என் மலர்
நீங்கள் தேடியது "UPI"
- யு.பி.ஐ. முகவரிகள் செயலிழக்கம் செய்யப்பட்டு விடும்.
- யு.பி.ஐ. சேவையை பயன்படுத்த முடியாத நிலை.
தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (NPCI) யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் நடைமுறைகளில் புதிய விதிமுறைகளை கொண்டுவருகிறது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரவுள்ளது. புதிய விதிமுறைகள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தி, யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய விதிமுறைகளுக்கு அனைத்து யு.பி.ஐ. உறுப்பினர் வங்கிகள், மூன்றாம் தரப்பு செயலிகள், யு.பி.ஐ. சேவை வழங்குநர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். புதிய விதிமுறைகளின் படி நீண்ட காலம் செயலிழக்கப்பட்ட நிலையில் உள்ள மொபைல் நம்பர்களுடன் இணைக்கப்பட்டுள்ள யு.பி.ஐ. முகவரிக்கள் செயலிழக்கம் செய்யப்பட்டு விடும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களை வங்கிகள் செயலற்றதாக கருதும் போது, பயனர்கள் தங்களது விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்ய மறுக்கும் பட்சத்தில் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.
யு.பி.ஐ. சேவைகளை பயன்படுத்தும் பயனர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். யு.பி.ஐ. முகவரியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் நீண்ட காலம் செயலிழந்து இருக்கும் சூழலில், அந்த முகவரி தானாக நீக்கப்பட்டு விடும். இதனால் பயனர்கள் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.
யு.பி.ஐ. சேவைகள் முடக்கப்படாமல் இருக்க சரியான மொபைல் எண் அப்டேட் செய்யப்படுவது அவசியம் ஆகும். இந்தத் திட்டம் தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே பின்பற்றி வரும் திட்டத்தை தழுவியுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி நீண்ட காலம் செயலிழந்துள்ள மொபைல் எண்கள் 90 நாட்களுக்கு பிறகு புதிய பயனர்களுக்கு வழங்கப்பட்டு விடும்.
புதிய விதிமுறைகளின் படி பயனரின் வங்கியால் உறுதிப்படுத்தப்பட்ட மொபைல் நம்பர் அவரது எண் சார்ந்த யு.பி.ஐ. முகவரியாக இருக்கும். கூடுதலாக வங்கிகள் மற்றும் யு.பி.ஐ. சேவை வழங்குநர்கள் தங்களது மொபைல் எண் பதிவுகளை வாராந்திர அடிப்படையில் அப்டேட் செய்ய வேண்டும்.
பயனர் நலன்களை மேலும் பாதுகாக்க, எண் யு.பி.ஐ. முகவரிகளை ஒதுக்குவதற்கு முன் பயன்பாடுகளுக்கு வெளிப்படையான ஒப்புதல் தேவைப்படும். இதனை தானாக செயல்படுத்தும் செட்டிங் செயலற்று இருக்கும் என்பதால், பயனர்கள் தாங்களாகவே தேர்வு செய்ய வேண்டும்.
தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் உறுதிப்படுத்தும் முறைகள் தாமதமாகும் பட்சத்தில், யு.பி.ஐ. செயலிகள் தற்காலிக நடைமுறைகளை பின்பற்றி யு.பி.ஐ. முகவரி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். எனினும், இதுபோன்ற சம்வங்களை உடனடியாக ஆவணப்படுத்த வேண்டும்.
- நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
- UPI சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ [யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்] டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
இந்நிலையில், இந்தியா முழுவதும் பல இடங்களில் பணப் பரிவர்த்தனைக்கான UPI சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யூபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்த முடியாததால் UPI Down என பயனர்கள் பலரும் தங்களது சமூகவலைத் தளங்களில் வேகமாக பதிவிட்டு வருகின்றனர்.
- யுபிஐ சேவை வசதி 2016ல் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது
- அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
புதுடெல்லி:
யுபிஐ என்று அழைக்கப்படும் 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்', ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 730 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அது 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி தொடங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதத்தில், ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
- யுபிஐ சேவை வசதி 2016ல் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது
- யுபிஐ பரிவர்த்தனை அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக 700 கோடியை தாண்டியது.
புதுடெல்லி:
யு.பி.ஐ என்று அழைக்கப்படும் 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்', ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் யுபிஐ பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட்ட தொகை ரூ.12.8 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த மாதத்தைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும்.
இந்திய தேசிய பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. யுபிஐ பரிவர்த்தனை 700 கோடியை தாண்டியது அக்டோபர் மாதத்தில்தான் முதல் முறை.
ஒட்டுமொத்தமாக, 2022-ம் ஆண்டு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7,404 கோடியாகவும், பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.125 லட்சம் கோடியாகவும் உள்ளது. இதன்படி, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2022-ம் ஆண்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 90 சதவீதமும், பரிவர்த்தனை தொகை 76 சதவீதமும் அதிகரித்துள்ளது.
