என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vanathi srinivasan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவையில் இருந்து புறப்படும் பாதயாத்திரை பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியாகச் சென்று 2-ந்தேதி இரவு பழனியை அடைகிறது.
    • 3-ந்தேதி காலை பழனி முருகனை, வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் தரிசனம் செய்து விட்டு திரும்புகிறார்கள்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா தேசிய மகளிர் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

    இவரது தலைமையில் கோவையில் இருந்து பழனிக்கு பாத யாத்திரை செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாதயாத்திரை இன்று மாலை 4 மணிக்கு ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு இருந்து தொடங்குகிறது.

    பாத யாத்திரையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் பாரதிய ஜனதா மகளிர் அணியினர், நிர்வாகிகள் பங்கேற்று செல்கிறார்கள். கோவையில் இருந்து புறப்படும் பாதயாத்திரை பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியாகச் சென்று 2-ந் தேதி இரவு பழனியை அடைகிறது.

    3-ந்தேதி காலை பழனி முருகனை, வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் தரிசனம் செய்து விட்டு திரும்புகிறார்கள்.

    பாதயாத்திரை குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும், கோவை தெற்கு தொகுதியில் நான் பெற்ற வெற்றிக்காக வேண்டுதலை நிறைவேற்றவும் இந்த பாதயாத்திரை மேற்கொள்கிறேன். என்னுடன் மகளிர் அணி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள். தொடக்க நிகழ்ச்சியில் 50 பேர் வரை பங்கேற்க உள்ளோம். தொடர்ந்து செல்லும் வழியில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் எங்களுடன் இணைந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திடீரென அவரது வருகை ரத்து செய்யப்பட்டது.

    • தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
    • மக்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை, தி.மு.க., அரசு மேற்கொள்ள வேண்டும்.

    கோவை:

    கோவையில், பட்டப்பகலில், படுகொலை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதற வைக்கின்றது, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில், முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று காலை, கோவை கோர்ட்டு வளாகத்தின் பின்பகுதியில் உள்ள கோபாலபுரத்தில், ஒரு கும்பல், வாலிபரை வெட்டி கொலை செய்துள்ளனர். ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி உள்ளார்.

    இந்த சம்பவம் நடந்து சில நிமிடங்களில், சரவணம்பட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். கோவையில் நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்கள் பதற வைக்கின்றன.

    தமிழகத்தில் தினசரி 8 முதல் 10 கொலைகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. தி.மு.க., ஆட்சியில், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை, தி.மு.க., அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
    • அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட தலைவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதவில்லை என்பதை அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கல்வி என்பது நல்ல நிலையில் இருந்தாலும் அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் விகிதம் குறைந்துள்ளது.

    அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள், நல்ல விளையாட்டு மைதானம், இலவசமாக பொருட்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் அரசு பள்ளிக்கு ஏன் மாணவர்கள் செல்வதில்லை. அங்கு தேர்ச்சி விகிதமும், மாணவர் சேர்க்கையும் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை கொண்டு வரும்போது இந்த சட்டத்தில் உள்ள பிரச்சினைகள், நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா என்பது போன்ற கேள்விகளை தான் கவர்னர் கேட்டுள்ளார். உண்மை நிலையை புரிந்துகொண்டு மக்களை பாதுகாக்க வேண்டிய விஷயத்தில் தனிப்பட்ட சுயலாபத்துக்காக கவர்னர் மீது பழி சுமத்தக்கூடாது.

    அரசு இதனை கவுரவ பிரச்சினையாக பார்க்காமல் கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டத்தை பலமாக கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும்.

    அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட தலைவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணியில் சிக்கலை உருவாக்கும். இதுதொடர்பான தகவல்கள் தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு கடந்த வாரம் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது அனைத்து பா.ஜ.க. தலைவர்களையும் அழைத்து இனிமேல் இதுபோன்ற எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை அளித்துள்ளார். வரும் காலத்தில் இவையெல்லாம் சரியாகி விடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த அ.தி.மு.க. ஆட்சி அறிவித்தது.
    • எந்தெந்த இடங்களில் நிலக்கரி படிமங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்பதை மத்திய அரசு ஆய்வு செய்யும்.

