என் மலர்
நீங்கள் தேடியது "Tirupati Laddu"
- கடந்த மாதத்தில் 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
- லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.
திருமலை
திருமலையில் பக்தா்களிடம் குறைகள் கேட்கும் (டயல் யுவர் இ.ஓ) நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருமலையில் ரூ.120 கோடியில் புதிய தோற்றத்துடன் அதிநவீன எஸ்.வி.அருங்காட்சியகம் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். உலகத்திலேயே நம்பர் ஒன் அருங்காட்சியமாக இது இருக்கும். அருங்காட்சியகத்தில் 3டி இமேஜிங் முறையில் வெங்கடாசலபதியின் தங்க நகைகள் பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரமான, சரியான எடையில் லட்டு பிரசாதங்களை தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.50 கோடியில் தானியங்கி எந்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளது. அதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதலாக சுகாதாரமான, சுவையான லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்க முடியும்.
ஆகாச கங்கை தீர்த்தம் பகுதியில் அஞ்சனாத்ரி கோவில் கட்டும் பணி பக்தர்களின் காணிக்கையில் ரூ.50 கோடியில் இருந்து ரூ.60 கோடி வரையிலான செலவில் நடந்து வருகிறது. புதிய பரகாமணி கட்டிடம் 5-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும்.
திருமலையில் உள்ள அக்கேசியா தோட்டம் விரைவில் மாற்றப்பட உள்ளது. அதற்கானப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அக்கேசியா தோட்டத்தில் பல வண்ண மரங்கள், செடி, கொடிகள் அமைக்கப்படும்.
அத்துடன் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், செடி, கொடிகள், அரிய வகை மூலிகை தாவரங்கள் அக்கேசியாவுக்கு மாற்றப்படும். அதை, பக்தர்கள் பார்த்து மகிழலாம்.
கடந்த மாதத்தில் 20 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 7 லட்சத்து 51 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.123.07 கோடி கிடைத்தது. 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- திருப்பதியில் புதிதாக குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.14 கோடியும், சாதாரண கிடங்கு அமைக்க 18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்தப்பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோடை விடுமுறை காலத்தில் சாதாரண பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து இருக்கிறோம்.
இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அவற்றின் விலை அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மற்றும் ஆந்திர மாநில விளைபொருள் விற்பனை துறை அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி சரியான விலையில் கொள்முதல் செய்ய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் 2 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் புதிதாக குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.14 கோடியும், சாதாரண கிடங்கு அமைக்க 18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 3-ந்தேதி துவங்கி 16-ந்தேதி வரை திருப்பதி மலையில் நடைபெறுவது போல் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீநிவாச சேது மேம்பால கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 750 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- சரியான எடை அளவில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வாங்கிச் செல்லும் லட்டு பிரசாதத்திற்கு வயது 308 ஆகிறது.தற்போது லட்டு பிரசாதம் மூலம் ஆண்டுக்கு தேவஸ்தானத்திற்கு ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.
தற்போதைய நிலவரப்படி திருப்பதி தேவஸ்தானம் தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டுக்களை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறது.
மேலும் லட்டுக்கு புவிசார் குறியீடு மற்றும் வர்த்தக முத்திரையும் தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க ஏழுமலையான் லட்டு பிரசாதங்கள் 1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் பூந்தியாக வழங்க தொடங்கி பின்னர் லட்டு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்றுடன் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு 308 வயது ஆகிறது.
கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட மூலப்பொருட்கள் கொண்டு லட்டு தயாரிக்கப்படுகிறது.
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டை பக்தர்களுக்கான மகா பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது. ஏழுமலையான் கோவிலில் 3 வகையான லட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன.
அஸ்தானம் என்ற லட்டு விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுகிறது. 750 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்யாண உற்சவ லட்டு கல்யாண உற்சவம் ஆர்ஜித சேவைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த லட்டுக்கு பக்தர்களிடையே கடும் கிராக்கி உள்ளது. இதனால் கல்யாண உற்சவ லட்டை பெற பக்தர்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கின்றனர்.
இதேபோல் புரோக்தம் என்ற லட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதான் தினமும் அதிகமாக வழங்குகின்றனர். இதன் எடை 175 கிராம் இருக்க வேண்டும். ஆனால் பக்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் லட்டு எடை குறைவாக உள்ளது . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5, ரூ.10, ரூ.25 விலைகளில் 3 வகையான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது ரூ.50-க்கு லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் அதன் எடை குறைந்து கொண்டே வருகிறது என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சரியான எடை அளவில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
- நிறுவனத்துக்கு தடை விதித்த தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்த நெய் தரம், மணம், சுவையில் குறைபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் வனஸ்பதி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு தடை விதித்த தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.
