என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udayanidhi"

    • இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
    • இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இன்று (21ம் தேதி) தொடங்கி வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.

    4 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்

    இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ஏக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சர்வதேச புரோ பீச் வாலிபால் தொடர் போட்டிகளை மாமல்லபுரத்தில் துவங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மதிப்புமிக்க போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் இந்தியா சார்பில் பங்கேற்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.

    இதில், SDAT மூலம் பயிற்சி பெற்ற 2 பெண் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். இந்த உற்சாகமான நிகழ்வில் தங்கள் முத்திரையை பதித்து, அனைத்து வீரர்களும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிறந்த வெற்றியை பெறுவார்கள் என்றும் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப்பில் காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்தார்.
    • மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.

    உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர். சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், கேரம் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தமிழக அரசு எந்த ஊக்கத்தொகையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கேரம் சாம்பியன் காசிமாவின் தந்தை தமிழக அரசு தனது மகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்காததில் வருத்தம் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம் வென்ற காசிமாவுக்கு ரூ. 1 கோடியும் குழு போட்டியில் தங்கம் வென்ற நாகஜோதிக்கு ரூ. 50 லட்சமும் இரட்டையர் போட்டியில் தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ. 50 லட்சமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது..

    இந்நிலையில், உலக கேரம் போட்டியில் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி இன்று பரிசுத்தொகையை வழங்கினார்

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.

    அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற தங்கை காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்து திரும்பினார்.

    அவரைப்போலவே, தங்கை மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.

    வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.

    எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தங்கை எம்.காசிமா -க்கு ரூ.1 கோடி, தங்கை வி.மித்ரா -க்கு ரூ.50 லட்சம், தங்கை கே.நாகஜோதி -க்கு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம்.

    தங்கைகள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் கழக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • கலை நிகழ்ச்சி களை பார்வையிட்டு சமத்துவப் பொங்கலிடுகிறார்.
    • 1000 ஏழை எளியவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில், ஆலந்தூர் தொகுதியில் அடங்கிய, ஆலந்தூர் வடக்கு பகுதி, நந்தம்பாக்கம் பர்மா காலனியில் சமத்துவ பொங்கல் விழா நாளை 13-ந் தேதி மாலை 5 மணியளவில் மாவட்டச் செயலாளர்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறுகிறது.

    அவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி, எம்.எல்.ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் விஸ்வநான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பகுதி செயலாளர் குணாளன் வரவேற்றுப் பேசுகிறார்.

    விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சி களை பார்வையிட்டு சமத்துவப் பொங்கலிடுகிறார்.

    இவ்விழாவில் 1000 ஏழை எளியவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இதில் தி.மு.க. பொருளா ளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணா நிதி, வரலட்சுமி மதுசூதனன், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள் வீ.தமிழ்மணி, இதயவர்மன், மாவட்ட ஊராட்சி தலைவர், குன்றத் தூர் ஒன்றிய செயலாளர், படப்பைமனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ்.

    பகுதி செயலாளர்கள்-என்.சந்திரன், பம்மல் வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணா துரை, த.ஜெயக் குமார், மூவரசம்பட்டு சதீஷ், மு.ரஞ்சன், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நம் பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைப் போற்றி மகிழ்வோம்

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி பொங்கல் வாழ்த்து பெற்றார்.

    இது தொடர்பாக உதயநிதி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய ஒன்றியத்தின் ஒப்பற்றத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் - அன்னையாரிடமும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு குடும்பத்தாருடன் இன்று காலை வாழ்த்து பெற்றோம்.

    நம் பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைப் போற்றி மகிழ்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • துணை முதல்வர் என்றால் பெரும்பான்மையாக உள்ள 80% மக்களை கொல்லாலாமா? என எச். ராஜா ஆவேசம்

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற மாநாடு நடத்தப்பட்டது.

    இந்த மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி, ""இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

    சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்று தெரிவித்தார்.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியதற்கு நாடு முழுவதும் உள்ள பாஜக, இந்துத்துவ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், சனாதன விவகாரத்தில் விரைவிலேயே உதயநிதி கைது செய்யப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச். ராஜா, "கூடிய விரைவில் எல்லா மாநிலங்களிலும் உதயநிதிக்கு எதிரா பிடிவாரண்ட் வந்து விடும். சீக்கிரமாகவே ஜெயிலுக்கு போகி விடுவார்.

    சனாதன இந்து தர்மத்தை நீ டெங்கு கொசு மலேரியா கொசு மாதிரி கொன்னுடுவியா? அவ்ளோ திமிரு உங்களுக்கு இருக்கா?

    துணை முதல்வர் என்றால் பெரும்பான்மையாக உள்ள 80% மக்களை கொல்லலாமா? அவர்களை டெங்கு, மலேரியா கொசு மாதிரி அழிப்பேன்னு பேசுவாரா?

    அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் யார் இந்த சார் ஏன்னு சொல்ல உதயநிதிக்கு துப்பு இல்லை. ஆனா இந்து மதத்தை கொசு மாதிரி கொல்லலாம் என்று அவர் பேசலாமா?

    இந்த தேச விரோத தீய சக்திகள் 2026 இல் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

    • மகளிர் U19 டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி இந்திய அணி அசத்தியது.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினியை நினைத்து பெருமை கொள்கிறேன்

    2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துகள். அவர்களின் கூட்டுமுயற்சியும், விடாமுயற்சியும்தான் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

    வரலாற்றுச் சாதனை புரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினியை நினைத்து பெருமை கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • PM SHRI திட்டத்தில் கையெழுத்து போட்டால் 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" என அமைச்சர் தெரிவித்தார்.
    • நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்” என அமைச்சர் சொன்னார்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களிடம் சமர்ப்பித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "கல்வி நிதி விடுவிப்பு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்தபோது, "மும்மொழிக் கொள்கையை ஏற்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள்? கல்வியில் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள். நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்" எனச் சொன்னார்.

    இவ்வளவு உத்வேகமாக பேசிவிட்டு, "PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடுங்கள்.. 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார். இதைத்தான் நமது முதலமைச்சர் 'BLACK MAIL' எனக் கூறுகிறார்" என்று தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி இனிமேல் தமிழ்நாட்டிக்கரு வந்தால் Get Out Modi என்று சொல்வார்கள்" என்று உதயநிதி தெரிவித்தார்.
    • "GET OUT MODI என்று சொல்ல முடியுமா என்று உதயநிதிக்கு அண்ணாமலை சவால் விட்டிருந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு பேசிய துணை முதல்வர் உதயநிதி, "முன்பெல்லாம் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் Go Back Modi என்று தான் சொல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நிதி தராத பிரதமர் மோடி இனிமேல் இங்கு வந்தால் Get Out Modi என்று சொல்வார்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கரூரில் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "GET OUT MODI என்று சொல்ல முடியுமா என்று உதயநிதிக்கு சவால் விட்டிருந்தார்.

    இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் #GetOutModi என்ற ஹேஸ்டேக் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி திமுகவினர் #GetOutModi என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    #GetOutModi என்ற ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும் உலக அளவில் 2 ஆவது இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.

    ×