    சென்னை:

    டெல்டா பகுதியில் விளைநிலங்களில் நிலக்கரி சுரங்கம் தோண்ட மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு முடிவு செய்துவிட்டாக தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டி உள்ளன.

    இதற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். உண்மைகளை மறைத்து பேசுவதா என்று அவர் ஆவேசமாக கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த அ.தி.மு.க. ஆட்சி அறிவித்தது.

    நிலக்கரி எடுக்க சாத்தியக்கூறு உள்ள இடங்களாக வடசேரி, சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி ஆகிய இடங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது.

    இந்த 3 இடங்களுக்கும் விலக்கு கேட்டு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து மனு கொடுத்துள்ளார். விலக்கு கேட்பதில் நியாயம் உள்ளது.

    எந்தெந்த இடங்களில் நிலக்கரி படிமங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்பதை மத்திய அரசு ஆய்வு செய்யும். 4.1.2011 அன்று மன்னார்குடி பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் ரூ.100 கோடி முதலீட்டில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கிரேட்டர் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் முதல்வரும் செயல் அதிகாரி ஒய்.கே. மோடி ஆகியோரோடு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

    அப்போது இது வேளாண் மண்டலம் என்று ஏன் சொல்லவில்லை? அது மட்டுமல்லாமல் ஒரு நிலத்தை கையகப்படுத்தும்போது, அதை அளவிடுவது, கையகப்படுத்துவது மாவட்ட கலெக்டர், வருவாய் துறையினருக்கு நன்றாக தெரியும். இவ்வளவு நடைமுறைகளும் இருந்தும் இந்த பகுதியில் தேவையில்லை என்று ஏன் சொல்லவில்லை?

    எப்படியாவது மோடியை எதிர்க்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று பேசுவது சரியல்ல. உண்மையை மறைத்து பழியை மத்திய அரசு மீது போடலாமா?

    உலக அளவில் பசுமை எரிசக்தியை உருவாக்குவதில் மோடி ஆர்வமாக இருக்கிறார்.

    நிலக்கரி மூலம் மின்சாரம் தேவையில்லை என்றால் சூரிய மின் தயாரிப்பு, காற்றாலை மின் உற்பத்திக்கு எத்தனை நிறுவனங்கள் வந்துள்ளன. எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்று பேசுவதும், அதற்காக முயற்சிப்பதும்தான் அரசின் சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது.
    • தமிழ் மக்களிடம் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு, தி.மு.க. அரசை பணிய வைத்திருக்கிறது.

    சென்னை:

    அகில இந்திய பா.ஜனதா மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை விநியோகிக்க சிறப்பு அனுமதி அளிக்கும் அரசாணையை, ஒரே நாளில் தி.மு.க., அரசு திரும்பப் பெற்றுள்ளது.

    அதுபோல, 12 மணி நேரம் வேலை சட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போல ஓர் அறிவிப்பை, ஓர் உத்தரவை ஓர் அரசாணையை வெளியிட்டுவிட்டு திரும்பப் பெறுவது ஏற்கனவே நடந்திருக்கிறது.

    தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது.

    திருமண மண்டபங்களில், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களுக்கு அனுமதி என்ற முடிவை, தமிழ் கலாசாரத்தை நன்கறிந்த ஒருவரால் நிச்சயமாக எடுத்திருக்கவே முடியாது. ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை அறிந்திராத ஓர் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதற்கு இந்த அரசாணையே சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ் மக்களிடம் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு, தி.மு.க. அரசை பணிய வைத்திருக்கிறது.

    ஒரு பக்கம் சட்டப் பேரவையில் 500 மதுக் கடைகளை குறைப்போம் என்று அறிவித்துவிட்டு, மறுபக்கம், மதுவை ஆறாக ஓட விடும் திட்டத்தை அறிவித்து மக்களை முட்டாள் ஆக்க நினைத்து உள்ளது தி.மு.க. அரசு. இது தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகம். இப்போது எந்தவொரு ஏமாற்று வேலையும் மக்களிடம் எடுபடாது. உண்மையை ஒரு நொடியில் மக்கள் உணர்ந்து விடுவார்கள்.