- யுபிஐ பரிவர்த்தைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்தது.
- தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் சார்பில் 1.1 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சார்ந்து யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) பரிந்துரை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் பேமண்ட் சேவை வழங்குவோர் அதிக வருவாய் ஈட்ட முடியும்.
அந்த வகையில் இதற்கான கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி மூலம் வசூலிக்கப்பட இருக்கிறது. இதோடு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த கட்டணங்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
பிபிஐ எனப்படும் பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிக பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

இதற்கான கட்டணம் ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். அதே சமயம் பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது பற்றி இறுதி முடிவை வணிகர்களே எடுக்கலாம். வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகள், அதாவது ஒருவர் நேரடியாக தனது வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பும் தொகைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.
இந்தியாவில் யுபிஐ சார்ந்த பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, பிரபலமான ஒன்றாகவும் இருந்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் வங்கி அக்கவுண்ட்களில் இருந்து மொபைல் போன் மூலமாகவே பணம் அனுப்ப முடியும். பிபிஐ-க்கள் என்பது பணத்தை வைத்துக் கொண்டு பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் டிஜிட்டல் வாலெட்கள் ஆகும்.
பேடிஎம், போன்பெ மற்றும் கூகுள்பே உள்ளிட்டவை பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவையை வழங்கி வருகின்றன. பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி சார்பில் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பின் படி, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை வசூலிக்க பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றுள்ளன.
சென்னை:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வரையில் காஞ்சிபுரம் நீங்கலாக மீதமிருந்த 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்.
இதன் மூலம் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றுள்ளன.
மேலும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் என்.இ.எப்.டி, ஆர்.டி.ஜி.எஸ். உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும்.
தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும்.
ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு மருந்தகங்கள், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலை உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பணமற்ற பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நோக்கியா பிரான்டிங்கில் இரண்டு புதிய மொபைல் போன்கள் அறிமுகம்.
- நோக்கியா ஃபீச்சர் போன்களில் யுபிஐ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய நோக்கியா மொபைல் போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 110 2ஜி மாடல்கள் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இரு மாடல்களும் மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கின்றன.
இத்துடன் நானோ-டெக்ஸ்ச்சர் பாடி மற்றும் பில்ட்-இன் யுபிஐ சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியாவின் பாரம்பரியம் மிக்க உற்பத்தி தரம் மற்றும் வித்தியாசமான ஸ்டைல் உள்ளிட்டவை புதிய மாடல்களிலும் தொடர்கிறது. புதிய நோக்கியா மாடல்களில் பில்ட்-இன் கேமரா, எஸ்டி கார்டு ஸ்லாட், மியூசிக் பிளேயர் மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா 110 4ஜி (2023) அம்சங்கள்:
1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
QCGA பிரைமரி கேமரா
1450 எம்ஏஹெச் பேட்டரி
ப்ளூடூத் 5.0
3.5mm ஹெட்போன் ஜாக்
மைக்ரோ யுஎஸ்பி 2.0
மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்
எஸ் 30 பிளஸ் ஒஎஸ்
வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ
2ஜி, 3ஜி, 4ஜி (நானோ சிம், டூயல் சிம் சப்போர்ட்)
IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்

நோக்கியா 110 2ஜி (2023) அம்சங்கள்:
1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
QCGA பிரைமரி கேமரா
1000 எம்ஏஹெச் பேட்டரி
யுஎஸ்பி கனெக்ஷன், மைக்ரோ யுஎஸ்பி
மைக்ரோ எஸ்டி சப்போர்ட்
எஸ் 30 பிளஸ் ஒஎஸ்
வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ
2ஜி, டூயல் சிம்
IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா 110 4ஜி (2023) மாடல் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 110 2ஜி (2023) மாடல் சார்கோல் மற்றும் கிளவுடி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை விரைவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.
- பிரான்ஸ் அதிபர், பிரதமர், செனட் தலைவர் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்
- பிரான்ஸ் வாழ் இந்தியர்களை சந்தித்தபோது இந்த தகவலை தெரிவித்தார்
இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் சபை தலைவர் ஆகியோரை சந்தித்தார்.
மேலும், புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வெற்றிகரமான பணபரிமாற்ற சேவை UPI-ஐ இனிமேல் பிரான்சில பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்தியா- பிரான்ஸ் UPI பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரான்சின் ஈபிள் டவரில் இருந்து இந்த முறை தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா செல்லும் மக்கள் கையில் பணத்துடன் செல்ல வேண்டாம். UPI பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்.
இந்தியாவின் UPI பல வங்கி கணக்குகளை சிங்கிள் மொபைல் அப்ளிகேசன் மூலம் எளிதாக கையளாமுடியும்.
