என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village assistants"

    • விண்ணப்பித்திருந்தவர்களில் 1,048 பேர் தேர்வு எழுத வரவில்லை.
    • தேர்வு மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்களையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கபடவில்லை.

    நெல்லை:

    வருவாய் துறையில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர்கள் பணி யிடங்களை நிரப்புவதற்காக இன்று எழுத்து தேர்வு நெல்லை மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்றது.

    நெல்லை, பாளை, மானூர், அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் திசையன்விளை ஆகிய 8 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடை பெற்ற தேர்வை எழுத மொத்தம் 4,390 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    அதன்படி இன்று மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 3,342 பேர் இன்று தேர்வு எழுதினர். இது 76.12 சதவீதமாகும் 1,048 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    கிராம உதவியாளர் எழுத்து தேர்வினையொட்டி தேர்வு மையங்களுக்கு காலை 9.30 மணிக்குள் தேர்வர்கள் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனு மதிக்கப்படவில்லை. மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்க ளையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கபடவில்லை.

    எழுத்து தேர்வினை யொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    நாமக்கல்:

    கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். பொங்கல் போனஸ் நாட்கள் கணக்கில் வழங்கிட வேண்டும். ஜமாபந்திக்கு படி வழங்க வேண்டும். இயற்கை இடர்பாட்டிற்கு சிறப்பு படி வழங்கவேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தியும், 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைத்தும் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு பழைய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் வட்ட தலைவர் சுப்பிரமணி, செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    ×