என் மலர்
நீங்கள் தேடியது "Virat Kohli"
- நான் ஆர்சிபியில் விளையாடிய போது 2-3 வீரர்களுக்கு மட்டுமே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது.
- பெரும்பாலும் பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது.
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஒருமுறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வென்றது கிடையாது. இத்தனைக்கும் அந்த அணியில் முக்கிய வீரரான விராட் கோலி தொடர்ந்து 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஆர்சிபி கோப்பையை வெல்லாததற்கான காரணம் குறித்து அந்த அணியில் விளையாடிய முன்னாள் வீரர் சதாப் ஜகாதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் ஆர்சிபியில் விளையாடிய போது 2-3 வீரர்களுக்கு மட்டுமே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது. இந்த வியூகம் இதுவரைக்கும் பெங்களூரு அணிக்கு பலம் அளிக்கவில்லை. பெரும்பாலும் பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது. அணி என்ற அளவில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. நீங்கள் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்றால் வீரர்கள் குழுவாக விளையாட வேண்டும். இரண்டு மூன்று வீரர்களை மட்டுமே நம்பி கோப்பையை வெல்ல முடியாது.
இந்த விஷயத்தில் சென்னை அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து வீரர்களுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த சிறிய அளவிலான முயற்சி மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கிறது.
சென்னை அணியை பார்த்தால் உள்ளூர் வீரர்கள் வலிமையாக உள்ளனர். மிதமாக விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள். இந்த காம்பினேஷன் மிகவும் முக்கியம்.
என்று சதாப் ஜகாதி கூறினார்.
சதாப் ஜகாத் பெங்களூரு மற்றும் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
- புதிய கேப்டனுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடங்கும் முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய கேப்டன், ரஜத் பட்டிதாருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சிறப்பு கோரிக்கை விடுத்தார். மேலும், ரசிகர்களும் புதிய கேப்டனுக்கு தங்களது அன்பை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து பேசிய விராட் கோலி, "இவர் (ரஜத் பட்டிதார்) உங்களை நீண்ட காலம் வழிநடத்துவார். அவருக்கு அன்பை கொடுங்கள், அவர் மிகத் திறமையானவர். அவர் பிரான்சைஸ்-க்கு நன்மை செய்து. ஐ.பி.எல். தொடரில் அணியை முன்னோக்கி அழைத்து செல்வார். நல்ல தலைவராக உருவெடுப்பதற்கு அவரிடம் எல்லா திறமையும் உள்ளது," என்று தெரிவித்தார்.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாப் டூ பிளெசிஸ்-க்கு மாற்றாக ஆர்.சி.பி.-யின் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதார் 2021-ம் ஆண்டு முதல் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார்.
- அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆர்சிபி அணி வீரர்களுடன் இணைந்து விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ளதால், அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு, ஆர்சிபி அணி வீரர்களுடன் இணைந்து விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பயிற்சியின்போது விராட் கோலி ஜாலியாக நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நான் பங்கேற்காமல் போகலாம்.
- முன்பு நடந்தவற்றை நினைத்து மன நிம்மதியுடன் இருக்கிறேன்.
இந்திய டெஸ்ட் அணி ஜூன் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்தது.
விராட் கோலி நிச்சயமாக அந்த தொடரில் பங்கேற்பார் எனவும், 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் கோலி நிச்சயமாக ஆடுவார் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் இன்னொரு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் நான் பங்கேற்காமல் போகலாம் என்று விராட் கோலி தனது ஓய்வு பற்றி பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பதட்டம் அடைய வேண்டாம். நான் ஒன்றும் ஓய்வு அறிவிக்கப் போவதில்லை. இப்போதைக்கு எல்லாம் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நான் பங்கேற்காமல் போகலாம். எனவே முன்பு நடந்தவற்றை நினைத்து மன நிம்மதியுடன் இருக்கிறேன்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நான் என்ன செய்வேன் என எனக்கே தெரியவில்லை. சக வீரர் ஒருவரிடம் இதே கேள்வியை கேட்டேன் அவரும் இதே பதிலைத்தான் கொடுத்தார். ஒருவேளை அதிக அளவில் பயணம் செய்வேன்.
இவ்வாறு கோலி கூறினார்.
- 45 பாலுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவாதான் அவர் ஆட்டத்த பாக்கணும்.
- கண்ண விரிச்சுக்கிட்டு சந்திரமுகி படத்துல ஜோதிகா வந்து 'ஒதலவா' அப்படின்னு சொல்ற மாதிரி. நான் பேட் செய்ய உள்ள போறேன்.
சிட்னி:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இந்த போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அபாரமாக ஆடிஅணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் புதுவரவாக இணைந்துள்ளார் மற்றொரு இந்திய வீரரான அஸ்வின். சந்திரமுகி படத்தில் வரும் பிரபலமான வசனத்தை எடுத்துக்காட்டாக சொல்லி கோலியின் இன்னிங்ஸை அஸ்வின் புகழ்ந்துள்ளார். "விராட் கோலி. அவருக்குள்ள என்ன பூந்துடுச்சுன்னே தெரியல.