2016-ம் ஆணடு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையை தொடங்கியது. தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, பொதுமக்கள் ஐந்து ரூபாய் முதல 10 ரூபாய் என டீ அருந்துவதற்குக் கூட UPI பயன்படுத்தி வருகிறாரக்ள்.
கடந்த 2022-ல் என்.பி.சி.ஐ. பிரான்ஸ் உடன் வேகம் மற்றும் பாதுகாப்பு ஆன்லைன் பணபரிவர்த்தனை சிஸ்டம் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கு லைரா எனப் பெயரிட்டிருந்தது.
இந்த வருடம் சிங்கப்பூர் PayNow உடன் பயனர்கள் நாடு கடந்த பரிவர்த்தனைக்கு அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், பூடான், நேபாளத்தில் UPI முறை நடைமுறையில் உள்ளது.
- இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பற்றி உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன.
- பெங்களூருவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் நாட்டின் மந்திரி விஸ்சிங் வந்திருந்தார்.
இந்தியாவில் சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகம் வரை அனைத்து இடங்களிலும் யு.பி.ஐ. மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் முறை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பற்றி உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. இந்நிலையில் பெங்களூருவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் நாட்டின் மந்திரி விஸ்சிங் வந்திருந்தார். அவர் மாநாட்டின் இடையே பெங்களூரு நகர வீதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினார். அப்போது ஒரு கடையில் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கிய அவர் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்திய புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஜெர்மன் தூதரகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
மேலும் இது தொடர்பான பதிவு யு.பி.ஐ. கட்டணங்களின் எளிமையை அனுபவிக்க முடிந்தது என பதிவிட்டுள்ளது.
- புதிய வகை ஏ.டி.எம்.- யு.பி.ஐ. ஏ.டி.எம். என்று அழைக்கப்படுகிறது.
- புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.
மொபைல் சாதனங்களில் இருந்து யுனைஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளும் வசதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சர்வதேச ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில் டெபிட் கார்டு எதுவும் இன்றி ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுக்கும் வழிமுறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அறிமுகமாகி இருக்கும் புதிய வகை ஏ.டி.எம். ஆனது "யு.பி.ஐ. ஏ.டி.எம்." என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.
இவ்வாறு செய்யும் போது பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல், தங்களது மொபைல் போனில் இருக்கும் யு.பி.ஐ. சேவை மூலம் ஏதேனும் செயலி மூலமாக ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.
இது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் ஃபின்டெக் வல்லுனர் ஒருவர் ஏ.டி.எம்.-இல் யு.பி.ஐ. பயன்படுத்தி எப்படி பணம் எடுக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார். இந்த வீடியோவுக்கு பூயூஷ் கோயல், "யு.பி.ஐ. ஏ.டி.எம்.: ஃபின்டெக் எதிர்காலம் இங்கே தான் இருக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வகை ஏ.டி.எம். இயந்திரத்தை தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் மற்றும் என்.சி.ஆர். கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இந்த யு.பி.ஐ. ஏ.டி.எம். வழக்கமான ஏ.டி.எம். போன்றே இயங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயன்படுத்தும் போது, அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
- புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது. நோக்கியா 105 கிளாசிக் என்று அழைக்கப்படும் புதிய ஃபீச்சர் போன் மாடலில் இன்-பில்ட் யு.பி.ஐ. செயலி உள்ளது. இத்துடன் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் எப்.எம். ரேடியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த மொபைலில் உள்ள பட்டன்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கிறது. இவற்றை கொண்டு இருள் சூழ்ந்த பகுதிகளிலும் மொபைலை எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த முடியும். இது எர்கோனமிக் டிசைன் மற்றும் கச்சிதமான வடிவம் கொண்டிருக்கிறது.

புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் சார்கோல் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மொபைல் போன் சிங்கில் சிம், டூயல் சிம் மற்றும் சார்ஜர் உடன் ஒரு வேரியண்ட் மற்றும் சார்ஜர் இன்றி மற்றொரு வேரியண்ட் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 999 ஆகும்.
இந்த மொபைல் போன் நோக்கியா வலைதளம், ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.
- ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது.
- டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் யு.பி.ஐ. முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.
2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டி உள்ளது. இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
2017-ல் ரொக்கப் பரிவர்த்தனைகள் 90 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்து. இதற்கு 2016-ல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதே முக்கிய காரணம்.
அதே சமயம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் யு.பி.ஐ. வாயிலான பணப் பரிவர்த்தனை 900 சதவீதம் அதிகரித்தது.
ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது. யு.பி.ஐ.யின் வளர்ச்சியால், பல்வேறு வகையான கட்டணம் செலுத்தும் முறை இலகுவானதுடன், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.
டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.), இண்டர் நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனத்தை (என்.ஐ.பி.எல்.) உருவாக்கி ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் இணைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனையை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
சமீபத்தில் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் யு.பி.ஐ. பணப்பரிமாற்ற சேவையில் இணைந்து உள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையில் இணைய உள்ளன.