என் மலர்
நீங்கள் தேடியது "train accident death"
- சரக்கு ரெயில் வண்டி கார்த்திக் செல்வம் மீது மோதியதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் பள்ளிக் கூடத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் செல்வம் (வயது 26). தையல் வேலை செய்து கொண்டு ஆடுகள் வளர்த்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் 4 மணிக்கு வாடிப்பட்டி-சோழவந்தான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் கீழ்நாச்சிகுளம் பகுதியில் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு கார்த்திக் செல்வம் சென்றுள்ளார். அப்போது கூடல் நகரில் இருந்து திண்டுக்கல் சென்ற சரக்கு ரெயில் வண்டி கார்த்திக் செல்வம் மீது மோதியதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த மதுரை ரெயில்வே சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் செல்வம் ரெயில் மோதி விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத்தூர்:
கோவை எக்ஸ்பிரஸில் அசாம் மாநிலம் பகுதியை சேர்ந்த சுஜன் புடியல் வயது (35). இவரது தந்தை பகத்புடியல். இவர்கள் இருவரும் அசாமில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு செல்ல கோவை எக்ஸ்பிரஸில் பயணம் செய்துள்ளனர். அப்போது நேற்று மாலை 5 மணியளவில் ரெயில் சாமல்பட்டி அருகே உள்ள கே.எட்டிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அதில் அவர் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜன்புடியல் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடன் இருந்த அவரது தந்தை பகத் புடியலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.