என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Train"

    • சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்றது.
    • புதிய ரெயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும்.

    திருப்பூர் :

    நாளை முதல் சென்னையில் இருந்து திருப்பூர் வழியாக கோவைக்கு அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டிற்கு வரப் போகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் சேவை நாட்டிலேயே அதிவேகமாக செல்லக் கூடியது, உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட ெரயில் பெட்டிகள், சென்னை ஐசிஎப் தொழிற்சா லையில் தயாரிப்பு பணிகள் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் பயணிகள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

    கிட்டதட்ட விமான சேவையை போன்றது எனச் சொல்லலாம். முதலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் முழுவதுமாக குளிர்சாதன வசதி கொண்டது. முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க லாம். கட்டணம் சற்று அதிகம் தான். இந்த ெரயிலில் தானியங்கி கதவுகள் இடம்பெற்றுள்ள ன. மேலும் வைபை வசதி இருக்கிறது. ஜிபிஎஸ் சேவையும் உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டுள்ளது.

    பயோ கழிவறைகள் காணப்படுகின்றன. சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று ஆச்சரியப்படுத்தியது. இவ்வளவு வேகத்தில் ரெயிலின் உட்புறத்தில் பெரிய அளவில் அதிர்வுகளோ அல்லது குலுங்கவோ இல்லை. அதிகபட்சமாக 1,128 பயணிகள் வரை செல்ல முடியும். இதுவரை 11 வந்தே பாரத் ரெயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    12வது ெரயில் சேவையாக சென்னை- கோவை வழித்தடம் அமையவுள்ளது. மற்ற வந்தே பாரத் ெரயில்களில் 12 பெட்டிகள் இருக்கும் நிலையில், இந்த புதிய ெரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பூர் வழியாக கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயிலின் நேர அட்டவணை வெளியாகி பயணிகள் மத்தியில் எதி ர்பார்ப்பை கூட்டியுள்ளது.

    முதலில் கோவையில் காலை 6 மணிக்கு புறப்படும். நண்பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தை வந்தடையும். இடையில் திருப்பூர் (6.30), ஈரோடு (7.17), சேலம் (8.08) என 3 ெரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 2.20 மணிக்கு ெரயில் புறப்படுகிறது. கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.

    இடையில் சேலம் (6.03), ஈரோடு (7.02), திருப்பூர் (7.43) ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இடைப்பட்ட ெரயில் நிலையங்களில் 2 அல்லது 3 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் என்பது கவனிக்கத்தக்கது. சென்னை மற்றும் கோவைக்கு இடையிலான 495.28 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 10 நிமிடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் கடந்து விடும். வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் ரெயில் இயங்காது. மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தொழில் விஷயமாக சென்னைக்கு அடிக்கடி செல்ல வேண்டியது உள்ளது. இதனால் கோவை சென்று விமானத்திலும், சிலர் கார்களிலும், ரெயில்களிலும் பயணிப்பா ர்கள். ரெயில்களை பொருத்தவரை டிக்கெட் கிடைக்காதது ஒருபுறமிருக்க தொழிலதிபர்கள் பலர் நவீன வசதிகளை எதிர்பார்ப்பார்கள். அந்த வசதிகள் வந்தே பாரத் ரெயிலில் இருப்பதால் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 9-ந்தேதி முதல் பயணிகள் வந்தே பாரத் ரெயில் சேவை நடைமுறைக்கு வருகிறது.
    • மொத்தம் 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, 9-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் சேவை நடைமுறைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு, நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இணையதளம் மற்றும் செல்போன் ஆப் மூலமாக பயணிகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்தனர். அதன்படி, முன்பதிவு தொடங்கிய 30 முதல் 40 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல, சென்னையில் இருந்து 5 மணி 50 நிமிடங்களில் கோவைக்கு செல்ல முடியும். இதில், குளிர்சாதன முதல்நிலை இருக்கை டிக்கெட் கட்டணம் ரூ.2,310 ஆகவும், 2-ம் நிலை இருக்கை கட்டணம் ரூ.1,215 ஆக வசூலிக்கப்பட்டு உள்ளது. உணவின்றி டிக்கெட் கட்டணம் முதல்நிலை இருக்கைக்கு ரூ.2,116 ஆகவும், 2-ம் நிலை இருக்கைக்கு ரூ.1,057 ஆகவும் வசூலிக்கப்பட்டது.

