என் மலர்
நீங்கள் தேடியது "Thiruporur Murugan Temple"
- மகா சிவராத்திரி பெருவிழா கடந்தாண்டு வரை 5 கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் ஆண்டுக்கு 1,000 மூத்த குடிமக்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகத்தில் தை கார்த்திகை, தைப்பூசம், மகா சிவராத்திரி விழா, அறுபடை வீடு ஆன்மிகப் பயணம், ராமேஸ்வரம்-காசி ஆன்மிகப் பயணம் ஆகியவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
தைகிருத்திகை பெருவிழா செங்கல்பட்டு மாவட் டம், திருப்போரூர், கந்த சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் நாளை மாலை முதல் 20-ந் தேதி இரவு வரை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இங்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் அரங்குகளாக அமைக்கப்படுவதோடு தைகிருத்திகை தினமான வருகிற 20-ந் தேதியன்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
மகா சிவராத்திரி பெருவிழா கடந்தாண்டு வரை 5 கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கூடுதலாக மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களையும் சேர்த்து 7 கோவில்கள் சார்பில் மார்ச் 8-ந் தேதி அன்று மகா சிவராத்திரி பெருவிழாவினை விமரிசையாகவும், ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்திட உரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட கோவில்களின் செயல் அலுவலர்கள் செய்திட வேண்டும்.
அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் ஆண்டுக்கு 1,000 மூத்த குடிமக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் முதற்கட்ட பயணம் வருகிற 28-ந் தேதி அன்று தொடங்க உள்ளது.
இந்தாண்டிற்கான ராமேசுவரம் காசி ஆன்மிக பயணத்தில் 300 பக்தர்கள் 5 கட்டங்களாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.
முதற்கட்ட பயணம் பிப்ரவரி 1-ந் தேதி புறப்படும் நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள், காசியில் பக்தர்கள் தங்குவதற்கும், உணவிற்கும் செய்யப்பட்டுள்ள வசதிகள், பக்தர்களுக்கு உதவியாக செல்லும் அலுவலர் மற்றும் பணியாளர் குழு, மருத்துவக் குழு நியமனம் செய்து பக்தர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில்கள் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையிலும், பக்தர்களுக்கு பயனுள்ள வகையிலும் அமைந்திட துறை அலுவலர்கள் அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2 மாதத்துக்கு முன்பு முருகன் கோவிலில் தினேஷ் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
- அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார்.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
அப்படி கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார். இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது என தெரிவித்தனர்.
வேண்டுமென்றால் உங்களுடைய முக்கியமான தரவுகள் ஏதேனும் செல்போனில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி கைவிரித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து அந்த செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு சென்றார். காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஏலத்தில் தன்னுடைய செல்ஃபோனை தானே எடுத்துள்ளார் தினேஷ். இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், உண்டியலில் விழுந்த பொருட்களை சட்டப்படி ஏலத்தில் விட வேண்டும் என்ற அடிப்படையில், செல்ஃபோனை ஏலத்தில் விட்டோம். ஏலத்தில் சென்ற அந்த செல்போனை, அதன் உரிமையாளரே 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் முருகன் கோவில் 17-ம் நூற்றாண்டில் சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்டு மிகவும் பிரசித்திபெற்றது.
இந்த கோவிலில் உள்ள மூலவருக்கு பின்புறம் உள்ள உள்பிரகாரத்தில் சோமாஸ் கந்தர் சிலை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஆடலரசு என்ற பக்தர் இந்து சமயஅற நிலையத்துறை ஆணையரிடம் சோமாஸ்கந்தர் சிலையில் நடுவில் உள்ள சிறிய கந்தன் சிலையை காணவில்லை என புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் 2017 ஜூன் மாதம் திடீரென நடுவில் உள்ள கந்தனோடு சேர்ந்த சிலை புதிதாக வைக்கப்பட்டதாக தெரிகிறது. இது பழமையான சிலையா? அல்லது புதிய சிலையா? என பக்தர்களிடையே குழப்பம் இருந்தது.
இதற்கிடையில் கடந்த 13-ந் தேதி சென்னை தி.நகரைச் சேர்ந்த வக்கீல் ஸ்ரீதரன் என்பவர் சோமாஸ்கந்தர் சிலையில் உள்ள கந்தன்சிலை பழையகந்தன் சிலை இல்லை. சிலை மாயமாகிஉள்ளது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அவர் இந்த புகாரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பினார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருப்போரூர் போலீசார் சிலை மாயம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனால் பக்தர்களிடையே கோயில் உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள சோமாஸ் கந்தரின் சிலையின் நடுவில் உள்ள கந்தன் சிலை பழமை வாய்ந்த சிலையா? அல்லது புதிதாக செய்து வைக்கப்பட்டுள்ள சிலையா? என மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிலை மாயம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் உண்மையில் பழமை வாய்ந்த சிலை தானா? என்பது பற்றி சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.