என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uttarpradesh"

    • ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.
    • உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் யோகி ஆதித்யநாத்.

    இதற்கிடையே, மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து 8 ஆண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை விமானம் மூலம் லக்னோ புறப்பட்டார்.

    ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக ஹிரியா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அதன்பின், கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதே விமானத்தில் லக்னோ புறப்பட்டுச் சென்றார்.

    விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டபோது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்தியா 3- வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.
    • பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    2027-ம் ஆண்டுக்குள் உலக அளவில் இந்தியா 3- வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். அண்டை நாட்டை பற்றி ஒரு போதும் சாதகமாக பேசாத பாகிஸ்தான் தற்போது இந்தியா சக்தி வாய்ந்த நாடாக வளர்ந்து வருவதாக அந்நாட்டின் தலைவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

    உலக அளவில் இந்தியா குறித்த கருத்து மாறி விட்டதாகவும், அனைத்து நாடுகளின் தலைவர்களும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் கூறி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது மட்டுமல்ல. 2029-ம் ஆண்டிலும் நரேந்திர மோடியே பிரதமராக இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கினார்.
    • உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டு லைக்ஸ்களை குவிக்க போராடும் பலரில் ரெயில்களில் சிக்கியோ, பள்ளத்தாக்கில் விழுந்தோ உயிரிழக்கும் சம்பவங்களும் நாம் நிறைய பார்த்திருப்போம்.

    ஆனால், இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கியுள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக சாலையில் பிணமாக படுத்து வீடியோ எடுத்துள்ளார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, முகேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.

    • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கம் பணிகளுக்கு பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
    • 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் பகுதியில் உள்ள குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த வீட்டில் 15 பேர் வசித்து வந்ததாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
    • தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தீபோத்ஸவ் எனப்படும் தீபத்திருவிழாவை கொண்டாடி வருகிறது.

    இதையொட்டி அயோத்தி சரயு நதிக்கரையில் 2017-ம் ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.

    கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் 25 லட்சம் முதல் 28 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது. நீண்ட காலத்துக்கு எரியும் வகையிலும், சிறப்பு மெழுகு விளக்குகள் கார்பன் உமிழ்வை குறைக்கவும், கோவிலை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும்.

    மேலும் தீபத்திருவிழாவையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்படும் ராமர் கோவில் வளாகம், அலங்காரத்திற்காக பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவினருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    அயோத்தியை மதம் மற்றும் நம்பிக்கையின் மையமாக மட்டுமல்லாமல் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வின் அடையாளமாகவும் மாற்றுவதை கோவில் அறக்கட்டளை நோக்கமாக கொண்டுள்ளது.

    மேலும், தீபத்திருவிழாவின் பிரம்மாண்டம் நீடித்த உணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக கோவிலின் பவன் தரிசனத்திற்காக வருகிற 29-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி நள்ளிரவு வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள்.
    • அரசு சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தீபோத்ஸவ் எனப்படும் தீபத்திருவிழாவை கொண்டாடி வருகிறது.

    இதையொட்டி அயோத்தி சரயு நதிக்கரையில் 2017-ம் ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.

    கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 25,12,585 லட்சம் விளக்குகளை அதிக அளவில் காட்சிப்படுத்தியதன் மூலம் சுற்றுலாத்துறை, உத்தரபிரதேச அரசு, மாவட்ட நிர்வாகம், அயோத்தியில் சாதனை படைத்துள்ளது. 

    இதேபோல், ஒரே நேரத்தில் அதிக மக்கள் விளக்குகளை ஆரத்தி எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம், இம்முறை இரண்டு கின்னஸ் சாதனைகளை உ.பி தீபத்திருவிழா படைத்துள்ளது.

    இந்த தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது.

    மேலும், லேசர் ஒளி மூலம் ராம் - லீலா நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அரசு சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    மேலும் தீபத்திருவிழாவையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் வளாகமும் அலங்காரத்தால் ஜொலிக்கிறது.

    மேலும், தீபத்திருவிழாவின் பிரம்மாண்டம் நீடித்த உணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக கோவிலின் பவன் தரிசனத்திற்காக கடந்த 29-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி நள்ளிரவு வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • இரண்டு விபத்துகளில் சுமார் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • கார் ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிபிட் மற்றும் சித்ரகூட் மாவட்டங்களில் நடந்த சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில் சுமார் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    பிலிபிட்டில், நியோரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 பேருடன் வந்த கார் மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

    இதில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கதிமாவைச் சேர்ந்த 11 பேர் மாருதி எர்டிகா காரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.

    அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மூன்று பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சையின் போது இருவர் இறந்ததாகவும் - மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும்" போலீசார் தெரிவித்தனர்.

    காயமடைந்தவர்களில் நான்கு பேர் மேற் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    சித்ரகூடில் நடந்த விபத்து குறித்து, போலீஸ் சூப்பிரண்டு அருண் குமார் சிங் கூறுகையில், "கார் ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் ராய்புரா காவல் நிலையப் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடந்தது. ராய்புராவில் இருந்து லாரி வந்துகொண்டிருக்கும்போது, கார் பிரயாக்ராஜில் இருந்து வந்து கொண்டிருந்தது. அதிலும் 11 பேர் இருந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.

    மேலும், இரண்டு சம்பவங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.
    • 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் என்கிற பகுதியில், இந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.

    இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக, 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

    சுமார் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள், பைக்கில் பயணித்த ஒருவரிடம் வழி கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இந்து ஆண்டு நண்பரிடம் பேசியதாக கூறி தாக்கி உள்ளனர். மேலும், அவர்கள் அணிந்திருந்த ஹிஜாபையும் கழட்ட வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். இந்து நபரிடம் சிறுமிகள் பேசினார்கள் என்ற விஷயம் பெரிதாகியுள்ளது.

    அப்போது, சிறுமிகள் தங்களது சகோதரரை அண்ணனை அழைக்க, சிறுமிகள் போனை எடுத்தபோது, அந்த கும்பல் அதை பிடுங்கி எறிந்துள்ளது. மேலும், அந்த சிறுமிகள் இளைஞரிடம் பரிசு கொடுத்ததாகவும் மர்ம கும்பல் குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், பைக் ஓட்டிய அந்த இளைஞர் இந்து இல்லை என்று தெரிந்த பிறகுதான் மர்ம கும்பல் சிறுமிகளை விடுவித்தது. அங்கிருந்து தப்பிய சிறுமிகள் உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களில் ஒருவர்," தன்னை மர்ம கும்பல் அடித்து ஹிஜாபை கழற்ற முயன்றதாக" வாக்குமூலம் அளித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரூரல் எஸ்பி சாகர் ஜெயின் தெரிவித்தார். பரப்பப்படும் வீடியோவைப் பயன்படுத்தி மற்றவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

    • ஜான்பூரை சேர்ந்தவர் சிந்தா.
    • இவருக்கு 3 திருமணங்கள் நடந்துள்ளதாம்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவர் 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். ஜான்பூரை சேர்ந்தவர் சிந்தா. பேய்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்த இவர் பெண் வேடமிட்டு வாழ்ந்தால், ஆவிகளிடம் இருந்து தப்பிக்கலாம் என கருதி உள்ளார்.

    அதன்படி சேலை கட்டி கடந்த 36 வருடங்களாக பெண் வேடத்திலேயே வாழ்ந்து வருகிறாராம். இவருக்கு 3 திருமணங்கள் நடந்ததாகவும், அதில் 2-வது மனைவியின் மரணத்திற்கு பிறகு ஒரு ஆவி தன்னை தொந்தரவு செய்வதாகவும், அந்த ஆன்மா தன்னை ஒரு பெண் போல வாழ கட்டாயப்படுத்தியதால் அவ்வாறு வாழ்வதாகவும் கூறி வருகிறார்.

    அதோடு தனக்கு 9 மகன்கள் பிறந்ததாகவும், அதில் 7 பேர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி வைரலான நிலையில் சிலர், அவருக்கு மனநலம் தொடர்பான பிரச்சினை இருப்பதாக கூறுகின்றனர்.

    சிலர், இது மூடநம்பிக்கை, இந்த நபருக்கு சரியான சிகிச்சை தேவை என தெரிவித்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    மதுரா:

    உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா நகரைச் சேர்ந்த சிறுவர்கள் கௌரவ் குமார் (14) மற்றும் கபில் குமார் (14). 10-ம் வகுப்பு படித்து வந்த இருவரும் நண்பர்கள். இவர்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளப்போவதாக வீட்டில் கூறிவிட்டு செல்போன்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

    அப்போது, லட்சுமி நகர் பகுதியில் உள்ள மதுரா - காஸ்கஞ்ச் ஒற்றை தண்டவாளப்பாதை வழியே இருவரும் பப்ஜி விளையாடிக் கொண்டே சென்றதாக தெரிகிறது.