    இதேபோல, குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல்நிலை இருக்கைகளும் உள்ளது. மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    • சேலத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வணிகர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் சென்னைக்கு சென்று வருகின்றனர்.
    • சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் மூலம், விமானத்தில் சென்னை சென்றடையும் நேரத்தை விட குறைவான நேரத்தில் சென்னை சென்றடைய முடியும்.

    சேலம்:

    கோவை-சென்னை இடையே சேலம் வழியாக வந்தேபாரத் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இது சேலம் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வணிகர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் சென்னைக்கு சென்று வருகின்றனர். சாதாரண ரெயில்களில் சென்னை செல்ல குறைந்தது 6 மணி முதல் 6 1/2 மணி நேரம் வரை ஆகிறது.

    இந்த நிலையில், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் மூலம், விமானத்தில் சென்னை சென்றடையும் நேரத்தை விட குறைவான நேரத்தில் சென்னை சென்றடைய முடியும்.

    ஏற்கனவே சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட விமானத்தில் பயண நேரம் 1 மணி நேரம். ஆனால் சேலத்தில் இருந்து காமலாபுரம் செல்ல 30 நிமிடம், விமானம் வருவதற்கு முன் காத்திருக்கும் நேரம் 1 1/2 மணி நேரம், சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியில் வருவதற்கு 45 நிமிடம், சென்னை மாநகருக்கு செல்ல குறைந்தது 1 மணி நேர பயணம் என குறைந்தபட்சம் 4.50 மணி நேரம் செலவிட வேண்டும்.

    தற்போது அதைவிட குறைவாக 3.50 மணி நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல முடியும். மேலும் விமான கட்டணத்தோடு ஒப்பிடுகையில் இந்த ரெயிலுக்கு நிர்ணய கட்டணமும் குறைவானது என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

    இதனால் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதிகள் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
    • 'வந்தே பாரத்' ரெயில் சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பிரதமர் மோடி இன்று பிற்பகலில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்டுள்ள வசதிகளை தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து சென்னையில் இருந்து கோவைக்கு 'வந்தே பாரத்' அதிநவீன அதி விரைவு ரெயிலை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டங்களால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதிகள் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் இமிகிரேஷன் சோதனைக்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்து நிற்கும் சூழல் இருக்கும்.

    இனி முற்றிலுமாக அது தவிர்க்கப்படும். புதிதாக 108 கவுண்டர்கள் திறக்கப்படுகிறது. ஒரு விநாடிக்கு 5 பயணிகளுக்கு இமிகிரேஷன் சோதனை செய்ய முடியும். இதனால் பயணிகள் காத்திருக்கும் நிலைமை தவிர்க்கப்படும். அதேபோல் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து நவீன வசதிகளும் இந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    'வந்தே பாரத்' ரெயில் சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்படுகிறது. ஏற்கனவே, சென்னையில் இருந்து மைசூருக்கு ஒரு ரெயில் இயங்கி வருகிறது. முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு உள்ளேயே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. மேற்கு தமிழகத்தையும், வடக்கு தமிழகத்தையும் இணைக்கும் இந்த ரெயில் மிகப்பெரிய தொழில் நகரமான கோவையையும் சென்னையையும் இணைக்கிறது. பயண நேரம் 5 மணி 50 நிமிடங்கள். இது தொழில் ரீதியான போக்குவரத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மிக எளிதில் கோவையில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து கோவைக்கும் வந்து செல்ல முடியும். இது தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் கை கொடுக்கும். தொழில் வளர்ச்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வந்தே பாரத் ரெயில் வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்கும்.
    • சென்னை-கோவை இடையேயான பயணத்தை வெறும் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணிகள் மேற்கொள்ள முடியும்.

    சென்னை:

    சென்னை-கோவை இடையே இரு மார்க்கமாக இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரெயில், வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்கும். இதன்மூலம் சென்னை-கோவை இடையேயான பயணத்தை வெறும் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணிகள் மேற்கொள்ள முடியும்.

    சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் (வண்டி எண்:- 20643) சேலம், ஈரோடு, திருப்பூர் என 3 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 8.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை சென்றடையும். முன்னதாக இந்த ரெயில் சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்து 5.50 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதைத்தொடர்ந்து 7.13 மணிக்கு திருப்பூர் செல்லும் ரெயில், அங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவையை அடையும்.

    அதேபோல மறுமார்க்கமாக கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் (20644), தினந்தோறும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். இந்த ரெயில் காலை 6.35 மணிக்கு திருப்பூரை அடையும். அங்கிருந்து 6.37 மணிக்கு புறப்பட்டு காலை 7.12 மணிக்கு ஈரோடு செல்லும். அங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 7.58 மணிக்கு சேலம் அடையும். சேலத்தில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    வந்தே பாரத் ரெயிலில் சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல சேர் கார் பயணத்துக்கு ரூ.1,365-ம், எக்சிகியூட்டிவ் சேர் கார் பயணத்துக்கு ரூ.2,485-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல கோவையில் இருந்து சென்னைக்கு சேர் கார் பயணத்துக்கு ரூ.1,215-ம், எக்சிகியூட்டிவ் சேர் கார் பயணத்துக்கு ரூ.2,310-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

     

    • கடந்த 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 1,700 பேர் வரையில் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளதால் இதை16 பெட்டிகளாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். அதிவேக பயணம், குளிர்சாதன சொகுசு இருக்கைகள் உள்ளதால் இந்த ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 9-ந்தேதி முதல் தெற்கு ரெயில்வேயின் கால அட்டவணையுடன் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 8 பெட்டிகள் உள்ளன. இதில், 78 இருக்கைகள் கொண்ட 7 பெட்டிகள் சாதாரண வகையாகவும், 50 இருக்கைகள் கொண்ட ஒரு பெட்டி 360 டிகிரியில் இருக்கைகளை திருப்பும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ரெயிலில் 596 பேர் வரையில் பயணம் செய்ய முடியும். சென்னை சென்டிரலில் இருந்து கோவை செல்லும் இந்த அதிவேக ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்று செல்லும். இதனால், 5 மணி 50 நிமிடங்களில் பயணிகள் சென்னையில் இருந்து கோவை சென்றடைய முடியும். இந்த ரெயிலில் சாதாரண இருக்கைக்கு ரூ.1,365-ம், 360 டிகிரி சிறப்பு இருக்கைக்கு ரூ.2,485-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்களும், தொழிலதிபர்களும், ஐ.டி.ஊழியர்களும் ரெயில் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    சென்னை-கோவை விமான சேவையை ஒப்பிடும்போது வந்தே பாரத் ரெயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பயணிகள் கருதுகிறார்கள். இதனால், ரெயிலில் முன்பதிவு ஒரே நாளில் முடிந்து விடுகிறது. அந்தவகையில், சாதாரண இருக்கைக்கு 18, 25 மற்றும் 30 ஆகிய நாட்களில் மட்டுமே முன்பதிவு உள்ளது. அதுவும் இறுதி நிலையிலேயே உள்ளது. மற்றபடி, சாதாரண மற்றும் சிறப்பு இருக்கை அனைத்தும் நிரம்பிவிட்டது. இந்த மாதம் இறுதி வரை இடமில்லை. காத்திருப்போர் பட்டியலில் அதிகமானோர் உள்ளனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் கோவையை சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்களுக்கு செல்ல அதிகமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். ஜூன் மாதத்திற்கான முன்பதிவும் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவும் அடுத்த ஓரிரு நாட்கள் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளதால் இதை16 பெட்டிகளாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 1,700 பேர் வரையில் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை இந்த ரெயில் இயக்கப்படும்.
    • இந்த ரெயில் ஜெய்ப்பூர், ஆல்வார், குர்கான் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

    இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் துவக்க நாளான இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. நாளை முதல் வழக்கமான சேவை தொடங்க உள்ளது. நாளை முதல் அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் ஜெய்ப்பூர், ஆல்வார், குர்கான் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    அஜ்மீரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு 5 மணி 15 நிமிடங்களில் இந்த ரெயில் சென்றடையும். தற்போது அதே வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடைகிறது. 

