என் மலர்
நீங்கள் தேடியது "UPI"
- ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது.
- டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் யு.பி.ஐ. முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.
2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டி உள்ளது. இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
2017-ல் ரொக்கப் பரிவர்த்தனைகள் 90 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்து. இதற்கு 2016-ல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதே முக்கிய காரணம்.
அதே சமயம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் யு.பி.ஐ. வாயிலான பணப் பரிவர்த்தனை 900 சதவீதம் அதிகரித்தது.
ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது. யு.பி.ஐ.யின் வளர்ச்சியால், பல்வேறு வகையான கட்டணம் செலுத்தும் முறை இலகுவானதுடன், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.
டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.), இண்டர் நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனத்தை (என்.ஐ.பி.எல்.) உருவாக்கி ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் இணைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனையை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
சமீபத்தில் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் யு.பி.ஐ. பணப்பரிமாற்ற சேவையில் இணைந்து உள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையில் இணைய உள்ளன.
- துணை பிரதமர் ரிச்சர்டு-க்கு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை.
- தேசிய போர் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (நவம்பர் 19) நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த போட்டியை காண ஆஸ்திரேலிய துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ரிச்சர்டு மார்லஸ் இந்தியா வந்திருந்தார்.
நேற்றைய போட்டியை கண்டுகளித்த நிலையில் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு-க்கு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை இன்று அளிக்கப்பட்டது. பிறகு டெல்லி தேசிய போர் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள கடையில் எலுமிச்சை பழச்சாறு வாங்கி பருகினார். பிறகு தெருவோர கடையில் லட்டு ஒன்றை வாங்கி சாப்பிட்ட துணை பிரதமர் ரிச்சர்ட் அதற்கான பணத்தை யு.பி.ஐ. மூலம் செலுத்தினார்.
- புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிப்பு.
- தொடர்ந்து விதிமுறைகளை மீறியதால் தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. பலரும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு பணத்தை செலவிட துவங்கியுள்ளனர். அந்த வகையில், நாடு முழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பேடிஎம் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2022 ஆண்டு பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது.

வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் பணத்தை போடுவது, கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, பிரீபெயிட் சேவைகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.
வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஃபாஸ்டேக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகளில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். ஆனால், வங்கி சார்பில் பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிமாற்றங்களை அனுமதிக்கக்கூடாது. பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம்.
- இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது.
- பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்கத்தொடங்கின.
பாரிஸ்:
யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம்.
இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது. பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில், யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இன்று இணைந்துள்ளது. பாரிசில் உள்ள இந்திய தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.பி.சி.ஐ-ன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்சின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதன்படி, இனி பிரான்ஸ் நாட்டில் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த இயலும். இனிமேல் பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
இந்தியர்கள் இனி ஈபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன்கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
- தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவு.
- பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.
பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் யு.பி.ஐ. தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக செயல்பட விடுத்துள்ள கோரிக்கையை ஆய்வு செய்ய தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 15, 2024-க்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி தனது அக்கவுண்ட்கள் மற்றும் வாலெட்களில் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த ஜனவரி 31-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
பண பரிமாற்றங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் பேடிஎம் வாடிக்கையாளர்களின் பணத்தை தற்காலிகமாக வைத்துக் கொள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கை துவங்கியுள்ளது. இதன் மூலம் மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு பயனர்கள் கியூ.ஆர். கோடுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெஷின்களில் பரிமாற்றம் செய்யலாம்.
தற்போது ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டால், பேடிஎம்-இன் ஹேன்டில்கள் அனைத்தும் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்கில் இருந்து புதிய வங்கிகளுக்கு மாறிவிடும். எனினும், இது தொடர்பான உத்தரவுகள் வெளியாகும் வரை புதிய பயனர்கள் இந்த சேவையில் இணைக்கப்பட மாட்டார்கள்.
- 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.
- யு.பி.ஐ. பேமண்ட் கடந்த 2020 ஆண்டு அறிமுகம்.
வாட்ஸ்அப் நிறுவனம் சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களில் புது வசதி யு.பி.ஐ. செட்டிங்ஸ் (UPI Settings) பகுதியில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) ஆப்ஷனில் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.
இதனை தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து, எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ. பேமண்ட் வசதியை வழங்கும் போன்பே (PhonePe) மற்றும் ஜிபே (GPay) உள்ளிட்டவைகளில் இந்த வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்-இல் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. பேமண்ட் சேவை கடந்த 2020 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.
சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இதர விவரங்கள் மற்றும் வெளியீட்டு அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
- மார்ச் மாதத்தில் யு.பி.ஐ பரிமாற்றம் ரூ.19.78 லட்சம் கோடியாக இருந்தது.
- கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.19.64 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக நாம் பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கு யுபிஐ பணப் பரிமாற்ற சேவை மிகவும் உதவியாக அமைந்துள்ளது.
யுபிஐ சேவை மக்கள் மத்தியில் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கினாலும் அனைத்திற்கும் யுபிஐ பண பரிவர்த்தனை முதன்மையாக திகழ்கிறது.

