என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tulsi Gabbard"

    • இரு நாட்டு உளவுத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் பேசினர்.
    • நாடுகடத்தல் மற்றும் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவரது அரசில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் உள்ளார்.

    இந்நிலையில் துளசி கப்பார்ட் இந்தியா வருகை தந்துள்ளார். நேற்று காலை இந்தியாவுக்கு வருகை தந்த அவர் டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பயங்கரவாதம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கும், இரு நாட்டு உளவுத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் பேசியதாக தெரிகிறது.

     

    அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய எதிர்ப்பு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

    இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடியை எதிர்ப்பதற்கான ஒத்துழைப்பு மற்றும் நாடுகடத்தல் மற்றும் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள துளசி கப்பார்ட், டெல்லியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் ரெய்சினா பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக நாளைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இதை முடித்துவிட்டு அடுத்து ஜப்பான், தாய்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணப்படுகிறார் துளசி கப்பார்ட்.

    • அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார்.
    • துளசிக்கு முக்கிய பதவியை டிரம்ப் வழங்கி உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இதில் துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கப்பார்ட், தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார்.

    அவர் தனது புகழ்பெற்ற வாழ்க்கையை வரையறுத்து உள்ள அச்சமற்ற உணர்வை நமது உளவுத்துறை சமூகத்திற்கு கொண்டு வருவார். நமது அரசியலமைப்பு உரிமைகளை வென்றெடுப்பார் என்பது எனக்குத் தெரியும் என்றார்.

    தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்ட் முக்கிய மானவர். பிரசாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு எதிராக வும், அக்கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

    டிரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டு சேர்த்தார். ஹவாய் மாகாணத்தில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட துளசி அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. ஆவார்.


    ஆனால் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. இவரது தாய் கரோல் கப்பார்ட் இந்துவாக மதம் மாறினார். இதனால் அவர் தனது 5 குழந்தைகளுக்கும் இந்து பெயர்களை வைத்தார்.

    துளசி கபார்ட் ராணு வத்தில் பணியாற்றி லெப்டி னன்ட் கர்னல் அந்தஸ்து வரை உயர்ந்தார். ஈராக்கில் ராணுவ பணியை மேற்கொண்டார். முதலில் ஜனநாயக கட்சியில் இருந்த துளசி கடந்த 2022-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் டிரம்பின் குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவரது கொள்கைகள் மற்றும் பேச்சுக்கள் டிரம்பை கவர்ந்தது. இதன்மூலம் துளசிக்கு முக்கிய பதவியை டிரம்ப் வழங்கி உள்ளார்.

    • இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும்.
    • டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம்

    அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவரது அரசில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் உள்ளார்.

    இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, நான் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

    இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும். நான் ஜப்பான், தாய்லாந்து, இந்தியாவுக்குச் செல்வேன்.

    அதன்பின் அமெரிக்காவுக்கு திரும்பும்போது பிரான்சுக்கு செல்ல உள்ளேன். அதிபர் டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது அவரை துளசி கப்பார்டை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    அமெரிக்க அதிபர் பதவிக்கு 2020-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடுவதாக ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட் அறிவித்துள்ளார். #TulsiGabbard #2020presidentialrun
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாழும் இந்து மக்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள்தொகையில் ஒருசதவீதமாக மட்டுமே உள்ள நிலையில் கடந்த 2016 பாராளுமன்ற தேர்தலில் 5 இடங்களில் இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றனர்.

    இவர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட், 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து நான்காவது முறையாக ஹவாய் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை (செனட்) உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துல்சி கபார்ட், அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த அதிபர் என்ற சிறப்பிடத்தை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனினும், அதிபர் பதவிக்கான வேட்பாளராக அவரை முன்னிறுத்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஜனநாயக கட்சி பொறுப்பாளர்களின் ஆதரவை அவர் முன்னதாக பெற வேண்டியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் தெரிவித்திருந்தார்.


    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக களமிறங்கிய பெர்னி சான்டர்ஸ்-ஐ துல்சி கபார்ட் ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு திரட்டும் இயக்கத்தை தொடங்கிய துல்சி கபார்ட், ‘நமது நாட்டுக்காகவும் நமக்காகவும் நாம் ஒன்றிணைந்து நின்றால் நம்மால் வெல்ல முடியாத சவால் என்று ஏதுமில்லை. நீங்கள் என்னோடு இணைவீர்களா?’ என்று குறிப்பிட்டுள்ளார். #TulsiGabbard #2020presidentialrun 
    அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TulsiGabbard #USPresidency2020
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை.

    இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடேன், இந்திய வம்சாவளி செனட்டர் கமலா ஹாரிஸ், செனட் சபை உறுப்பினர்கள் எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

    இந்த வரிசையில் அமெரிக்காவின் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்டின் (வயது 37) பெயரும் தற்போது இணைந்து இருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்கு சொந்தமான சமோயா தீவை சேர்ந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    அப்போது துளசி கப்பார்ட், பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது 4-வது முறையாக கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

    ஜனநாயக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக எழுச்சி பெற்று வரும் துளசி கப்பார்ட், தற்போது நாடாளுமன்றத்தின் முக்கிய குழுக்களான ஆயுத சேவைகள் கமிட்டி மற்றும் வெளி விவகாரங்களுக்கான கமிட்டிகளில் அங்கம் வகித்து வருகிறார். இந்தியா-அமெரிக்க உறவுக்கு ஆதரவு, ஈராக் போருக்கு எதிர்ப்பு, சவுதிக்கு ஆயுதங்கள் விற்பனைக்கு எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகளால் ஜனநாயக கட்சியின் பலமிக்க குரலாக துளசி விளங்கி வருகிறார்.

    அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட துளசிக்கு ஆதரவு வலுத்து வருகிறது. எனவே அவர் இந்த தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 9-ந் தேதி நடந்த மாநாடு ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் சம்பத் சிவாங்கி, துளசி கப்பார்டை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர், துளசி கப்பார்ட், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஆக வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

    குடியரசு கட்சியை சேர்ந்தவரும், கடந்த பல ஜனாதிபதி தேர்தல்களுக்கு அந்த கட்சி சார்பில் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு இருந்தவருமான டாக்டர் சம்பத் சிவாங்கி, ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசிக்கு ஆதரவாக பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    இதைக்கேட்டதும் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். எனினும் பின்னர் பேசிய துளசி கப்பார்ட், சம்பத் சிவாங்கியின் கருத்தை ஆதரிக்கவோ, மறுக்கவோ இல்லை. அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நன்கொடையாளர்களிடம் துளசி சார்பில் நிதி திரட்டும் வேலைகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்டுக்கு இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. அங்குள்ள முக்கியமான பல மாகாணங்களில் தேர்தல் வெற்றிக்கு இந்தியர்கள் முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.

    ஜனநாயக கட்சி சார்பில் துளசி கப்பார்ட், வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து வேட்பாளர் என்ற பெருமையை இவர் பெறுவார். இதைப்போல அவர் ஜனாதிபதியாக தேர்வானால் அமெரிக்காவின் இளமையான மற்றும் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. #TulsiGabbard #USPresidency2020 
    ×