என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP"

    • திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடிக்க 'பொறி' வைக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம்  சித்தார்த் நகர் கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. ஊருக்குள் சிறுத்தை புகுந்த தகவல் பரவியதால் மக்கள் பீதியடைந்தனர்.

    இந்நிலையில் அந்த சிறுத்தை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்தது. அப்போது சிறுத்தை வேகமாக கிராம மக்களை நோக்கி சென்று தாக்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் சிறுத்தையை கட்டைகளால் தாக்கினர். அப்போது சிறுத்தை வேகமாக ஓடி தப்பி சென்றது.




    இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தைப்புலி கிராமத்திற்குள் புகுந்த தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இதில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர்களை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடிக்க அங்கு 'பொறி' வைக்கப்பட்டுள்ளது.  

    இந்நிலையில் அந்த சிறுத்தை கிராம மக்களை தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு டெல்லியில் உள்ள மதர் மேரி பள்ளி, துவாரகாவில் உள்ள டிபிஎஸ் பள்ளி மற்றும் சன்ஸ் கிரிதி ஆகிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நொய்டாவில் உள்ள பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    டெல்லியில் உள்ள பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே மின்னஞ்சல் மூலம் ஒரே விதமான முறையில் பல்வேறு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • தற்காலிக நீச்சல் குளத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக பள்ளிக் குழந்தைகள் அதில் இறங்கி விளையாடி வருகின்றனர்.
    • இப்பகுதியில் கடந்த சில நாட்களாக 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் தேர்வுகளை முடித்து விடுமுறையை அறிவித்துவிட்டன. இதனிடையே இறுதித் தேர்வுகளை முடிக்காத சில பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் வெப்பத்தைத் தணிக்க கன்னோஜ் மாவட்டம் மக்சவுனாபூர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இருந்த வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றி உள்ளது பள்ளி நிர்வாகம். இந்த தற்காலிக நீச்சல் குளத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக பள்ளிக் குழந்தைகள் அதில் இறங்கி விளையாடி வருகின்றனர்.

    இதனால் வெப்பம் தணிவதோடு, குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக துள்ளி விளையாடும் வீடியோவையும் பள்ளி நிர்வாகிகள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    வகுப்பறை தரையைச் சுற்றி 2 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டு ஒரு அடி உயரத்துக்கு நீர் நிரப்பப்படுகிறது. இதில்தான் அந்த குழந்தைகள் நீந்தி விளையாடி வருகின்றனர்.

    இதுகுறித்து பள்ளி முதல்வர் வைபவ் ராஜ்புத் கூறியதாவது:-

    "இப்பகுதியில் கடந்த சில நாட்களாக 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. தாங்க முடியாத அளவுக்கு வெப்ப அலையும் வீசுகிறது. எனவே, குழந்தைகளை வெப்ப அலையில் இருந்து காக்க இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். முன்பு வெயில் அதிகமாக இருந்ததால் குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்து வீட்டிலேயே இருந்தனர். தற்போது நீச்சல் குளம் கட்டிய பின்னர் அதிக அளவில் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்".

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடியிடம் திட்டம் பற்றிய விவரங்களை வழங்கி இருந்தார்.
    • சுற்றுலா துறை சார்பில் டாடா சன்ஸ்-க்கு நிலம் வழங்கப்படுகிறது.

    அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியகத்தை கட்டமைப்பதற்கான திட்டத்தை டாடா சன்ஸ் கைப்பற்றி இருக்கிறது. இதற்கான ஒப்புதலை அம்மாநில சட்டசபை வழங்கியது. அயோத்தியில் கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    மேலும், இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியிடம் திட்டம் பற்றிய விவரங்களை கடந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கி இருந்தார்.

    இந்த நிலையில், கோவில்களின் அருங்காட்சியக திட்டத்தை செயல்படுத்த டாடா சன்ஸ் குழுமத்திற்கு உத்திர பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. ரூ. 650 கோடியில் உருவாகும் இந்த திட்டத்திற்காக உத்திர பிரதேச அரசின் சுற்றுலா துறை சார்பில் டாடா சன்ஸ்-க்கு நிலம் வழங்கப்படுகிறது. 90 ஆண்டுகள் லீசுக்கு வழங்கப்படும் நிலத்திற்காக ரூ. 1 மட்டுமே வசூலிக்கப்பட இருக்கிறது.

    அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியக திட்டத்திற்காக டாடா சன்ஸ் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 650 கோடியை செலவு செய்ய இருக்கிறது. இந்த அருங்காட்சியகம் நாட்டில் உள்ள கோவில்களின் வரலாறு மற்றும் புகழ்பெற்ற கோவில்களின் கட்டமைப்பு திறன் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும்.

    அருங்காட்சியகம் மட்டுமின்றி உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சி திட்டம் ஒன்றும் டாடா சன்ஸ்-க்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மதிப்பு மட்டும் ரூ. 100 கோடி ஆகும். இதே போன்று லக்னோ, பிரயாக்ராஜ் மற்றும் கபில்வஸ்து ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகளை அறிமுகப்படுத்தவும் சட்டபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    • மழை நீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
    • இப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் மிகவும் தவித்து வருகிறோம்.

    டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லி மற்றும் புறநகரில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல அண்டை மாநிலங்களிலும் கனமழை பெய்தது.

    மழை காரணமாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் முரதாபாத் மாவட்டத்தில் போலாநாத் காலனியில் மழை நீர் தேங்கி உள்ளது. போலாநாத் காலனி பகுதியில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மழை நீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் மழை நீர் வடிகால் இல்லை. இங்கு தேங்கி இருக்கும் நீரில் மூழ்கவும் வாய்ப்பு உள்ளது. நாங்கள் 3 நாட்களாக இங்கு அடைபட்டிருக்கிறோம். நேற்று மட்டும் ஒரு படகு வந்தது. ஒவ்வொரு வருடமும் இப்பகுதியில் இப்படிதான் நடக்கும் என்றார்.

    இந்த பகுதியில் நிலைமை மோசமாக உள்ளது. நாங்கள் படகை பயன்படுத்தி வருகிறோம். இப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் மிகவும் தவித்து வருகிறோம். படகு நேற்றுதான் வந்தது. இந்த தண்ணீரில்தான் பயணிக்க வேண்டும் என்று கூறினார்.

    • நோய்க்கு சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும்.
    • பணியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் நீண்ட காலமாக எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது. இதை துணை முதல்-மந்திரியும், சுகாதார மந்திரியுமான பிரஜேஷ் பதக் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த 17 டாக்டர்களையும் அதிரடியாக பணி நீக்கி அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்ததாவது:-

    நோய்க்கு சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும். மக்களுக்கு சேவை செய்வதும், சுகாதார பணிகளை வழங்குவதும் மிகப்பெரிய பாக்கியம்.

    அதில் எந்தவித அலட்சியத்துக்கோ, ஒழுக்கக் கேட்டுக்கோ இடம் இல்லை.

    ஆனால் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவ அதிகாரிகளாக பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அலட்சியம் காட்டியுள்ளனர். அத்துடன் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் நீண்ட நாட்களாக பணிக்கு வராமல் இருந்துள்ளனர்.

    எனவே அந்த 17 டாக்டர்களையும் பணியில் இருந்து நீக்குமாறு சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

    இவ்வாறு துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியுள்ளார்.

    துணை முதல்-மந்திரியின் இந்த உத்தரவு கிடைத்திருப்பதாகவும், அதன்படி நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    எனினும் பணியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை.

    • பாம்பு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற உடலாலும், சிவப்பு நிற கண்களையும் கொண்டுள்ளது.
    • நாகப்பாம்புகள் விருப்பமான இரையில் கரையான்கள் மற்றும் தவளைகள் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டார்.

    உத்தரபிரதேசத்தின் ஈர நிலங்களில் புதிய வகை நாகப்பாம்பு இனம் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    அல்பினோ ஸ்பெக்டாக்கிள்ட் கோப்ரா என்று பெயரிடப்பட்ட இந்த பாம்பு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற உடலாலும், சிவப்பு நிற கண்களையும் கொண்டுள்ளது. அதன் அரிய தோற்றம் கவனத்தை ஈர்க்கிறது.

    சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரயாக்ராஜில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி கல்வி பயிற்சி மற்றும் சூழலியல் மறுசீரமைப்பு மையத்தின் ஆராய்ச்சி மாணவர் ராகுல் நிஷாத் இதனை கண்டுபிடித்துள்ளார்.

    அவரது கண்டுபிடிப்புகள் சர்வதேச இதழான "ரெப்டைல்ஸ் அண்ட் அம்பிபியன்ஸ்" இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நாகப்பாம்புகளில் உள்ள அல்பினிசத்தின் மரபணு நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அங்கு இயற்கை நிற நிறமியான மெலனின் இல்லை.

