என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Thalavady"
தாளவாடி:
தாளவாடி அருகே உள்ள எரக்க நல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ரத்தினம்மாள் (வயது 25) நர்சிங் படிப்பு முடித்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ரத்தினம்மாளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.
தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (29) என்பவருக்கு ரத்தினம்மாளை இரு வீட்டு பெற்றோரும் பேசி முடிவு செய்தனர். இதையடுத்து ரத்தினம்மாள் தனது வேலையை விட்டு வீட்டில் இருந்துள்ளார். ரத்தினம்மாள் செல்போனில் நண்பருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தேவராஜ் ரத்தினம்மாளிடம் யாருடன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த ரத்தினம்மாள் திருமணத்தை நிறுத்தி விடுமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தேவராஜ் பெற்றோர்களுக்கும் ரத்தினம்மாள் பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்தி விடலாம் தகவல் தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தேவராஜ் ரத்தினம்மாள் வீட்டிற்கு வந்தார். இந்த நேரத்தில் இங்கே ஏன் வந்தீர்கள் என்று ரத்தினம்மாள் பெற்றோர் கேட்டனர். அதற்கு தேவராஜ் நான் ரத்தினம்மாளிடம் தனியாக பேச வேண்டும் என்றார். அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரத்தினம்மாள் முதுகுப் பகுதியில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தேவராஜை மடக்கி பிடித்தனர்.
ரத்தினம்மாள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ரத்தினம்மாள் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.
தாளவாடி:
தாளவாடி அருகே உள்ள பிகினாரை என்ற ஊரை சேர்ந்தவர்கள் மாதேவப்பா (வயது 50), பசுவண்ணப்பா (52). கூலி தொழிலாளர்கள்.
அவர்கள் 2 பேரும் இன்று காலை கோடிபுரத்தில் உள்ள கோவிலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
தர்மபுரம் அருகே சென்ற போது தாளவாடியில் இருந்து பிகினாரை நோக்கி வந்த வேனும், மொபட்டும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மொபட்டில் வந்த மாதேவப்பா, பசுவண்ணப்பா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மாதேவப்பா பரிதாபமாக இறந்தார். பசுவண்ணப்பாவின் கால் முறிந்தது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்தில் தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதி நகர், கெட்டவாடி அருள்வாடி போன்ற 40 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
இங்கு கத்திரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
இந்த பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. உள்ளதாகவும் இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோசுக்கு ரூ.1 முதல் ரூ.2 மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்
3 மாத பயிரான முட்டைகோஸ் 1ஏக்கர்க்கு நாற்று, களைஎடுத்தல், உரம் மருந்து என 50 வரை செலவு ஆகிறது.
இந்த முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் பயிரிட்ட முட்டைகோஸ் நன்கு விளைந்துள்ளது. வெளி மார்க்கட்டில் தற்போது கிலோ ரூ.15க்கு முட்டைகோஸ் விற்றாலும் விவசாயிகளிடம் இருந்து 1 ரூபாய் முதல் 2 ரூபாய் மட்டுமே வியாபாரிகள் கேட்கின்றனர்.
குறைந்தபட்சம் ரூ.10க்கு விற்றால் தான் ஓரளவு கட்டுபடியாகும். ஆனால் விளைச்சல் அதிகம் எனக் காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்பதால், முட்டைகோசை அறுவடை செய்வதா? இல்லை அப்படியே பூமியிலேயே விட்டு விடுவதா? என்று புரிய வில்லை.
இவ்வாறு வேதனையுடன் கூறினர்.
கடந்த 6 மாதமாக இதே நிலை நீடிப்பதால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினர்.