ஏதோ பூந்துடுச்சு சத்தியமா. அதுல ஒண்ணும் சந்தேகமே கிடையாது. இந்த மாதிரிலாம் ஷார்ட்ஸ் ஆடி. ஷார்ட்ஸ விடுங்க. 45 பாலுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவாதான் அவர் ஆட்டத்த பாக்கணும். கண்ண விரிச்சுக்கிட்டு சந்திரமுகி படத்துல ஜோதிகா வந்து 'ஒதலவா' அப்படின்னு சொல்ற மாதிரி. நான் பேட் செய்ய உள்ள போறேன்.
அப்போ ஒரு பால்ல ரெண்டு ரன்னு தேவை. அப்படி கண்ண வச்சுக்கிட்டு அவர் பேசினாரு. 'இங்க அடி. அங்க அடின்னு'. என்னால என்ன முடியுமோ அத நான் பண்றேன். அப்படின்னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு அந்த பந்த ஆடினேன்" என அஸ்வின் தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் வீடியோவாக அவர் பதிவு செய்துள்ளார். இதை அவரது குட்டி ஸ்டோரியில் ஒன்றாக அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
- பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (849 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.
- இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (828 புள்ளி) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்துக்கு இறங்கினார்.
துபாய்:
20 ஓவர் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (849 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 92 ரன்கள் குவித்த நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே (831 புள்ளி) 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (828 புள்ளி) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்துக்கு இறங்கினார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (799 புள்ளி) 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் (762 புள்ளி) 5-வது இடத்திலும் தொடருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்கள் எடுத்த இந்திய வீரர் விராட்கோலி 5 இடங்கள் எகிறி 9-வது இடத்தை பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டை (699 புள்ளி) பின்னுக்கு தள்ளி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் (702 புள்ளி) மீண்டும் முதலிடம் அரியணையில் ஏறியுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் (647 புள்ளி) இரு இடம் அதிகரித்து 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (261 புள்ளி) முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி (247 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா (189 புள்ளி) 3 இடம் உயர்ந்து 3-வது இடத்தை தனதாக்கினார்.
- 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம்.
- டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி விளையாடிய அதிரடியான ஆட்டம் மறக்க இயலாத ஒன்றாகும்.
அவர் 53 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 82 ரன் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.அவரது இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானதாகும்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் ஷாட்கள் எல்லாம் அபாரமாக இருந்தது. வேகப்பந்து வீரர் ஹாரிஸ் ரவுப் வீசிய ஆட்டத்தின் 19-வது ஓவரின் 5-வது பந்தில் அவர் அடித்த சிக்சர் மிகவும் அற்புதமாக இருந்தது.
காலை பின் பக்கமாக (பேக்புட்) கொண்டு சென்று நேராக சிக்சர் அடித்தார்.
விராட் கோலியின் இந்த சிக்சரை முன்னாள் கேப்டன் கபில்தேவ் வியந்துள்ளார். அவர் 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இலங்கை வீரர் குலசேகராவின் பந்தில் டோனி அடித்த சிக்சரோடு கோலியின் சிக்சரை ஒப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கபில்தேவ்
மெதுவான பந்தில் நேராக சிக்சர் அடிப்பது மிகவும் கடினமானது. 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம். இந்த சிக்சரை ஆயிரம் முறை பார்க்கலாம்.
டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அந்த சூழ்நிலையில் அணி வெல்ல யாராவது உதவினால் அது விராட் கோலி தான் என்று நாங்கள் விவாதித்தோம். அது போல அவர் அணியை வெற்றி பெற வைத்தார்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு உலகக்கோப்பையை முதல் முறையாக பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். அவர் தலைமையிலான அணி 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிடைத்தது. டோனி தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையும் கிடைத்து இருந்தது.
இந்திய அணி இதுவரை 3 உலகக்கோப்பையை (1983, 2011-ஒரு நாள் போட்டி, 2007-இருபது ஓவர்) கைப்பற்றி உள்ளது.
- நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி இரண்டு போட்டியில் மொத்தம் 144 ரன்கள் அடித்திருக்கிறார்.
- விராட் கோலி இன்னும் 11 ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
சிட்னி :
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன்கள் விளாசினார். தொடர்ந்து இரண்டு அரைசதம் மற்றும் ஒரு முறை கூட ஆட்டம் இழக்காமல் விராட் கோலி பட்டையை கிளப்பி வருகிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி இரண்டு போட்டியில் மொத்தம் 144 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனையை படைத்திருக்கிறார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் விராட் கோலி 23 போட்டிகளில் விளையாடி தற்போது 989 ரன்கள் விளாசி இருக்கிறார்.
இதன் மூலம் இந்த பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். விராட் கோலி இன்னும் 11 ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும் ஒட்டு மொத்தமாக டி20 உலகக்கோப்பையில் ஆயிரம் ரன்கள் எடுத்த 2 வீரர் என்ற சாதனையையும் அவர் படைப்பார். முதல் இடத்தில் இலங்கை வீரர் ஜெயவர்தனே உள்ளார். இன்னும் 27 ரன்கள் கூடுதலாக அடித்தால் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்து விடுவார்.
