என் மலர்
நீங்கள் தேடியது "TMC"
- இந்த வருடம் நாம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்து வருகிறோம்.
- கடந்த சில வருடங்களில் நாம் ஏப்ரல் மாதம் இதுபோன்ற வெப்பத்தை எதிர்கொண்டது கிடையாது.
பெங்கால் சூப்பர் ஸ்டார் தேவ் (தீபக் அதிகாரி) திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டல் (Ghatal) மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். 3-வது முறையாக தொடர்ந்து களம் காண்கிறார்.
இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
ரத்த வங்கிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ரத்த தானம் செய்வது மிகப்பெரிய பணி. மக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். ரத்த தானம் செய்வது யாரோ ஒருவருக்கு புதிய வாழ்வு கொடுப்பதாகும்.
இந்த வருடம் நாம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்து வருகிறோம். கடந்த சில வருடங்களில் நாம் ஏப்ரல் மாதம் இதுபோன்ற வெப்பத்தை எதிர்கொண்டது கிடையாது. ஆகவே, மரங்கள் நடும் இந்த முயற்சியை எடுத்துள்ளேன். நான் 9 லட்சம் வாக்குகள் பெற்றால், 9 லட்சம் மரங்கள் நடுவேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவரை எதிர்த்து பா.ஜனதா ஹிரன் சட்டர்ஜி என்ற பெங்கால் நடிகரை களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் ஆதரவில் சிபிஐ தபன் கங்குலியை நிறுத்தியுள்ளது. இந்த தொகுதிக்கு மே 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- தனக்கான கடமையில் தேர்தல் ஆணையம் கேவலமாக தோற்றிருக்கிறது.
- தேர்தல் ஆணையம் செயல்படவில்லை எனில், நீதிமன்றம் தலையிட வேண்டி வரும்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எவ்வித இழிவான விளம்பரங்களையும் பாஜக வெளியிட கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் குறித்து அவதூறு செய்யும் வகையில் பாஜக இழிவான விளம்பரங்களை வெளியிட்டு வருவதற்கு எதிராக அக்கட்சி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில், "திரிணாமுல் காங்கிரஸை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜக வெளியிட்ட விளம்பரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. தனக்கான கடமையில் தேர்தல் ஆணையம் கேவலமாக தோற்றிருக்கிறது. தேர்தல் ஆணையம் செயல்படவில்லை எனில், நீதிமன்றம் தலையிட வேண்டி வரும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸின் புகாரை, தேர்தல் ஆணையம் உரிய நேரத்திற்குள் தீர்த்திருக்க வேண்டும். தேர்தலுக்கு பின் புகார்களை தீர்ப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை" எனவும் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
தேர்தல்களின் போது, ஊடகங்கள் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜகவுக்கு எதிரான புகார்களை கிடப்பில் போடும் தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்கிற அர்த்தத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கின் முகவரி @ECISVEEP என்பதிலிருந்து ECISLEEP என மாற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Official twitter handle of @ECISVEEP should be changed to ECISLEEP.
— Mahua Moitra (@MahuaMoitra) May 20, 2024
- கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.
- அபிஜித் பாஜக சார்பாக தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்து பாஜகவில் சேர்ந்தார்.
பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அபிஜித் கீழ்த்தரமான விமர்சனம் செய்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில், பாஜக வேட்பாளரான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
- மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்?
- மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது.
2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர்ந்தார்.
பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித், "மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்? உங்கள் விலை ₹10 லட்சம். ஏனென்றால் நீங்கள் மேக் அப் போடுகிறீர்கள். மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது" என்று இழிவாக பேசியுள்ளார்.
