என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tejasvi Surya"

    • முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தகளில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்.
    • இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.

    கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதற்கு எதிராக அனைத்து விதமான வகையில் போராடுவோம். இந்த முடிவை திரும்பப்பெறும் வகையில் நீதிமன்றத்தில் கூட முறையீடு செய்வோம் என பாஜக தெரிவித்துள்ளது.

    4 சதவீத ஒதுக்கீட்டிற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தத்திலும், ஒரு கோடி ரூபாய் வரையில் goods/services ஒப்பந்தங்களிலும் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் வழங்க சட்டதிருத்தம் கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கை. சித்தராமையா அரசு உடனடியாக இதை திரும்பப் பெற வேண்டும். இது அரசியமைப்புக்கு எதிரான துரதிருஷ்டவசமானது என பாஜக எம்.பி. தேஜஷ்வி சூர்யா பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், நாட்டிலேயே முதல் முறையாக, மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகக் கூறும் ஒரு அரசாங்கம், மாநிலத்தில் மத மாற்றத்தை ஊக்குவிக்கிறது என்றார்.

    • பாரம்பரிய விளையாட்டுகளை தடுப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன.
    • பாரம்பரிய விளையாட்டு முதல் முறையாக பெங்களூருவில் நடைபெறுகிறது.

    பெங்களூரு தெற்கு பாராளுமன்ற உறுப்பினரும், பா.ஜ.க. யுவா மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா சனாதன தர்மத்தை காப்பாற்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை தடுப்பதை குறிக்கோளாக கொண்டு சில அமைப்புகள் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    கேரளாவின் கசர்கோட் மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான கம்பாளா முதல் முறையாக பெங்களூருவில் நடைபெறுகிறது. இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "இன்று பல அமைப்புகள் வெவ்வேறு குறிக்கோளுடன் நீதிமன்றத்தை நாடி, நமது பாரம்பிரய விளையாட்டு போட்டிகளான ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாளாவை தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களின் வேறுபாடுகளை கலைந்து நமது பாராம்பரிய கொண்டாட்டங்களான ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாளாவை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். இந்த விளையாட்டுக்களை காப்பாற்றினால் தான் சனாதன தர்மத்தையும் நம்மால் காப்பாற்ற முடியும்," என்று தெரிவித்தார்.

    • இந்துக்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.
    • தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் வெறுப்புப் பேச்சு பேசியதற்காக பா.ஜ.க. எம்.பி. கைது செய்யப்பட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மத்திய பகுதியான அல்சூர் கேட் காவல் நிலைய எல்லையிலுள்ளது சித்தண்ணா லே அவுட். இங்கு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் கடையில் கடந்த 17-ம் தேதி மாலை அனுமன் பாடல்கள் சத்தமாக ஒலிக்கப்பட்டதாகவும், அங்கு வந்த சில இளைஞர்கள் இந்தப் பாடல் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது கடை உரிமையாளரை இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நடவடிக்கைக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்துக்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும். குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.யான தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், பெங்களூருவில் தேஜஸ்வி சூர்யா மற்றும் ஷோபா கரந்தலாஜே போன்ற பா.ஜ.க. தலைவர்கள் போராட்டம் நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், மத ரீதியான வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக அவர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • ரூ.4.1 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

    பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் 3150% உயர்ந்துள்ளது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு ₹13.46 லட்சமாக இருந்த நிலையில், தற்போது தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ₹4.10 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். டெல்லி, பெங்களூரு காவல் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சூர்யாவின் மொத்த சொத்து ரூ.4.10 கோடியில் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1.99 கோடி முதலீடு மற்றும் ரூ.1.79 கோடிக்கு மேல் பங்குகளில் முதலீடு ஆகியவை அடங்கும்.

    ரூ.4.1 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு தொடர்ந்து எம்பியாக தேர்வாகி வந்த அனந்த குமார் கடந்த 2018ல் உயிரிழந்த நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேஜஸ்வியை பாஜக களமிறக்கியது. இவர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-லிருந்து கட்சிக்கு வந்தவர்.

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் நெருங்கிய நண்பரான இவர், பாஜக இளைஞரணியின் தேசிய தலைவராக இருந்திருக்கிறார்

    பெங்களூர் சட்ட ஆய்வுகள் கழகத்தின் முன்னாள் மாணவரும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞருமான இவர், பா.ஜ.க தலைவர் மற்றும் பசவனகுடி ரவி சுப்ரமணியாவின் மருமகன் ஆவார். என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்பவரை தேஜஸ்வி சூர்யா திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மார்ச் 4 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவிற்கு 34 வயதாகியும் இன்னமும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

    இந்நிலையில், தேஜஸ்வி சூர்யாவும் சென்னையை சேர்ந்த பாடகியும் பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் மார்ச் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

    இருப்பினும், தேஜஸ்வி சூர்யா இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் சென்னை சமஸ்கிருத கல்லுாரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டமும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக். பட்டமும் முடித்துள்ளார்.

    பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் இவர் ஒரு பாடலும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், சிவஸ்ரீ சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலை, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேஜஸ்வி சூர்யாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகினறன
    • பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் சிவஸ்ரீ ஒரு பாடல் பாடினார்.

    பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, சென்னையை சேர்ந்த பாடகியும் பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    பெங்களூரில் நடைபெற்ற தேஜஸ்வி சூர்யாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகினறன.

    பாஜக தலைவர்கள் அண்ணாமலை, பிரதாப் சிம்ஹா, அமித் மாளவியா, பி.ஒய்.விஜயேந்திரா, மத்திய அமைச்சர் வி.சோமன்னா ஆகியோர் தேஜஸ்வி சூர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

    சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் சென்னை சமஸ்கிருத கல்லுாரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டமும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக். பட்டமும் முடித்துள்ளார்.

    மேலும், சிவஸ்ரீ சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலை, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் இவர் ஒரு பாடலும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×