இந்த பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான ரோகித் சர்மா 904 ரன்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பை முடிவில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் டாப் 2 இடத்தை பிடிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று டி20 உலகக்கோப்பையில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் பட்டியலில் விராட் கோலி 89.9 சராசரியை வைத்து முதலிடத்தில் இருக்கிறார்.
இரண்டாவது இடத்தில் 44.6 சராசரியுடன் பீட்டர்சனும், மூன்றாவது இடத்தில் 40.6 சராசரி உடன் டுமினியும், நான்காவது இடத்தில் 39.1 சராசரி உடன் ஜெயவர்த்தனைவும் , ரோகித் சர்மா 37.7 சராசரியுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக 3 முக்கிய விக்கெட்டுகளை ராசா கைப்பற்றினார்.
- ஜிம்பாப்வேயின் கடைசி 4 வெற்றிகளில் 3 ஆட்டநாயகன் விருதுகளை ராசா தட்டிச் சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் பாகிஸ்தானை கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாறு படைத்தது.
இந்த வெற்றியால் 2 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்ற ஜிம்பாப்வே புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் நாக்-அவுட் செல்லும் வாய்ப்பையும் குறைத்துக் கொண்டுள்ளது.
ஜிம்பாப்வேயின் இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 9 ரன்கள் எடுத்தாலும் பந்து வீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். உலகக்கோப்பை போட்டியில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கலங்கி விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியாக பேசினார். மேலும் இவர் பாகிஸ்தானில் பிறந்து இன்று அந்நாட்டுக்கு எதிராகவே சம்பவம் செய்து மிரட்டியுள்ளார்.
ஜிம்பாப்வேயின் கடைசி 4 வெற்றிகளில் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இந்த வருடம் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 7 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
1. சிக்கந்தர் ராசா : 7* (2022)
2. விராட் கோலி : 6 (2016)
3. சூர்யகுமார் யாதவ் : 5 (2022)*
4. முகமது ரிஸ்வான் : 5 (2021)
5. ஷேன் வாட்சன் : 5 (2012)
- இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது.
- கோலி அந்த பந்தை சிக்சர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது.
பெர்த்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப்பில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணி மட்டுமே 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய வீரராக விராட் கோலி செயல்பட்டார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது.
இந்நிலையில் கோலியின் இன்னிங்ஸ் குறித்து பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. கோலி அந்த பந்தை சிக்சர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாதகமாக சென்று, கடைசி நேரத்தில் இந்தியாவின் பக்கம் வெற்றி வருவதை அடிக்கடி நம்மால் காண முடியாது.
விராட் கோலி யாருக்காகவும் அவரை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியமே கிடையாது. அவரை போன்ற வீரர்கள் அழுத்தமான சூழல்களில் தான் பலம் பெறுவார்கள். ஏனென்றால் அழுத்தங்களும், கடினமான சூழல்களும் தான் ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்கும். கோலியை இப்படி பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என ரோஜர் பின்னி கூறினார்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி பெர்த் உள்ள மைதானத்தில் நாளை ( அக்டோபர் 30 ) மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதிலும் விராட் கோலியின் இன்னிங்ஸ் தான் இந்தியாவுக்கு பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தனியுரிமை மீறப்பட்ட இந்த விசயத்தை என்னால் ஒருபோம் ஏற்றுக் கொள்ள முடியாது.
- விராட் கோலியின் அறையில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை அந்த ஊழியர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி, ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ஓட்டல் ஊழியர் தன்னுடைய அறையை படம் பிடித்து வெளியிட்ட வீடியோ என பதிவிட்டு, தனது அறையில் தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
ரசிகர்கள் அவர்களுடைய பிடித்தமான வீரர்களை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் எப்போதுமே அதை பாராட்டக் கூறியவன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ பயங்கரமானது மற்றும் இது எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் உணர வைத்துள்ளது.
தன்னுடைய சொந்த அறையில் கூட தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டால், தனிப்பட்ட இடத்தை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்?. தனியுரிமை மீறப்பட்ட இந்த விசயத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தயது செய்து மக்கள் தனியுரிமைக்கு மரியாதை கொடுங்கள். அவர்களை பொழுது போக்கிற்கான பொருளாக கருத வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் வார்னர் கூறுகையில் '' இந்த விஷயம் மிகவும் கேலிக்கூத்தானது. முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது'' என தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் அறையில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை அந்த ஊழியர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
- இன்றைய போட்டியில் அதிரடியாக ஆடிய விராட் கோலி 64 ரன்கள் குவித்தார்
- ஜெயவர்தனே சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை (965) பின்னுக்கு தள்ளி கோலி 2-வது இடத்துக்கு (989 ரன்கள்) முன்னேறி இருந்தார். இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 11 ரன்களை கடந்த போது டி20 உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களை அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை படைத்தார். அப்போது இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, ஜெயவர்தனே சாதனையை முறியடித்து டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1065 ரன்கள் அடித்துள்ளார். 2-வது இடத்தில் ஜெயவர்தனே (1016 ரன்கள்- 31 போட்டிகள்) உள்ளார்.