இதன் அடிப்படையில், பாஜக வேட்பாளரான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
- பா.ஜனதா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வாக்குகளை சூறையாட முயற்சி செய்கிறது- திரிணாமுல் காங்கிரஸ்
- வாக்கு இயந்திரத்தில் பா.ஜனதா டேக் தொங்கவிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலின் 6-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா உள்ளிட்ட 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கியது. பங்குராவில் தொகுதியில் உள்ள ரகுநாத்பூரில் ஐந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக எழுதப்பட்ட டேக் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் "பா.ஜனதா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வாக்குகளை சூறையாட முயற்சி செய்கிறது என்பதை தொடர்ந்து மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். இன்று ஐந்து வாக்கு இயந்திரத்தில் பா.ஜனதா டேக் தொங்கவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளத.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் "வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய பூத் ஏஜென்ட்கள் கையெழுத்திட்ட பொதுவான டேக் தொங்கவிடப்படும். வாக்கு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்படும்போது ஆய்வு மேற்கொண்டு ஏற்பாடு செய்யும்போது ஹாலில் பா.ஜனதா வேட்பாளருடைய பிரதிநிதிகள்தான அங்கு இருந்தார்கள். இதனால் அவர்களுடைய கையெழுத்து மட்டும் வாங்கப்பட்டது.
எனினும், 56,58,60,61,62 ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்படும்போது அனைத்து ஏஜென்ட்களும் இருந்தனர். அவர்களுடைய கையெழுத்துகள் பெறப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிகளின் பின்பற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
- ஓபிசிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசின் துரோகத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
- மேற்கு வங்காள ஓபிசிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் பராசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
ஓபிசிகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசின் துரோகத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. சமரச அரசியல் மற்றும் வாக்கு ஜிஹாத் வசதிக்காக ஓபிசி இளைஞர்களின் உரிமைகளை அந்த கட்சி பறித்து விட்டது. மேற்கு வங்காள ஓபிசிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.
துரோகத்தையும், பொய்களையும் வெளிப்படுத்துபவர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்காது என்பதற்கு நீதிமன்ற உத்தரவை எதிர்ப்பது சிறந்த சாட்சி. நீதித்துறையை இந்த கட்சியால் எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்று நான் வியப்படைகிறேன். நீதித்துறை மற்றும் நம்முடைய அரசியலமைப்பு மீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லையா? அவர்கள் நீதிபதிகளை தாக்கும் முறை இதுவரை இல்லாததாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி நாளை மாலை கன்னியாகுமரி வருகிறார்.
- தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக தியானத்தில் ஈடுபட இருப்பதால் எதிர்க்கட்சிகள் கேள்வி.
மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்வடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாளை மாலை கன்னியாகுமரி செல்கிறார்.
கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூலை 1-ந்தேதி மாலை 3.30 மணிக்குதான் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.
தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
பிதரமர் மோடி தியானம் செய்வது டிவி-யில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். அவரால் தியானம் செய்ய முடியும். ஆனால், அது டிவில் ஒளிபரப்ப முடியாது. ஒளிபரப்பப்பட்டால் அது தேர்தல் விதியை மீறுவாகும். தியானம் செய்யும் யாருக்கும் கேமரா தேவையா?. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக 48 மணி நேர அமைதியான காலத்தில் வாக்கு சேகரிப்பதற்கான வழியாகும்.
இந்த முறை பாஜக அதிகாரத்திற்க வந்தால் எந்த அரசியல் கட்சியோ, தேர்தலோ, சுதந்திரமோ, மதமோ, மனிதாபிமானமோ அல்லது கலாசாரமோ இருக்காது.
மேற்கு வங்காளத்தில் சிறந்த முடிவை எட்டுவோம் என பிரதமர் மோடி கூறுகிறார். இதன் அர்த்தம் அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதுதான். மேற்கு வங்காளத்தில் அவர்கள் ஜீரோதான் பெறுவார்கள்.
நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்காமல் இருந்திருந்தால், இன்று கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்திருக்க முடியாது.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- கருத்துக் கணிப்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
- ஆனால், மம்தா பானர்ஜியின் கட்சி 29 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு பா.ஜனதாவை தனியாக எதிர்த்து நின்றார் மம்தா பானர்ஜி. சந்தேஷ்காளி உள்ளிட்ட பல்வேறு விசயங்களை கையில் எடுத்து பா.ஜனதா மம்தா பானர்ஜி கட்சியை ஓரம் கட்ட பார்த்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 22 இடங்களை பிடிக்கும் என தகவல் வெளியானது. அப்போது மம்தா பானர்ஜி கருத்து கணிப்பு பொய்யாகும் என உறுதியாக கூறினார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் முன்னணி வகித்தது. நேரம் செல்ல செல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.
