என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varun Dhawan"

    • இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'.
    • தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தயரித்துள்ளது.

    இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பேபி ஜான் படத்தின் 'நைன் மடாக்கா' மற்றும் பிக்லி பாம் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரெய்லர் கடைசியில் சல்மான் கானுடன் சண்டையிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவர் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • ராமரின் வாழ்க்கை அவரது தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது,
    • ராவணன் தனது அறிவைப் பற்றி கர்வத்துடன் இருந்தான்

    ஆஜ் தக் இந்தி சேனலில் அஜெண்டா ஆஜ் தக் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் வருண் தவான், ராமாயணத்தில் வரும் ராமன், ராவணன் ஆகியோருக்கு இடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என்ன என்று அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமித் ஷா, "சிலர் தங்களது விருப்பங்களை தங்களின் கடமைகளை கொண்டு தீர்மானிக்கிறார்கள். சிலர் தங்களது கடமைகளை அவர்களின் விருப்பங்களை கொண்டு முடிவு செய்கிறார்கள். இதுதான் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே உள்ள வித்தியாசம். ராமரின் வாழ்க்கை அவரது தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது, அதே நேரத்தில் ராவணன் தனது சொந்த கொள்கைகள் மற்றும் எண்ணங்களின்படி தனது கடமைகளை மாற்ற முயன்றார்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய வருண் தவான், "நீங்கள் ஆணவத்தை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். ராவணன் தனது அறிவைப் பற்றி கர்வத்துடன் இருந்தான், அதே சமயம் ராமன் ஆணவத்தைப் பற்றி அறிந்திருந்தான்" என்று தெரிவித்தார்.

    இதற்கு, "இதுவும் தர்மத்தின் வரையறைக்குள் தான் வருகிறது" என்று அமித் ஷா தெரிவித்தார்.

    இதனையடுத்து அமித் ஷாவை பாராட்டிய வருண் தவான், "அரசியலில் மக்கள் அவரை சாணக்கியர் என்று அழைக்கிறார்கள், ஆனால் தேசத்திற்கு தன்னலமின்றி சேவை செய்யும் அவரை நம் நாட்டின் ஹனுமான் என்று அழைக்க விரும்புகிறேன். வசனங்களை மனப்பாடம் செய்யும் நடிகர்களால் கூட இவ்வளவு தெளிவுடன் பேச முடியாது" என்று தெரிவித்தார்.

    • வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இயக்குனர் அட்லீ. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என விஜயை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கினார். கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குனராக அவரது காலடி தடத்தை பதித்தார்.இத்திரைப்படம் உலகளவில் 1150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அடுத்ததாக அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற் பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    அப்படி ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியான கபில் ஷர்மா ஷோவில் படக்குழு கலந்துக் கொண்டனர். அதில் அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் , வாமிகா கலந்துக் கொண்டனர். அதில் கபில் ஷர்மா அட்லீயை பார்த்து " நீங்கள் ரொம்ப இளமையாக சிறு வயதிலேயே ஒரு மிக பெரிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒரு பிரபலத்தை முதல் தடவை சந்திக்கும் போது உங்களை பார்த்து எங்கே அட்லீ? என்ற கேள்வி எழுந்துள்ளதா? என அவரின் உருவத்தை கேலி செய்யும் விதமாக கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அட்லீ " நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு புரிந்தது.. நான் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன். நான் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்-க்கு மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தான் என்னுடைய முதல் திரைப்படத்தை தயாரித்தார். அவர் என் தோற்றத்தை பார்த்து மதிப்பிடவில்லை. நான் கதை சொல்லும் திறனைப் பார்த்து தான் என் படத்தை தயாரித்தார். இந்த உலகம் ஒருவனை அவனின் உருவத்தை வைத்து மதிப்பிட கூடாது. அவனின் மனதை வைத்து மதிப்பிட வேண்டும்" என மாஸாக பதிலளித்து அரங்கை அதிர செய்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர்.
    • பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் வருண் தவானுக்கு தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியில் நான் உங்களை நேசிக்கிறேன் என்ற சொல்லை மூன்று மொழிகளிலும் பேச கற்றுக் கொடுக்கும் வீடியோ தற்பொழு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக அதிரடியாக விளையாடிய ஹெட் விக்கெட்டை வருண் வீழ்த்தினார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, பாலிவுட் நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த ட்ரெண்டில் இணைந்து வருண் சக்கரவர்த்தியும் அந்த இன்ஸ்டா பதிவில் தவானை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.