- பொதுப் பக்தர்களின் பெரிய நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- லட்டு வளாகத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருமலை:
திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் (தலாரிகள்) தங்களுக்குரிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வெளிமார்க்கெட்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதங்களை விற்பனை செய்வதை நாங்கள் கண்காணித்துள்ளோம். இதைத் தடுக்க தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
மேலும் இடைத்தரகர்கள், தலாரிகளின் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு பிரசாதங்களை வெளிப்படைத் தன்மையுடன் வழங்கவும், டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஆதார் சரிபார்ப்பை அமல்படுத்தவும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பக்தர்களின் பெரிய நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, லட்டு வளாகத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லட்டுகளை 48 முதல் 62 வரை உள்ள கவுண்ட்டர்களில் பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நாங்கள் வேறு எதையும் கட்டுப்படுத்தவில்லை. தரிசன டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் ஒரு இலவச லட்டு பெறுவதைத் தவிர, முன்பு போலவே கூடுதல் லட்டுகளையும் வாங்கலாம்.
மேலும் இந்த நடவடிக்கை லட்டு வினியோக அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் கட்டாயம்.
- லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம்.
திருப்பதியில் சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அன்லிமிடெட் லட்டு வழங்கப்படும். நாளை முதல் ஒரு லட்டு ரூ.50 என்ற கட்டணத்தில் பக்தர்கள் தேவைப்படும் லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
சாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு, ஆதார் அடிப்படையில் தலா 2 லட்டுகள் மட்டும் வழங்கப்படும்.
பக்தர்களுக்கு அன்லிமிட்டட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்ற பாலிசியை தேவஸ்தான நிர்வாகம் இதுவரை கவனிக்காமல் இருந்துவிட்டது" என்றார்.
முன்னதாக, தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம் என்று திருமலை- திருப்பதி தேவஸ்தான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- புனிதமாக வழங்கக்கூடிய பிரசாதத்தை சுவீட் கடையில் விற்கப்படும் இனிப்பு போல வைக்கப்பட்டுள்ளது.
- எந்தவித சாமி தரிசனமும் செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லட்டுகள் வரை புரோக்கர்கள் மூலம் வாங்கப்படுகிறது.
திருப்பதி:
தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறியதாவது:-
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வாரத்திற்கு 1 லட்சத்து 5 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. இதை 1 லட்சத்து 60 ஆயிரம் டோக்கன்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இதனை சிலர் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தங்களின் சுய கவுரவத்திற்காக காட்சி பொருளாக இனிப்புடன் வைக்க கூடிய பண்பாடு அதிகரித்து வருகிறது.
இதற்காக புரோக்கர்கள் மூலம் அதிக விலைக்கு இந்த லட்டுகளை வாங்கி செல்கின்றனர். நானே ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதில் லட்டு பிரசாதம் காட்சிக்காக வைக்கப்பட்டிருப்பதை பார்த்து கவலையடைந்தேன்.
புனிதமாக வழங்கக்கூடிய பிரசாதத்தை சுவீட் கடையில் விற்கப்படும் இனிப்பு போல வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதை தடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனைக்காக கவுன்டர்களில் வைக்கப்படுகிறது. இதில் சாமி தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுவதோடு கூடுதலாக பக்தர்களின் தேவைக்கேற்ப வழங்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். ஆனால் எந்தவித சாமி தரிசனமும் செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லட்டுகள் வரை புரோக்கர்கள் மூலம் வாங்கப்படுகிறது.
இதனால் தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு ஒருவருக்கு 3 லட்டுகளும், சாமி தரிசனமே செய்யாதவர்களில் ஒருவருக்கு 5 லட்டுகள் என பெற்று செல்லும் விதமாக உள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக, சாமி தரிசனம் செய்யாமல் வரக்கூடிய பக்தர்கள் ஆதார் கார்டு காண்பித்து 2 லட்டுகள் மட்டும் பெறும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவைக்கு ஏற்ப வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆந்திர சட்டசபை உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் நடந்தது.
