என் மலர்
நீங்கள் தேடியது "Tirunelveli Murder"
- நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும்.
நெல்லை பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன்கள் மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23).
கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மாயாண்டி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனது சகோதரர் மாரி செல்வத்துடன் கடந்த 20 ஆம் தேதி நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது நீதிமன்றம் முன்பு வைத்து அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு காரில் தப்பிச்சென்றது.
அப்போது அதில் ஒருவரை போலீசாரும், வக்கீல்களும் சேர்ந்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(25) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த கீழநத்தம் 2-வது வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டியை, ராஜாமணியன், மனோராஜ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 7 பேர் கும்பல் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த தங்கமகேஷ்(21), மனோராஜ்(27), சிவா(19), முத்துக்கிருஷ்ணன்(26), கண்ணன்(22), அனவரத நல்லூரை சேர்ந்த மற்றொரு கண்ணன்(20) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை வழங்க வேண்டுமென தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் பசுபதி(வயது 23). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தினமும் வேலையை முடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். நேற்று வழக்கமாக அவர் செல்லும் வழியில் உள்ள சிவகாமி அம்மன் கோவில் பின்புறம் உள்ள பாழடைந்த வீட்டில் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பசுபதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே பணகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பசுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பசுபதி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் காலி மதுபாட்டில்கள், கஞ்சா பொட்டலங்கள் கிடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கஞ்சா புதைத்துக்கொண்டிருந்த மர்மநபர்கள், போதையில் அந்த வழியாக வந்த பசுபதியை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அருண் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.