    தி.மு.க. அரசின் முடிவுகளுக்கு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போதெல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுப்பது, கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குவது என்று ஒரு நாடகத்தை ஒவ்வொரு முறையும் அரங்கேற்றி வருகின்றனர்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் இருந்து அதிக தொகுதிகளை பெற வேண்டும், கடந்த பாராளுமன்ற தேர்தலைப் போலவே தி.மு.க.விடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற வேண்டும் என்ற கவலை, தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது இனி எடுபடாது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்றால் தமிழகத்தில் உள்ள, தி.மு.க. அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறதா? அல்லது வெளியில் இருந்து வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்த கமல், அதனை விட்டு தற்போது விலகி செல்வது போல் தெரிகிறது.
    • கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை கர்நாடகாவில் பா.ஜ.க தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    கோவை:

    கோவை பந்தய சாலையில் உள்ள மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவின் சட்டமன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திறந்து வைத்து மக்களுக்கு இளநீர் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை. அந்தளவு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. அமைதி பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகம் தற்போது அந்த நிலைமையில் இருந்து மாறி சென்று வருகிறது.

    தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்த கமல், அதனை விட்டு தற்போது விலகி செல்வது போல் தெரிகிறது.

    மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறிய அவர்கள் தற்போது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஊழல் கறை படிந்த காங்கிரஸ், தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் திகழ்ந்து வருகிறார்.

    பா.ஜ.கவை பொறுத்தவரை கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    பா.ஜ.கவில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் அதனால் கட்சிக்கு எந்த பின்னடைவும் கிடையாது. ஏனென்றால் தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். இதனால் பாதிப்பு என்பது இல்லை.

    கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை கர்நாடகாவில் பா.ஜ.க தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டார். இனி இதுபற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் முடிவை வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கொண்டிருக்கிறார்.
    • கர்நாடகாவில் பிரதான எதிர்கட்சி வாய்ப்பை பா.ஜ.க.விற்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தலில் மக்களின் தீர்ப்பை பாரதிய ஜனதா ஏற்கிறது. அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் போனது குறித்து கட்சி தலைமை கண்டிப்பாக ஆராயும். மக்களிடம் நெருக்கமான அனுகுமுறையை ஏற்படுத்த கர்நாடக தேர்தலை பார்க்கிறோம்.

    அந்த தேர்தல் முடிவை வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கொண்டிருக்கிறார்.

    நிறைய முறை திராவிடத்தையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். கர்நாடகாவில் பிரதான எதிர்கட்சி வாய்ப்பை பா.ஜ.க.விற்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கர்நாடக தேர்தலில் அவருடைய பங்களிப்பை நன்றாகவே செய்துள்ளார். கர்நாடக தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு சவாலாக இருக்காது. பா.ஜ.க. வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது நாட்டில் 40 சதவீதம் டிஜிட்டல் பயன்பாடு இருக்கிறது.
    • ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து துரதிஷ்டவசமானது.

    கோவை :

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பா.ஜனதா சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை மிகவும் எளிமையாக இருக்கிறது. நமது நாட்டில் 40 சதவீதம் டிஜிட்டல் பயன்பாடு இருக்கிறது. ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து துரதிஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை. எதையும் மூடி மறைக்கவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு பா.ஜனதாவை வீழ்த்திவிடலாம் என்று ராகுல்காந்தி, நினைத்தால் அது ஒருபோதும் பலிக்காது.

    ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்கு எதிராக பேசி வருவது நாட்டின் பெருமையை சிதைக்கும் வகையில் இருக்கிறது. அவர் நமது நாட்டை சேர்ந்தவர்தானே!. ஏன் வெளிநாட்டில் பேசுகிறார். இவ்வாறு அவர் பேசுவதை உடனே நிறுத்த வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் விளம்பர பலகை வைப்பது அதிகரித்து வருகிறது. விளம்பர பலகை வைக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பவம் நடக்கும்போது மட்டும் நடவடிக்கை எடுக்கும் நிலை இருக்கிறது.

    மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரசும், தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வும் தமிழக நலனை காப்பாற்ற போகிறார்களா என்பதை பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை ஜி.டி. நாயுடு மியூசியம் முன்புறம் உள்ள அவினாசி சாலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா, அல்லது எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அருகே உள்ளது.

    இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் நேற்று மாலை 5.50 மணி அளவில் மர்ம வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அலுவலகத்துக்குள் நுழைந்து உள்பக்கமாக கதவை பூட்ட முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர் அந்த வாலிபரை விரட்டினார். அவர் செல்ல மறுத்ததால் அவரை பிடித்து அலுவலகத்தின் வெளியே தள்ளினார். அதன்பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து எழுந்து சென்றார்.

    இந்தநிலையில் இரவு 8.30 மணி அளவில் கோவை ஜி.டி. நாயுடு மியூசியம் முன்புறம் உள்ள அவினாசி சாலையில் அதே வாலிபர் பிணமாக கிடந்தார். மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.

    அந்த வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா, அல்லது எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அவர் எதற்காக நுழைந்தார் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதுபற்றி வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நேற்று மாலை எனது அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் வந்துள்ளார். அவர் எதற்காக வந்தார், எந்த நோக்கத்துக்காக வந்தார் என்று தெரியவில்லை. அப்போது நான் அலுவலகத்தில் இல்லை. அந்த நபர் வந்த தகவலை எனது உதவியாளர் எனக்கு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்க கூறினேன். அதன்படி அவரும் புகார் அளித்தார். இந்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்த மர்மநபர் அவினாசி சாலையில் இறந்து கிடந்ததாக தகவல் தெரிந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.
    • செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது

    கோவை:

    பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. குற்றம்சாட்டியது.

    அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினார்.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.

    மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பா.ஜ.க அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆனால், இதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

    அ.தி.மு.க.வில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? தி.மு.க.வின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா?.

    செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அனுமதிக்காது.

    பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உணர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது பணியை செய்கிறார்கள்.
    • செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டனர்.

    பல்லடம் :

    பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பல்லடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கும் மத்திய அரசிற்கும் சம்பந்தமில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது பணியை செய்கிறார்கள். இதே திமுக அரசு எதிர்க்கட்சியாக இருக்கும்போது, செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டனர். ஊழல் செய்தவர் இன்று திமுக கட்சியில் சேர்ந்து விட்டதால் அதை மறைத்து விட்டீர்கள், மறந்து விட்டீர்கள்.எதையும் சந்திக்க தயார் என சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென்று அன்று இரவே எப்படி உடல் நிலை சரியில்லாமல் போனார் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

    வழக்கை அவர்கள் சந்தித்து தான் ஆக வேண்டும். விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேர்தல் அரசியல் என்பது வெறும் கூட்டல், கழித்தல் கணக்கு அல்ல.
    • பாராளுமன்ற தேர்தல் வரும் போது இப்படி கூடி கலைவது வாடிக்கைதான்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டம் பற்றி பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்துள்ள விமர்சனம்தான் இது.

    தேர்தல் அரசியல் என்பது வெறும் கூட்டல், கழித்தல் கணக்கு அல்ல. அது ரசாயனம். அதாவது மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. தேர்தல் அரசியலில் ஒன்றும் ஒன்றும் இரண்டாக வேண்டிய கட்டாயம் இல்லை. பூஜ்யமாகவும் மாறும். எனவே 16 கட்சி கூட்டணி அல்ல 32 கட்சிகளாக இருந்தாலும் எந்த பலனும் கிடைக்காது.

    பாராளுமன்ற தேர்தல் வரும் போது இப்படி கூடி கலைவது வாடிக்கைதான். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பாரா? கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாபில் காங்கிரசுக்கு சீட் ஒதுக்குவாரா? மராட்டியத்தில் பிளவுபட்ட உத்தவ் தாக்கரே கட்சிக்கு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் எத்தனை தொகுதிகள் கொடுக்கும்? கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா? இப்படி பதில் கண்டுபிடிக்க முடியாத பல கேள்விகள் இருக்கும் போது 16 கட்சிகள் இல்லை 36 கட்சிகள் 106 நாட்கள் கூடி பேசினாலும் விடை பூஜ்யமாகத்தான் இருக்கும்.

    ×