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்துவது புதிய உச்சம் அடைந்துள்ளது, இணையத்தில் வளர்ந்து வரும் வியாபார பரிவர்த்தனைக்காக இதன அதிக அளவில் மக்கள் பயன் படுத்துகிறார்கள்.
UPI என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான வேகமான கட்டண முறையாகும். இது வாடிக்கையாளர் உருவாக்கிய விர்ச்சுவல் பேமெண்ட் முகவரியை (VPA) பயன்படுத்தி 24 மணிநேரமும் உடனடியாக பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

இந்தியாவில் சில்லறை டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு UPI பேமெண்ட் முறை தற்போது மிகவும் பிரபலமாகி இருக்கிறது.
இந்நிலையில் யு.பி.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.14,000 கோடி அளவுக்குக் குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் யு.பி.ஐ மூலமான பண பரிமாற்றம் ரூ.19.78 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.19.64 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
மேலும் யு.பி.ஐ மூலம் பணம் அனுப்புவது தற்போது குறைந்தது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
- அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்தது.
யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.
இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
விரைவு பேருந்துகளில் ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 75சதவீத மக்கள் UPI பிற டிஜிட்டல் பேமெண்ட் அதிகசெலவு செய்தனர் என ஆய்வில் தெரியவந்தது
- இந்த ஆண்டு ஏப்ரல் மாத கணக்கெடுப்பு படி UPI மூலம் ரூ.19.64 லட்சம் கோடி பரிவர்த்தனை நடந்தது
டிஜிட்டல் யுகத்தில் தற்போது ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக நாம் பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கு யுபிஐ பணப் பரிமாற்ற சேவை மிகவும் உதவியாக அமைந்துள்ளது. யுபிஐ சேவை மக்கள் மத்தியில் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கினாலும் அனைத்திற்கும் யுபிஐ பண பரிவர்த்தனை முதன்மையாக திகழ்கிறது. இந்தியாவில் தற்போது டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்துவது புதிய உச்சம் அடைந்துள்ளது,

இணையத்தில் வளர்ந்து வரும் வியாபார பரிவர்த்தனைக்காக இதனை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் செழிக்க பணத்தை செலவழிப்பது ஒரு முக்கிய அங்கமாகும்.
டிஜிட்டல் பணம் மக்களுக்கு நிறைய நன்மைகளை கொண்டுவந்துள்ளதன் மூலம் எளிதாக தொழில் செய்ய முடியும். எல்லா இடங்களிலும் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை. பெரும்பாலான மக்கள் பணத்தை விட டிஜிட்டல் மூலம் அதிகம் செலவிடுகிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் இது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி டெல்லி) ஆய்வு நடத்தியுள்ளது. இதில் யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் மூலம் முன்பை விட பணப் பரிவர்த்தனை மிகவும் எளிமையாகி உள்ளன.
ரொக்கமில்லா பரிவர்த்தனையால் 'அதிகச் செலவு' காரணமாக பல தனிநபர்கள் தங்கள் பாக்கெட்டுகளை 'காலியாக்கி உள்ளனர். இந்தியாவில் சுமார் 75 சதவீத மக்கள் UPI மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்துவதன் விளைவாக அதிகமாகச் செலவு செய்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு படி UPI மூலம் ரூ.19.64 லட்சம் கோடி மதிப்பில் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 50 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
- அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது வணிக உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
- பிரத்தியேக கிரெடிட் கார்டு சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமம் ஆன்லைன் வணிகம் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது ஆன்லைன் வணிகம் மற்றும் பரிவர்த்தனைகளில் முதன்மையாக விளங்கும் கூகுள் நிறுவனம் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது வணிக உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக பொது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆகிவற்றில் பரிவர்த்தனைக்கான உரிமத்தைப் பெற அதானி குழுமம் விண்ணப்பிக்க உள்ளது. அதைத்தொடர்ந்து பிரத்தியேக கிரெடிட் கார்டு சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் (ONDC) உடன் இணைந்து ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை வழங்க அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதானி குழுமத்தின் பிற வணிகங்களான எரிவாயு மற்றும் மின் வணிக நுகர்வோர்களையும், விமான பயணிகளையும் அதன் ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்தச் செய்யும் என்று தெரிகிறது.
- பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன விஜய் சேகர் ஷர்மாவுடன் அதானி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தெரிவித்தன.
- ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கடுமையான நிதி நெருக்கடியில் பேடிஎம் சிக்கியுள்ளது
இந்திய பெரும் பணக்காரர்களில் முதன்மையானவராக அதானியின், அதானி குழுமம் யுபிஐ ஆன்லைன் பண பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் வணிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பின்டெக் துறையில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சூட்டோடு சூடாக யுபிஐ பரிவர்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பேடிஎம் செயலி நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அதானி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (மே 28) அகமதாபாத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன விஜய் சேகர் ஷர்மாவுடன் அதானி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒன் 97 நிறுவனத்தின் சுமார் ரூ. 4,218 கோடி மதிப்புடைய 19% சதவீத பங்குகள் சேகர் சர்மா வசம் உள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கடுமையான நிதி நெருக்கடியில் பேடிஎம் சிக்கியுள்ளதால் அதை சாதகமாக பயன்படுத்தி இந்தியாவில் பேடிஎம் உருவாக்கி வைத்துள்ள வலுவான கட்டமைப்பை பின்டெக் துறையில் நுழைவதற்கான கச்சிதமான வழியாக அதானி குழுமம் கருதுகிறது.

ஒன் 97 பங்குகளை அதானி வாங்கும் பட்சத்தில் இந்தியாவில் பின்டெக் துறையில் வலுவாக காலூன்றியுள்ள கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஃபோன் பே மற்றும் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக அதானி குழுமம் உருவெடுக்கக்கூடும்.

இதற்கிடையில், பங்குகளை விற்க எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெளிவுபடுத்த விரும்புவதாக பேடிஎம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் பின்டெக் துறையின் மீது அதானி காட்டத் தொடங்கியிருக்கும் இந்த ஆர்வம் வரும் காலங்களில் இந்தியாவில் பின்டெக் துறையில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பது வெளிச்சம்.
- கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
- நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "அரசு பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்குப் பயண சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.