தற்போது 29 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 12 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த முறை 18 இடங்களை பிடித்த பாஜக, தற்போது 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மம்தாவின் 29 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
- பா.ஜனதா தனியாக 240 இடங்கள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் ஜே.பி. நட்டா அமித் ஷாவுடன் ஆலோசனை.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பா.ஜனதா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான 272 என தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான் கட்சி ஆகியவற்றின் ஆதரவு ஆட்சி அமைக்க தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டா வீட்டிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah arrives at the residence of BJP chief JP Nadda. pic.twitter.com/GK7get69uR
— ANI (@ANI) June 4, 2024
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து விரிவான ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பு ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
#WATCH | Delhi: Defence Minister and BJP leader Rajnath Singh arrives at the residence of party chief JP Nadda. pic.twitter.com/3uL2cUkzUs
— ANI (@ANI) June 4, 2024
இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 தேர்தலில் பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 240 இடங்களில்தான் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியில் தோற்றுவிட்டார்கள்.
- ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, பிரதமராக மோடி பதவியேற்ற ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்ததாக அக்கட்சியின் எம்பி சகரிகா கோஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சகரிகா கோஸ் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்கு கொண்டு வரப்படுகிறார் என்று மம்தா பானர்ஜி அதிருப்தியில் இருந்தார். இதனால் பிரதமர் மோடி பதவியேற்ற போது, நாட்டின் ஒரே ஒரு பெண் முதல்வர் மம்தா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியில் தோற்றுவிட்டார்கள். ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை. மோடியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. 12 இடங்களில் வெற்றி பெற்றது.
- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பா.ஜ.க. எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என திரிணாமுல் கூறியது.
கொல்கத்தா:
பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. 12 இடங்களில் வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி,
வங்காளத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பா.ஜ.க. எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எங்களுடன் இணைவார்களா இல்லையா என்பது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரியான மம்தா பான்ர்ஜி இன்று கூச் பெஹார் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது அங்குள்ள மதன் மோகன் கோவிலில் மம்தா பானர்ஜி சாமி தரிசனம் செய்தார்.
கிரேட்டர் கூச் பெஹார் மக்கள் இயக்க தலைவர் மற்றும் பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யான அனந்த மகாராஜை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார். அப்போது அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
#WATCH | West Bengal Chief Minister Mamata Banerjee meets Greater Cooch Behar People's Association leader and BJP MP Nagendra Ray alias Anant Maharaj.
— ANI (@ANI) June 18, 2024
The West Bengal CM also offered prayers at Madan Mohan Temple, in Cooch Behar. pic.twitter.com/dFQkK4W8cY
- காங்கிரஸ் கட்சி எம்.பி. கே சுரேஷ் சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
- இது தொடர்பாக எங்களிடம் ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்துள்ள காரணத்தினால் காங்கிரஸ் கட்சி கே. சுரேஷை சபாநாயகர் போட்டிக்கு நிறுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய என்டிஏ விரும்புகிறது. துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுத்தால்தான் ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய சம்மதிப்போம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை போட்டி ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவு கேட்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் உள்ளது. இதனால் அந்த கட்சியின் ஆதரவும் முக்கியது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து எங்களிடம் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தப்படவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறுகையில் "இது தொடர்பாக எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. துரதிருஷ்டவசமாக ஒருதலைபட்சமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி சபாநாயகர் தேர்தல் தொடர்பாக முடிவு செய்வார்" என்றார்.
மக்களவையில் எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டிருந்தபோது அபிஷேக் பார்னஜி உடன் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.