என் மலர்
நீங்கள் தேடியது "Village panchayat"
- சிவகிரி அருகே உள்ளார் - தளவாய்புரம் கிராம ஊராட்சிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
- யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், ஆணையாளர் ஜெயராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ளார் - தளவாய்புரம் கிராம ஊராட்சிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஊராட்சியை பசுமை ஆக்கும் நோக்கில் ஊராட்சி மன்ற வளாகத்தில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், ஆணையாளர் ஜெயராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பி னர்கள் நாச்சியார், சுப்பிர மணியத்தாய், இசக்கித் துரை, பேச்சியம்மாள், ஊராட்சி செயலர் பொறுப்பு சண்முகையா, தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி ஊராட்சி பகுதியில் விவசாயிகளின் நலனுக்காக நெற்களம் அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகிரி பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விஸ்வை ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், வாசு ஒன்றிய கவுன்சிலர்கள் கனகராஜ், முனியராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் கிப்ட்சன், கிளை செயலாளர் ராமமூர்த்தி, குருநாதன், காஜாமைதீன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருதுகள் வழங்கப்பட உள்ளது.
- http:/tnrd.tn.gov.in/ என்கிற இணையதளத்தின் மூலம் விருதுக்கு விண்ணப்பித்திடும் வகையிலும் படிவம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையில் உத்தமர் காந்தி விருது பெறுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஒன்று வீதம் சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வீதம் ரூ.3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருதுகள் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், புதுமையான முயற்சிகள் எடுத்து மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடையும் கிராம ஊராட்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் http:/tnrd.tn.gov.in/ என்கிற அரசின் இணையதளத்தின் மூலம் விருதுக்கு விண்ணப்பித்திடும் வகையிலும் படிவம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பின்வருமாறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் அறியும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி http:/tnrd.tn.gov.in/ முகவரியை தேர்வு செய்யவும். மேற்படி இணையதளத்திலுள்ள கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும். மேற்படி பயனரின் முகவரியில் அறிக்கை எண்.12-ஐ தேர்ந்ெதடுக்கவும். அதன் அடிப்படையில் அரசாணையில் உள்ள அனைத்து தேர்வு காரணிகளும் அடங்கிய உள்ளீடு செய்திடும் படிவம் இருக்கும். அப்படிவத்தினை முறையே பதிவு செய்து Save பொத்தானை அழுத்திசேமிக்க வேண்டும். இத்தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்
- சிவகங்கை கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி மன்றத்தலை வர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. 12 ஊராட்சி மன்றத்தலை வர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
மாவட்டத்தில் உபரி நிதிகளை உடனே ஊராட்சி பணிகளுக்கு கலெக்டர் ஒதுக்க வேண்டும். பஞ்சா யத்து ராஜ் சட்டம் 1994-ன்படி சிவகங்கை மாவட் டத்தில் கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி செயலாளர் பணி நியமனம் செய்ய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்க நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டும்.
ஜல்ஜீவன் திட்டம் தொடர்பாக அந்தந்த கிராம ஊராட்சிகளில் ஒப்பந்த புள்ளிகள் கோராமல் ஊராட்சி ஒன்றியங்களில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்ப டுகிறது. இதனால் கிராம ஊராட்சியின் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட தீர்மா னங்களை முதல் -அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப் பட்டது.
- 24 மாவட்டங்களில் 25 மாநகராட்சிகள் உள்ளன.
- சென்னை மாநகரட்சியும் விரிவு படுத்தப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தலா ஒரு மாநகராட்சி இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 24 மாவட்டங்களில் 25 மாநகராட்சிகள் உள்ளன. ஆகவே மீதம் உள்ள 14 மாவட்டங்களிலும் மாநகராட்சிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேசமயம் தற்போது உள்ள மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளது. அதன்படி சென்னை மாநகரட்சியும் விரிவு படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியானது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 66.72 லட்சம் மக்கள் தொகையையும், 426 சதுர கி.மீ. பரப்பளவையும் கொண்டதாகும்.
தற்போதுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள அடையாளம்பட்டு மற்றும் வானகரம் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்விரு கிராம ஊராட்சிகளின் பரப்பளவு சுமார் 15.77 சதுர கி.மீ. ஆகும் மற்றும் மக்கள் தொகை சுமார் 32,353 ஆகும். இவ்விணைப்பிற்கு பிறகு பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லை சுமார் 442 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் அடையும் மற்றும் மொத்த மக்கள் தொகை 67,04,455 ஆக அதிகரிக்கும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள 2 கிராம ஊராட்சிகள் இணைப்பால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன் அடிப்படை வசதிகளும் மேம்படும். இது தொடர்பாக மக்கள் தங்கள் ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.