    அப்போது, எதிரே வந்த சரக்கு ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த ரெயில்வே போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஜமுனாபர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஷஷி பிரகாஷ் கூறியதாவது:

    மதுராச- காஸ்கஞ்ச் ஒற்றை தண்டவாளப் பாதை அருகே உடல்கள் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்ததில் சிறுவர்கள் உயிரிழந்துக் கிடந்தது தெரியவந்தது.

    மேலும், உடல் அருகே பயன்பாட்டில் உள்ள நிலையில் செல்போன் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதில், பப்ஜி விளையாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
    சிறுவர்கள் இருவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ளப்போவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

    இந்நிலையில், ரெயில் வருவது கூட தெரியாமல், பப்ஜி விளையாட்டில் மூழ்கி ரெயில் மோதி இறந்துள்ளனர்.

    சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும் என்று ஸ்ரீகேஷின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
    உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ் குமார் (40). எலக்ட்ரீஷியனாக பணிப்புரிந்த இவர், கடந்த வியாழக்கிழமை எதிரே வேகமாக வந்த மோட்டார் பைக் மோதி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஸ்ரீகேஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து ஸ்ரீகேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்து அடையாளம் காட்டும்வரை வரை ஸ்ரீகேஷின் உடல் பிணவறையில் உள்ள ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டது. பின்னர், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சுமார் ஏழு மணி நேரத்திற்கு பிறகு, மருத்துவமனைக்கு வந்து உடலை அடையாளம் கண்ட ஸ்ரீகேஷின் மைத்துனி மதுபாலா மற்றும் குடும்பத்தினர், பிரேதப் பரிசோதனைக்கு சம்மதித்து ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.  இந்த ஆவணத்தை போலீசார் சமர்ப்பிக்க முற்பட்டபோது, ஸ்ரீகேஷின் உடலில் அசைவு தெரிவதை மதுபாலா கவனித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, ஸ்ரீகேஷின் உடலை எடுத்து சோதித்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீகேஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், "ஸ்ரீகேஷ் இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை. அவரை ஃப்ரீசரில் வைத்து கிட்டத்தட்ட கொன்றுவிட்டனர். அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும்" என்று மதுபாலா கூறினார்.

    இதுகுறித்து மொராதாபாத் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷிவ் சிங் கூறியதாவது:-

    படுகாயங்களுடன் வந்த ஸ்ரீகேஷை அவசரப் பிரிவு மருத்துவர்கள் அதிகாலை 3 மணியளவில் பரிசோதித்துள்ளனர். அப்போது அவருக்கு இதயத் துடிப்பு இல்லை. அவரை பலமுறை பரிசோதித்த பிறகே, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், காலையில் ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பதை அவரது உறவினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கிறோம். தற்போது அவரது உயிரைக் காப்பாற்றுவதே எங்களுக்கு முதல்வேலை.

    இது அரிதிலும் அரிதான நிகழ்வு. இதை அலட்சியம் என்று சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். #Muzaffarnagarriots
    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம்  முசாபர்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் பரவியது. இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்கு சென்று குடியேறினர்.

    இந்நிலையில் கவால் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவ்ரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முசாபர் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்ததையடுத்து கடந்த பிப்ரவரி 6ம் தேதி  தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முஜாமில், முஜாசிம், ஃபர்கான், நதீம், ஜனங்கிர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய 7 பேர் குற்றவாளிகள் என கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அறிவித்தார்.

    இந்த நிலையில் கலவரத்தின்போது நவாப் மற்றும் சகித் ஆகியோர் அடித்துக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்டவர்களின் சகோதரர் அஷ்பக், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முக்கிய சாட்சியான அஷ்பக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடோலி நகரில் பால் வியாபாரம் செய்து வந்த ஆஷிப், கடந்த திங்கள் அன்று வழக்கம்போல பால் டெலிவரி செய்ய போகும் போது அவரை மர்ம நபர் சுட்டுக் கொன்றுள்ளான்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #Muzaffarnagarriots

    ×