    இதற்கு முன், விராட் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸின் இன்ஸ்டா கணக்கிற்கு பதில் பிலிப்ஸ் நிறுவனத்தை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் ‘பெடியா’.
    • இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் 'பெடியா'. இந்த படத்தில் வருண் தவானிற்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். பாலிவுட்டில் நடிகர் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக 'பெடியா' டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.


    பெடியா

    பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய கதைக்களம் கொண்ட இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்து இயக்குனர் அமர் கவுசிக் கூறுகையில், "படத்தில் இடம்பெறும் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இது இருக்கும். திரையரங்குளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் பெடியா. இப்படம் ரசிகர்களை கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார்.


    பெடியா

    தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூறுகையில், "தரமான கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் கொண்டாட்டமாக ரசிக்கலாம். அனைத்து தலைமுறையினரையும் கவரும் ஒரு சினிமா அனுபவமாக இது இருக்கும். மிகுந்த திறைமைசாலியான அமர் கவுசிக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காமெடி மற்றும் திகில் நிறைந்த, இந்தியாவின் முதல் ஓநாய் மனிதனின் சாகசங்கள் குறித்த படமாக இது உருவாகியுள்ளது," என்றார்.

    'பெடியா' திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மா, சுய் தாகா படத்தில் நடித்தது கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது என்று கூறியிருக்கிறார். #Anushka
    வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘சுய் தாகா’. 2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது. மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

    வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா.

    "மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.



    'வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது" என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

    'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள ‘சுய் தாகா - மேட் இன் இந்தியா’ என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.
    பாலிவுட் நடிகர் வருண் தவான் தன் கையால் சட்டை தைத்து தன்னுடைய தந்தையின் பிறந்த நாளுக்கு சிறப்பு பரிசாக அளித்துள்ளார். #VarunDhawan #SuiDhaaga
    நடிகர் வருண் தவான் ‘சுய் தாகா’ படத்தில் பெற்ற அனுபவத்தையும், தையல் நுட்பத்தையும் வைத்து ஒரு சட்டையை தைக்கிறார். அதனை அவருடைய அப்பாவின் 68 வது பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கினார்.

    இந்த படத்தில் வருண் தையல் வேலைபாடு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் இந்த படத்தின் மூலம் கைத்தறி கலையையும், தையல் வேலைப்பாடு நுட்பங்களையும் சிறப்பாக கற்றுக்கொண்டார். இந்த நுட்பத்தை பயன்படுத்தி தன் தந்தை டேவிட் வருண் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு சட்டையை தைக்க முடிவு செய்தார். பரிசளித்து தன் தந்தையை ஆச்சர்யத்தில் ஆழ்த்த முடுவு செய்தார்.

    ஒரு அருமையான வண்ணமுடைய கோடைகால துணியை தேர்வு செய்து தன் கைத்தறி கலையை பயன்படுத்தி நீண்ட நாளாக நேரம் எடுத்து சிறப்பாக ஒரு சட்டையை தைத்து முடித்தார்.

    இதனை தன் தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார். இதை கண்ட டேவிட் மிகவும் பிரமாதமாக இருக்கிறது என மகிழ்ச்சியடைந்தார். தன் மகன் இப்படி தானாகவே அருமையான சட்டையை தைப்பார் என நினைக்கவில்லை எனவும் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளார்.

    வருண் தவானும், அவரது அண்ணன் ரோஹித் என்பவரும் அவர்களது தந்தையின் பிறந்தநாளை மும்பையில் உள்ள ஹோட்டலில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். மேலும் சிறப்பான இரவு உணவும் ஏற்பாடு செய்தனர்.
    ×