பட்டு உள்ளன.

    துணை பதிவாளர் வேலுவிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதன் பின்னணியில் பல்கலைக்கழகத்தில் உள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? தேக்கு மரங்கள் யாருக்கு விற்பனை செய்யப்பட இருந்தது? என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் மேலும் சிலர் சிக்கலாம் என்று தெரிகிறது.

    இதுபற்றி பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி கூறியதாவது:-

    தேக்கு மரங்கள் கடத்தல் விவகாரத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #gajacyclone

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தேக்கு மரங்களை வனத்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் எதிரே வெட்டாற்றாங்கரையில் தேக்கு மரங்கள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த மாதம் கஜா புயலால் அங்கு இருந்த தேக்கு மரங்கள் சாய்ந்தன. இதனால் சேதமான தேக்கு மரங்களை ஏலம் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    இதற்கிடையே புயலால் சாய்ந்த தேக்கு மரங்களை சிலர் கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வனத்துறை ஊழியர்கள் விசாரணை நடத்தினர்.

    இதில் அதே பகுதியை சேர்ந்த கிராம உதவியாளர் சிவராமன், தேக்கு மரங்களை துண்டு துண்டாக வெட்டி மத்திய பல்கலைக்கழக வளாக பகுதியில் பதுக்கி இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இன்று விசாரித்தனர்.

    மத்திய பல்கலைக்கழக பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தேக்கு மரங்களை வனத்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    தேக்கு மரங்கள் கடத்தல் சம்பவத்தில் பல்கலைக்கழக காவலாளியும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகித்து வருகிறார்கள்.

    ×