    பிரயாக்ராஜை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் நிஷாத் டேராடூனில் உள்ள டூன் பல்கலைக்கழகத்தில் வனவியல் படிப்பை தொடர்ந்தார், மேலும் பிரயாக்ராஜின் நைனியில் உள்ள ஷுவாட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

    இதுதொடர்பாக ராகுல் நிஷாத் கூறுகையில்,

    இந்த கண்டுபிடிப்பு பல்லுயிர் பற்றிய புரிதலை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல் ஈரநிலங்களின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

     

     

    நாகப்பாம்புகள் விருப்பமான இரையில் கரையான்கள் மற்றும் தவளைகள் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டார். இது பெரும்பாலும் ஈரநிலங்கள் மற்றும் சமவெளிகள் போன்ற இரைகள் நிறைந்த பகுதிகளில் வாழ்கிறது.

    அல்பினோ ஸ்பெக்டாக்கிள்ட் கோப்ராவின் கண்டுபிடிப்பு, நாட்டில் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு முயற்சிகளின் தற்போதைய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

     

    • அமித்-ஐ காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • காரில் வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    உத்தர பிரதேச மாநிலம் புலான்ஷர் பகுதியை சேர்ந்தவர் அமித். கடந்த 21 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, வீடு திரும்பிக் கொண்டிருந்த அமித்-ஐ காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு, அவர் வந்த காரில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்று கூறி அமித்-ஐ காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அமித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், சம்பவத்தன்று அமித் வந்த காரை போலீசார் நிறுத்துவது, அதன்பிறகு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்து காரில் வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    சிகர்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து வாலிபர் மீது பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் அவுட்போஸ்ட் இன்சார்ஜ், சிகர்பூர் காவல் நிலைய இன்சார்ஜ் மற்றும் இரு கான்ஸ்டபில்கள் என மொத்தம் நான்கு போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் மிஷ்ரா தெரிவித்தார். 

    • எவ்வளவு தேடியும் அவரால் தனது மொபைல் போனை கண்டறிய முடியவில்லை.
    • புகார் கொடுத்த குமாரை அதிரச் செய்யும் வகையில் பதில் அளித்தார்.

    உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 91 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கனௌர். பாஹதுர்கார் காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் இந்த கிராமத்தை சேர்ந்தவர் குமார். கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்கச் சென்ற இடத்தில் தனது மொபைல் போனை குமார் தவறவிட்டுள்ளார். எவ்வளவு தேடியும் அவரால் தனது மொபைல் போனை கண்டறிய முடியவில்லை.

    இதன் காரணமாக காவல் நிலையம் விரைந்த குமார் தனது மொபைல்போன் காணாமல் போனதை கூறி, அதனை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார். மொபைல் போனை பறிக்கொடுத்த குமார் மனவேதனையில் கூறிய புகாரை முழுமையாக கேட்டுக் கொண்ட போலீஸ் அதிகாரி, இறுதியில் புகார் கொடுக்க குமாரை அதிரச் செய்யும் வகையில் பதில் அளித்தார்.

    மொபைல் பறிக்கொடுத்த குமாரிடம் அதனை சீக்கிரம் கண்டுபிடிக்கலாம் என்று கூறுவதற்கு பதில் போலீஸ் அதிகாரி- முதலில் கடைக்குச் சென்று சூடான பாதுஷா அல்லது ஜிலேபி ஆகியவற்றில் ஒரு கிலோ வாங்கி வருமாறு கூறினார். இனிப்பு வாங்காமல் போலீசார் புகாரை பதிய மாட்டார்கள் என்று உணர்ந்தவராக மொபைலை பறிக்கொடுத்த குமார் இனிப்பு கடைக்கு சென்று ஜிலேபி வாங்கி வந்தார்.

    குமார் வாங்கி வந்த ஜிலேபியை பெற்றுக் கொண்ட போலீசார், அதன்பிறகு மொபைல் போன் காணாமல் போனதை பதிவு செய்து கொண்டனர். முன்னதாக இதே மாதத்தில் காவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது உருளைக் கிழங்குகளை லஞ்சமாக பெற்றதற்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    • சமூக வலைதளங்களில் இந்திய ரெயில்வே துறையை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
    • சரக்கு ரெயில்களுடன் மோதிய என்ஜின் இந்திய ரெயில்வேயின் கீழ் வராது.

    உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் சரக்கு ரெயிலும் ரெயில் என்ஜினும் மோதிய சம்பவத்தில் எதிர்க்கட்சிகளின் பழி சுமத்தும் விளையாட்டை இந்திய ரெயில்வே அமைச்சகம் கண்டித்ததுடன், நாட்டு மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம் என காங்கிரஸ் கட்சியை எச்சரித்துள்ளது.

    சமூக வலைதளங்களில் இந்திய ரெயில்வே துறையை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. குற்றம்சாடும் போதெல்லாம் அதற்கு இந்திய ரெயில்வே விளக்கம் அளித்து வருகிறது. இதனால் இந்திய ரெயில்வே- காங்கிரஸ் இடையே வார்த்தை போர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில தற்போது உ.பி. ரெயில் விபத்து தொடர்பாக வார்த்தைப்போர் நடைபெற்றுள்ளது.

    ரேபரேலியில் சரக்கு ரெயிலும் ரெயில் என்ஜினும் மோதிய படத்தை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு "ரீல் அமைச்சரே (ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை காங்கிரஸ் இப்படி அழைக்கிறது). மற்றொரு சிறிய விபத்து நடந்துள்ளது. இந்த நேரம் இந்த சிறிய விபத்து உ.பி. ரேபரேலியில் நடைபெற்றுள்ளது. லோகோ பைலட் (டிரைவர்) மற்றும் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது உங்களுடைய தகவலுக்காக..." எனக் குறிப்பிட்டுள்ளது.

    இதற்கு ரெயில்வே அமைச்சகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் விளக்கமும் அளிக்கப்பட்டது.

    ரெயில்வே அமைச்சகம் எக்ஸ் தளத்தில், "சரக்கு ரெயில்களுடன் மோதிய என்ஜின் இந்திய ரெயில்வேயின் கீழ் வராது. டிரைவர் கூட ரெயில்வேயை சேர்ந்தவர் இல்லை" என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் சரக்கு ரெயிலும், ரெயில் என்ஜினும் நேருக்கு நேர் மோதியதில் என்ஜின் தடம் புரண்டது. இந்த விபத்து உஞ்சஹரில் உள்ள என்டிபிசி மின்நிலையம் அமைந்துள்ள இடத்தில் திங்கள்கிழமை மாலை நடந்தது. இந்த விபத்து சிக்னல் மற்றும் பாதை சீரமைப்பு குறித்த தவறான தகவல் தொடர்பு காரணமாக ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் லோகோ பைலட் மற்றும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

    முன்னதாக 2014-ம் ஆண்டின் ரெயில் கட்டணம், 2024-ம் ஆண்டின் ரெயில் கட்டணம் ஆகியவற்றை ஒப்பிட்டு காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில செய்தி வெளியிட்டிருந்தது. இதில் உள்ள விவரங்கள் சரியான தரவுகள் அல்ல என ரெயில்வே அமைச்சகம் பதில் அளித்திருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன.

    உத்தர பிரதேசத்தின் இந்தோ-நேபாள எல்லை மாவட்டமான பஹ்ரைச்சில் உள்ள மஹாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர்.

    ஓநாய்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால், இப்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கமின்றி தவிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் காவல் காத்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

    இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வனத்துறையினர், தெர்மல் ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ஓநாய்களை தேடிவருகின்றனர்.

    இது தொடர்பாக பஹ்ரைச் மாவட்டத்தின் வனத்துறை அதிகாரி அஜீத் பிரதாப் சிங் கூறுகையில், "ஜூலை 17 அன்று ஓநாய் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக முதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

    தெர்மல் ட்ரோன்களின் உதவியுடன் ஓநாய்களின் கூட்டத்தை பிடிக்க அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். 6 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓநாய்கள் வழித்தடங்களில் 4 பொறிகள் வைத்துள்ளோம்" என்று கூறினார்.

    வன அதிகாரிகளின் மதிப்பீட்டில், மனிதர்களை மட்டுமே தாக்கும் 5-6 ஓநாய்கள் இப்பகுதியில் உள்ளன.

    20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன. 2004-ம் ஆண்டில், ஓநாய்களின் வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 32 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2020-ம் ஆண்டிலும் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

    குழந்தைகளுடன் குடும்பமாக திறந்த வெளியில் தூங்க வேண்டாம் என அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    ×