    இந்த ரெயில், ராஜஸ்தானின் புஷ்கர், அஷ்மீர் ஷரிப் தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதுடன், இப்பகுதியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.
    • கேரளாவில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடப்பட்டதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கேரளா வந்தார்.

    கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடி இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே விரைவில் கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்றார்.

    இந்நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் கொச்சியில் தங்கிய அவர், இன்று காலை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின்பு அவர் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

    அங்கு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • ஏப்ரல் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார்.
    • வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலத்தின் மல்லப்புரம் மாவட்டத்தில் திருநவ்யா மற்றும் திருர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாக்குதல்காரர்கள் ரயிலின் சி4 பெட்டி மீது கற்களை வீசி கடுமையாக தாக்கினர். இதில் ரயிலின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மல்லப்புரம் காவல் துறை விசாரணையை துவங்கி, அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. ரயில்வே காவல்துறையும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவம் நடைபெற்ற பகுதியின் கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் தெற்கு ரயில்வே வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தான் பிரதமர் நரேந்தி மோடி திருவணந்தபுரம் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார். மல்லப்புரம் மாவட்டத்தின் திருர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிற்க வலியுறுத்தி ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. முந்தைய அறிவிப்பின் போது வந்தே ரயில் திருரில் நின்று செல்லும் என்றே கூறப்பட்டது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு திருரில் வந்தே பாரத் ரயில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டது.

    வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு கேரளா மாநிலத்தின் பாஜக தலைவர் கே சுரேந்திரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மல்லப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவம் கேரளாவுக்கு அவப்பெயரை கொண்டு சேர்த்துள்ளது. முதல் நாளில் இருந்தே எதிர்ப்புக்குரல் இருந்து வந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.

    • ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்தது.
    • அதிர்ச்சி அடைந்த பயணி பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார்.

    திருவனந்தபுரம்:-

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரெயில் விடப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 25-ந்தேதி இந்த ரெயிலை திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் மீது நேற்று முன்தினம் சில மர்மநபர்கள் கல்வீசினர். இதனால் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

    இந்த நிலையில் நேற்று இந்த ரெயிலின் இ-1 பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு பரோட்டா வழங்கப்பட்டது. அதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பயணி பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார்.

    பின்னர் அவர் காசர்கோடு சென்றடைந்ததும், இதுபற்றி ரெயில் நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். அவர்கள் இந்த புகார் குறித்து பாலக்காடு ரெயில்வே கோட்டத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

    இதற்கிடையே ரெயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததை ரெயிலில் பயணம் செய்த சில பயணிகள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோவில் பரோட்டா பார்சலை பயணி ஒருவர் கையில் வைத்திருப்பதும், பரோட்டாவில் புழு இருப்பதும் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் சென்னை-கோவை இடையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டார்

    சென்னை:

    தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் சென்னை-கோவை இடையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    சேலம், கோவை, திருப்பூர் பகுதியை சுற்றியுள்ள வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், ஐ.டி.கம்பெனி ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த ரெயில் சேவையை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னையில் இருந்து கோவைக்கு 6 மணி நேரத்தில் வந்தே பாரத் ரெயில் சென்றடையும் என்பதால் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டார். சிறப்பு வகுப்பு பிரிவில் பயணம் செய்த அவருடன் சக பயணிகள் பலரும் ஆர்வமுடன் வந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.

    காலை 11.40 மணி அளவில் வந்தே பாரத் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் ரெயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
    • வந்தே பாரத் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு வந்தது.

    அரக்கோணம் அருகே மகேந்திரவாடி, அன்வர்திகான் பேட்டை இடையே ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் ரெயில் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் டி-6 பெட்டியில் 75 மற்றும் 76 இருக்கை கண்ணாடிகள் உடைந்து விரிசல் ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் ரெயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தே பாரத் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வீடுத்துள்ளனர்.

    ×