என் மலர்
நீங்கள் தேடியது "Vasishta Nadi"
- இரு மாதங்களாக வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- ராட்தச பாறையில் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்டநதி கரையில் பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் ஒன்றான, 500 ஆண்டுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் சாம்பவமூர்த்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கடந்த இரு மாதங்களாக வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்த நிலையில், கோவில் அருகே ஆற்றின் மையப்பகுதியில் ராட்தச பாறையில் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் காசி.அன்பழகன் தலைமையிலான குழுவினர், ஏறக்குறைய 11 நீளத்தில் 4 அடி உயரம் மற்றும் அகலத்தில் காணப்படும் இந்த புடைப்புச் சிற்ப பாறையை ராட்சத கிரேன் கொண்டு மீட்டு கரைக்கு கொண்டு சுத்தப்படுத்தினர்.
அப்போது இந்த பாறையில், 16ம் நுாற்றாண்டு காலத்தை சேர்ந்த ஆஞ்சநேயர், விநாயகர் மற்றும் சிவலிங்கம் சாமிக ளின் புடைப்புச் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த புடைப்புச் சிற்ப பாறையை கோவிலுக்கு அருகே வசிஷ்டநதிக் கரையிலேயே வைத்துள்ளனர். இந்த சாமிகளை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
- வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
- கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் சுற்றுப்புற கிராமங்களில் 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக்டோபர் மாதம் 23-ந் தேதி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அக்டோபர் மாதம் 24-ந் தேதி மாலை முதல் இரவு வரை தொடர்ந்து 4 மணி நேரம் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது.
26-ந்தேதி அதிகாலை அணையின் நீர்மட்டம் 65.29 அடியை எட்டி 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து, அணையில் இருந்து வசிஷ்டநதியில் வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புயல் காரணமாக நேற்று மாலை முதல், இன்று அதிகாலை விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல கர்நாடகா மாநிலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி நதி பாய்ந்து வந்தும் தர்மபுரி மாவட்டத்திற்கு காவிரிநதி நீர் பாசனத்திற்கு பயன்படுவதில்லை. இதனால் காவரி நதி கடந்து செல்லும் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் பருவ மழையை நம்பி பயிரிடும் மானாவாரி நிலங்களாகவே காணப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு மற்றும் கொல்லி மலைப் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் சுவேதா நதியும், எப்போதாவது ஒருமுறை மட்டுமே நீரோட்டத்தை பெறுகின்றன. ஆண்டு தோறும் பெரும்பாலான மாதங்களில் நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. பருவ மழையும் குறைந்து போனதால் ஆறு, குளம்,குட்டை, நீரோடை உள்ளிட்ட நீர்நிலைகளும் காய்ந்து கிடக்கின்றன.
சேலம் - தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் எல்லையாக அமைந்துள்ள அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, விழுப்புரம் மாவட்டம் வழியாக சென்னைக்கு செல்லும் வீராணம் ஏரியை சென்றடைகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வசிஷ்ட நதி உற்பத்தியாகும் அருநூற்று மலை பெரியக்குட்டி மடுவு வனப்பகுதிக்கும், காவரி க்ஷ்யாறு தமிழகத்தை வந்தடையும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கும் இடைப்பட்ட தூரம் 100 கி.மீ., மட்டும்தான். அதுமட்டுமின்றி, ஒகேனக்கலில் இருந்து தாழ்வான பகுதியில் தான் பெரியகுட்டிமடுவு அமைந்துள்ளது.
எனவே, ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்து, மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக திறக்கப்படும் நேரத்தில், காவிரிநதி நீரை வறண்டு கிடக்கும் வசிஷ்டநதியில் திறந்து விட வேண்டுமென்பது, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வசிஷ்நதி கரையோர கிராம விவசாயிகளிடையே நீண்டநாளாக கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்து காவிரி நதிநீரை வசிஷ்டநதியில் திறப்பதின் வாயிலாக, தர்மபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பருவ மழையை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், காவிரி நதிநீரை பெற்று செழிப்படையும். இந்த திட்டம் குறித்து 15 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு நடத்திய சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் பேளூர் கரடிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கீலகராஜன், அந்த திட்டத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு மற்றும் பயன் பெறும் பகுதிகள் குறித்து தமிழக அரசின் சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லையெனக் கூறி அப்போதைய தமிழக அரசு நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை நிரம்பி வழிந்து உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கடலில் கலக்கும் காவிரி நதி உபரிநீரின் ஒருபகுதியை வறண்டு கிடக்கும் வசிஷ்டநதிக்கு கால்வாய் அமைத்து திருப்பிவிடும் திட்டத்தை ஆய்வு செய்து செயல்வடிவம் கொடுத்திட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டுமென, மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி ஜவஹர், ஏத்தாப்பூர் முன்னோடி விவசாயி கொட்டவாடி குப்புசாமி ஆகியோர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை அமைந்திருந்தும் சேலம் கிழக்கு மாவட்டத்தில் ஆறு, குளம், குட்டை, ஏரிகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. வறட்சியால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போவதால் பயிர்செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி, ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்தோ அல்லது குழாய்கள் அமைத்தோ காவிரி நதிநீரை கொண்டு வந்து வசிஷ்டநதியில் விடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால், சேலம் கிழக்கு மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களிலும் வேளாண்மைத் தொழில் செழிப்படைந்து விவசாயிகள் வாழ்வு பெறுவார்கள். எனவே இத்திட்டத்தை ஆய்வு செய்து செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என்றனர்.