- அப்போது பேசிய சந்திரபாபு, திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது கண்டு அதிர்ந்தேன் என்றார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், ஆந்திர சட்டசபை உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் இன்று நடந்தது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்று கடந்த 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் பேசியதாவது:
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிக புனிதமானது. முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரசும் வெட்கப்பட வேண்டும்.
திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம் என தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
- கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும்.
"திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிக புனிதமானது. முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்" ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுத்துள்ளது. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஒய்.வி. சுப்பா ரெட்டி பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஒய்.வி. சுப்பா ரெட்டி கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு திருப்பதியின் புனிதம் மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை மிகவும் மோசமான வகையில் சேதப்படுத்தியுள்ளார். திருமலை பிரசாதம் தொடர்பான அவரது கருத்து மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. எந்தவொரு நபரும் இது போன்ற வார்த்தைகளை பேசமாட்டார்கள். அல்லது குற்றச்சாட்டை உருவாக்கமாட்டார்கள்.
அரசியல் ஆதாயத்திற்கு சந்திரபாபு நாயுடு எந்த அளவிற்கும் செல்வார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், நான், எனது குடும்பத்தினருடன் திருமலை பிரசாதம் குறித்து எல்லாம் வல்ல இறைவனிடம் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் இதைச் செய்ய தயாரா?.
இவ்வாறு சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
- திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டிறைச்ச கொழுப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.
- திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாத்தியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய சந்திரபாபு நாயுடு, "கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுப தொடர்பாக பேசிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி சுப்பா ரெட்டி, "திருப்பதியின் புனிதம் மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். திருமலை பிரசாதம் தொடர்பான அவரது கருத்து மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. எந்தவொரு நபரும் இது போன்ற வார்த்தைகளை பேசமாட்டார்கள். அல்லது குற்றச்சாட்டை உருவாக்கமாட்டார்கள்.
அரசியல் ஆதாயத்திற்கு சந்திரபாபு நாயுடு எந்த அளவிற்கும் செல்வார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், நான், எனது குடும்பத்தினருடன் திருமலை பிரசாதம் குறித்து எல்லாம் வல்ல இறைவனிடம் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் இதைச் செய்ய தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருப்பதி கோயில் பிரசாதம் லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கால்நடை தீவனம் மற்றும் பால் மற்றும் பால் பொருட்களை சோதனை செய்வதில் கவனம் செலுத்தும் தனியார் ஆய்வகமான NDDB CALF திருப்பதி லட்டை ஆய்வு செய்தது. ஆய்வு அறிக்கையில், "திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
- உண்மை எனில், முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை அடையாளம் காண வேண்டும்.
- உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டப்படிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நம்பிக்கை மீதான அவதூறுக்காக மன்னிக்கமாட்டார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் நெய்க்குப் பதில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த நிலைக்கும் செல்வார் என பதிலடி கொடுத்திருந்தது.
அதேவேளையில் ஆய்வு முடிவில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் ஏழுமலையான் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உடனடியாக தீர்வு எட்டப்படவில்லை என்றால், பாஜக-வின் பிரித்தாளும் சதி கொள்கைக்கு அனுமதிப்பது போன்றதாகிவிடும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெர்ரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி லட்டை அவமதிக்கும் வகையிலான இந்த குற்றச்சாட்டு உண்மை எனில், முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேவேளையில் தவறாக அல்லது உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டப்படிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நம்பிக்கை மீதான புனிதத்தன்மையை களங்கப்படுத்தியதற்காக மன்னிக்கமாட்டார்கள்.
அதுவரை தேர்தல் சீசனில் பிரித்தாளும் சதி கொள்கை அனுமதிக்கும் வகையில் பாஜக-விற்கு வசதியாக அமைந்திவிடும்.
இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்துள்ளார்.
- உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
- பேராசைக்கு ஏழுமலையான் சாமியும் விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.
அதற்கான வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என்பதற்கான ஆய்வக ஆதாரத்தை தெலுங்கு தேசம் கட்சி நேற்று மாலை வெளியிட்டது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின் பக்தர்கள் வேதனை அடைந்தனர். ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மையை கெடுத்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள தலைமைச் செயலகம் அருகே அண்ணா கேண்டினை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.
ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த செயல் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மைக்கு கேடு விளைவிப்பதாகும். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வரம்பு மீறிய தவறுகளை செய்துள்ளனர்.
அவர்களின் பேராசைக்கு ஏழுமலையான் சாமியும் விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவிலின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.