என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Temple Chariot Festival"
- தினமும் அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்று வந்தது.
- பாவாடைராயன் நிஷாசனி மற்றும் வல்லாளராயன் கோட்டை எழுத்தில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந் தேதி இரவு காளி முகம் ஏந்துதல், முத்து பல்லக்குடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி மற்றும் மேடை நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தேர் திருவிழா நடைபெற்றது. அம்மன் சன்னதியில் இருந்து புறப்பட்ட தேர் ஊர்வலமாக சென்று மயானத்தை சென்றடைந்தது அங்கு பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த கடலை, பலா, மா, போன்ற விவசாய பொருட்களை கொள்ளை விட்டனர். தொடர்ந்து பாவாடைராயன் நிஷாசனி மற்றும் வல்லாளராயன் கோட்டை எழுத்தில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.
தேர் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 25ம் தேதி முதல் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சாமிகள் ஊர்வலம் வந்தன.
இதில் விக்னேஸ்வரர் மூசிக வாகனம், அன்ன வாகனம்,சிம்ம வாகனம்,கற்பக விருட்ச காமதேனு வாகன சேனை,நாக வாகனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து 31ம் தேதி திருக்கல்யாண ரிஷப வாகனம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று ஏகாம்பரநாதர் திருக்கோயில் சார்பில் தேர் திருவிழா இன்று நடந்தது.தேர்ரானது கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு எம்.பி.டி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு வாலாஜா பேருந்து நிலையம் வழியாக சோளிங்கர் ரோடு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடையும்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.இதில் வாலாஜா தன்வந்திரி பீடம் டாக்டர் முரளிதர சாமிகள், சித்தஞ்சி மோகானந்த சாமிகள், நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமலராகவன், தக்கார் சிவக்குமார், ஆய்வாளர் அமுதா, செயல் அலுவலர் திருநாவுக்கரசு,திமுக நகர செயலாளர் தில்லை, அதிமுக நகர செயலாளர் மோகன், காங்கிரஸ் நகர தலைவர் மணி ஊர் நாட்டாண்மை தாரர்கள்,கோவில் நிர்வாகிகள், வியாபாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள், வாலாஜா நகர பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இவனை தொடர்ந்து நாளை குதிரை வாகனம், 3-ம் தேதி அதிகார நந்தி சேனை, ராவணன் வாகனம், விடையாற்றி உற்சவம், 7-ம் தேதி மாவடி சேவை, 10ம் தேதி மஹா அபிஷேகம், இலட்சதீபம் ஆகியவை நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்