என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The dawn"

    • நேற்று இரவு 10 மணி முதல் விழுப்புரம் நகரப் பகுதியில் லேசான குளிர்ந்த காற்று வீசியது.
    • திடீர் மழையால் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்ததுள்ளனர்.

    விழுப்புரம்:

    ஆடி மாத காற்றில் அம்மியும் நகரும் என்ற வழக்கு மொழி உள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஆடிமாதம் பிறந்தது முதல் விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெயில் அடிக்கிறது. சித்திரை மாத கத்திரி வெயிலை விட அதிகமாக காணப்பட்டது. இதனால் விழுப்புரம், கோலியனூர், பெரும்பாக்கம், சாலை அகரம் மற்றும் செஞ்சி பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வரும் 10-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். 110 டிகிரி வரையில் வெயில் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை விழுப்புரம் நகர சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த அளவிலேேய காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் விழுப்புரம் நகரப் பகுதியில் லேசான குளிர்ந்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து 11 மணி முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. விடியற்காலை 3 மணி வரை மழை நீடித்தது. இதனால் விழுப்புரம் நகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. வெப்பசலனத்தால் பெய்த இந்த திடீர் மழையால் விழுப்புரம் நகரப்பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல இரவு நேரங்களில் ஒரிரு நாட்கள் மழை பெய்தால் வெயிலின் தாக்கம் குறைந்து விடும். அதேசமயம் இந்த திடீர் மழையால் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்ததுள்ளனர்.

    • படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வீடியோவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
    • காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

    தனுஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் STR49 ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது டான் பிக்சர்ஸ் நிறுவனம்.

    இந்நிறுவனம் 4வது படமாக நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படத்தை இயக்குகிறது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். இது இவரது முதல் படமாகும்.

    இந்நிலையில், அதர்வா நடிக்கும் இந்த படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

    அதன்படி, இந்த படத்திற்கு இதயம் முரளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வீடியோவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த உலகத்தில் பெஸ்ட் லவ்வர் ரோமியோவோ, மஜ்னுவோ, அம்பிகாபதியோ... ஏன் டைட்டானிக் ஜாக் கூட இல்ல... நம்ம இதயம் முரளி தான்டா என்ற வசனம் உள்ளது.

    காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

    முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதில் நட்டி நட்ராஜ், பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, ரக்ஷன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×